search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode VUC market"

    • வ.உ.சி. மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
    • 650 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மே ற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஆந்திரா, பெங்களூர் போன்ற பகுதி யில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் வ.உ.சி. மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இன்று மார்க்கெட்டிற்கு 650 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவர ப்பட்டிருந்தது.

    கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விலை ஏறிக்கொண்டே வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனையானது.

    தற்போது வரத்து குறைந்ததன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் 90 வரை விற்ப னையாகி வருகிறது. பெரிய வெங்காயத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகி வந்த பெரிய வெங்காயத்தின் விலை இன்று ரூ.70 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    இதேபோல் கருப்பு அவரை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இன்று ஒரு கிலோ கருப்பு அவரை ரூ.100-க்கு விற்பனை யாகி வருகிறது.

    இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட மற்ற காய்கறி களின் விலை கிலோவில் வருமாறு:

    கத்திரிக்காய்-60, பாவைக்காய்-60, புடலங்காய்-40, முள்ளங்கி-35, முருங்கைக்காய்-70, பீர்க்கங்காய்-50, சுரக்காய்-30, பட்டவரை-70, தக்காளி-30-35, காலிபிளவர்-30, புதிய இஞ்சி-110, பழைய இஞ்சி-280, குடைமிளகாய்-60, கேரட்-45, பீட்ரூட்-50, பீன்ஸ்-60.

    • இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது.
    • தக்காளி சில்லரை விற்பனையில் ரூ. 40-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

    வழக்கமாக சாதாரண நாட்களில் 7000 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனையானது.

    ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது.

    ஈரோட்டில் 600 முதல் 800 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தக்காளி விலை உயர்வால் பொது மக்கள் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி யதால் விலையும் சரிய தொடங்கியது. ஒரு கிலோ 160-க்கு விற்கப்பட்ட தக்காளி படிப்படியாக குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது.

    கடந்த ஒரு வாரமாக மேலும் விலை குறைந்து ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகி வந்தது.

    இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 5000 தக்காளி தக்காளி பெட்டி கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது. இன்று ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ. 40-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.50-க்கு விற்பனையானது.

    இனி வரக்கூடிய நாட்களில் வரத்து மேலும் அதிகரித்து தக்காளி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று வெறும் 75 டன்கள் மட்டுமே காய்கறிகள் வரத்தாகி இருந்தது.
    • பச்சை மிளகாய் கிலோ ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ 100-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தாளவாடி, சேலம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 100 முதல் 120 டன் காய்கறிகள் வரத்தாகி வந்தது.

    இங்கு மொத்த விலை மற்றும் சில்லரை விலை விற்பனையில் காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து விட்டது.

    இதன் எதிரொலியாக காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது. ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று வெறும் 75 டன்கள் மட்டுமே காய்கறிகள் வரத்தாகி இருந்தது. வரத்து குறைவு எதிரொலியாகவும், தற்போது தொடர் முகூர்த்தம் வருவதாலும் காய்கறிகள் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து விட்டது.

    கடந்த வாரத்தை விட இன்று சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. உதாரணமாக தக்காளி விலை இன்று ஒரு கிலோ ஒரு 35-க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோவுக்கு ரூ.15 உயர்ந்து விட்டது. பொதுவாக மார்க்கெட்டிற்கு 7000 பெட்டி தக்காளிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.100-க்கு விற்பனையானது. இதுபோல் கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 70- க்கு விற்ற நிலையில் இன்று ரூ.130-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 25-க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 40-க்கு விற்பனையானது.

    இதேப்போல் பச்சை பட்டாணி கிலோ ரூ.250-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த வாரம் பச்சை மிளகாய் கிலோ ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ 100-க்கு விற்பனையானது.

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:

    சுரக்காய்-15, இஞ்சி-220, கேரட்-70, பீட்ரூட்-50, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, காலிபிளவர்-35, மாங்காய்-20, சின்ன வெங்காயம்-70-80, பெரிய வெங்காயம்-30, கத்திரிக்காய்-60, புடலங்காய்-30, பீர்க்க ங்காய்-60, முள்ளங்கி-40, பாவக்காய்-60, கருப்பு அவரை-110, பட்ட அவரை80, குடை மிளகாய்-70, கொத்தவரங்காய்-30.

    ×