search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலைகளில்  இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
    X

    சிலைகளில் இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

    • நீர் நிலைகளை பாது காக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
    • சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம்- எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ஈரோட்டில் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளை பாது காக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.

    களிமண்ணால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாது காப்பான முறையில் கரைக்க வேண்டும்.

    சிலைகளின் ஆபரண ங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படு–த்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்த ப்படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மா–க்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்- பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம்எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ண ப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

    சுற்று ச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூ ச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்ப டுத்த ப்படவே ண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தி னால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதி முறை களின்படி கரைக்க வேண்டும்.

    விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்கா தவாறு கொண்டா டும்படி பொது மக்கள் கேட்டு க்கொள்ள ப்படுகிறா ர்கள். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    Next Story
    ×