search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipality Park"

    • தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது
    • செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர்கள் நிறைந்து மண்டிக்கிடக்கிறது. இதனால் பூங்காவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும், அவைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×