search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் திண்டாட்டம்"

    • கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர்.
    • கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் இல்லத்தரசிகள் அனைவரும் என்ன செய்வதென ெதரியாமல் திண்டாடி வந்தனர். இதனையடுத்து தக்காளி விலை உயர்வை தொடர்ந்து பழங்கள், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர். தக்காளி விலையை கட்டுப்படுத்த கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது. கடலூரில் மாவட்டத்தில் இன்று காய்கறிகளின் விலைபட்டியல் வருமாறு:-

    மிளகாய் ரூ. 80, வெங்காயம் ரூ. 24, தக்காளி ரூ. 88, உருளை ரூ.20, பல்லாரி ரூ.26, சின்ன வெங்காயம் ரூ. 90, கேரட் ரூ. 46, பீன்ஸ் ரூ. 95, கோஸ் ரூ.20, சவுசவ் ரூ.26, பீட்ரூட் ரூ. 35, இஞ்சி ரூ.255, முள்ளங்கி ரூ. 22, கத்தரிக்காய் ரூ.50, வெண்டை ரூ.30, கோஸ் ரூ.20, குடைமிளகாய் ரூ.65, பஜ்ஜிமிளகாய் ரூ.60, காளிபிளவர் ரூ. 30, நூக்கோல் ரூ. 80, அவரைக்காய் ரூ.40, மாங்காய் ரூ.22, கருணைகிழங்கு ரூ.50, முருங்கை ரூ. 35, சேம்பு ரூ. 45, பிடிகருணை ரூ. 40, பாகற்காய் ரூ. 50, புடலை ரூ. 20, சுரக்காய் ரூ. 20, சுவிட்கான் ரூ. 22.

    ×