search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The price of vegetables"

    • ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று வெறும் 75 டன்கள் மட்டுமே காய்கறிகள் வரத்தாகி இருந்தது.
    • பச்சை மிளகாய் கிலோ ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ 100-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தாளவாடி, சேலம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 100 முதல் 120 டன் காய்கறிகள் வரத்தாகி வந்தது.

    இங்கு மொத்த விலை மற்றும் சில்லரை விலை விற்பனையில் காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து விட்டது.

    இதன் எதிரொலியாக காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது. ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று வெறும் 75 டன்கள் மட்டுமே காய்கறிகள் வரத்தாகி இருந்தது. வரத்து குறைவு எதிரொலியாகவும், தற்போது தொடர் முகூர்த்தம் வருவதாலும் காய்கறிகள் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து விட்டது.

    கடந்த வாரத்தை விட இன்று சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. உதாரணமாக தக்காளி விலை இன்று ஒரு கிலோ ஒரு 35-க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோவுக்கு ரூ.15 உயர்ந்து விட்டது. பொதுவாக மார்க்கெட்டிற்கு 7000 பெட்டி தக்காளிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.100-க்கு விற்பனையானது. இதுபோல் கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 70- க்கு விற்ற நிலையில் இன்று ரூ.130-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 25-க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 40-க்கு விற்பனையானது.

    இதேப்போல் பச்சை பட்டாணி கிலோ ரூ.250-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த வாரம் பச்சை மிளகாய் கிலோ ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ 100-க்கு விற்பனையானது.

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:

    சுரக்காய்-15, இஞ்சி-220, கேரட்-70, பீட்ரூட்-50, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, காலிபிளவர்-35, மாங்காய்-20, சின்ன வெங்காயம்-70-80, பெரிய வெங்காயம்-30, கத்திரிக்காய்-60, புடலங்காய்-30, பீர்க்க ங்காய்-60, முள்ளங்கி-40, பாவக்காய்-60, கருப்பு அவரை-110, பட்ட அவரை80, குடை மிளகாய்-70, கொத்தவரங்காய்-30.

    • ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகின்றன. ஒட்டன் சத்திரம், மேச்சேரி, தாளவாடி, ஊட்டி, மேட்டு ப்பாளையம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் 20 டன் காய்கறிகள் விற்பனை க்கு வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    கேரட்டை பொருத்த வரை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் 70 ரூபாய் வரை விற்ற கத்திரிக்காய் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பீன்ஸ்-80, பீட்ரூட்-50-70, சவ்சவ்-30, குடைமிளகா-60, கோவக்காய்-40, கருணைக்கிழங்கு-40, தக்காளி-40, பீர்க்கங்காய்-60, முள்ளங்கி, பாவக்காய், புடலங்காய், வெண்டைக்காய்-40, முருங்கைக்காய் -60, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-40, இஞ்சி-70, முட்டைகோஸ்-25, கருப்பு அவரைக்காய்-90, பட்டை அவரைக்காய்-60, காளிப்ளவர்-50.

    இன்னும் சில நாட்கள் காய்கறிகள் விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு சரியாகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×