search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது
    X

    வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது

    • ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகின்றன. ஒட்டன் சத்திரம், மேச்சேரி, தாளவாடி, ஊட்டி, மேட்டு ப்பாளையம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் 20 டன் காய்கறிகள் விற்பனை க்கு வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    கேரட்டை பொருத்த வரை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் 70 ரூபாய் வரை விற்ற கத்திரிக்காய் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பீன்ஸ்-80, பீட்ரூட்-50-70, சவ்சவ்-30, குடைமிளகா-60, கோவக்காய்-40, கருணைக்கிழங்கு-40, தக்காளி-40, பீர்க்கங்காய்-60, முள்ளங்கி, பாவக்காய், புடலங்காய், வெண்டைக்காய்-40, முருங்கைக்காய் -60, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-40, இஞ்சி-70, முட்டைகோஸ்-25, கருப்பு அவரைக்காய்-90, பட்டை அவரைக்காய்-60, காளிப்ளவர்-50.

    இன்னும் சில நாட்கள் காய்கறிகள் விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு சரியாகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×