search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Constable"

    • கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது
    • கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்

    கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்திய நிலையில் தனது போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை ராஜினாமா செய்த உதய் கிருஷ்ணா ரெட்டி இந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 780வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    சாதாரண அரசுப் பள்ளியில் தெலுங்கு வழியில் படித்த உதய் கிருஷ்ணா ரெட்டிக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018- வரையில் காவல்துறையில் கான்ஸ்டபிளாக அவர் பணியாற்றி வந்தார். கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

    இதனால் விரக்தி அடைந்த உதய் கிருஷ்ணா ரெட்டி அன்றைய தினமே போலீஸ் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய நிலையில், தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

    தனது இந்த சாதனை குறித்து பேசிய உதய் கிருஷ்ணன் ரெட்டி, "என்னை அவமானப்படுத்திய சர்கிள் இன்ஸ்பெக்டர் தனது தவறை ஒருநாள் உணர்வார். உயர் அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை களைய நான் முயற்சிப்பேன்

    780வது இடம் பெற்றுள்ள உதய் கிருஷ்ணா ரெட்டி, இந்திய வருவாய் சேவைக்கு நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்திய நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தேர்வு எழுதப்போவதாக உதய் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.

    • 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு 1 மாதம் சிறை தண்டனை
    • முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும்

    மதுபோதையில், பெண் காவலரிடம் 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் 1 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

    துர்கா பூஜையை ஒட்டி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, லால் டிக்ரே பகுதிக்கு காவலர்கள் சென்று கொண்டிருந்தனர். வேபி ஜங்ஷன் வழியாக வந்த காவல்துறையினருக்கு, அப்பகுதியில் ஒருவர் பிரச்சனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றனர். அந்த இடத்தில பிரச்சினை செய்த ஜனக் ராம் என்ற நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    அந்த நேரத்தில் ஜனக் ராம், ஒரு பெண் காவலரிடம் 'ஹாய், அன்பே, அபராதம் விதிக்க வந்தீர்களா?' என கேட்டுள்ளார். இது தொடர்பாக மாயாபந்தர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

    கடந்த வருடம், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஜனக் ராமிற்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஜனக் ராம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

    அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், "முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும். குறிப்பாக , குடித்திருக்கும் ஒரு ஆண், முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது இன்னமும் தீவிரமான குற்றம் என கருத்து தெரிவித்தது.

    பின்னர், குற்றவாளியின் 3 மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 311 பேர் தேர்வாகினர்.
    • தொடர்ந்து அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நாளை (7-ந் தேதி), நாளை மறுநாள் (8-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

    சேலம்:

    போலீஸ் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 311 பேர் தேர்வாகினர்.

    உடல் தகுதி தேர்வு

    தொடர்ந்து அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நாளை (7-ந் தேதி), நாளை மறுநாள் (8-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி அவர்களுக்கு அழைப்பு கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

    இந்த உடல் தகுதி தேர்வில் 2 நாட்களும் சேர்த்து மொத்தம் 311 பெண்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், வட்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆலோசனை

    இந்த நிலையில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் உடல் தகுதி தேர்வுக்கு வருபவர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உத்தர பிரதேசத்தில் குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார். #UPEncounter #Constablekilled
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா நகரில் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட ஷிவாவ்தார் என்பவரை பிடிப்பதற்காக போலீசார் நேற்று இரவு சென்றனர். ஷிவாவ்தார் இருந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார்,  அவரை சரண் அடையும்படி கூறினர். ஆனால்,  ஷிவாவ்தார், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதனையடுத்து போலீசாரும் பதில்  தாக்குதல் நடத்தினர்.

    சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் போலீஸ் தரப்பில் கான்ஸ்டபிள் ஹர்ஷ் சவுத்ரி (26)உயிரிழந்தார். போலீசாரின் பதில் தாக்குதலில் ஷிவாவ்தார் பலத்த காயம் அடைந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன், சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

    இந்த என்கவுண்டரில் உயிரிழந்த கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த கான்ஸ்டபிளின் மனைவிக்கு ரூ.40 லட்சம் மற்றும் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 3000க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 போலீசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPEncounter  #Constablekilled
    கோவை அருகே போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகர போலீசில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன்(வயது 55). இவர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த இவர் திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய ஏட்டு விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரங்கநாதன். இவர் பணியின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து போலீஸ் ஏட்டு ரங்கநாதனை கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    கருங்கல் அருகே நள்ளிரவில் போலீஸ் ஏட்டின் காருக்கு யாரோ தீ வைத்து விட்டனர். இதில் கார் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே மேற்கு மாத்திரவிளையை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று இரவு அவர் தனது காரை அந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். மேலும் பிளாஸ்டிக் கவரால் அந்த காரை மூடி இருந்தனர். நள்ளிரவில் திடீரென்று அந்த கார் தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் போலீஸ் ஏட்டு வாசு தேவனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது கார் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. யாரோ அந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    உடனே பொதுமக்கள் உதவியுடன் காரில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இதில் கார் சேதம் அடைந்தது. இது பற்றி வாசுதேவனின் மகன் தீபன்ரஞ்சன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் எரிந்தது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த 3 பயங்கரவாதிகளை அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் சுட்டுக்கொன்றனர். #policeconstableMohdSalim #Murder
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் முத்தலாமா கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான முகமது சலீம் ஷா, சமீபத்தில் விடுமுறையில் வீட்டுக்கு சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது சலீம் ஷா வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அவரை கடத்தி சென்றனர்.

    அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ரெட்வாணி என்கிற இடத்தில் முகமது சலீம் ஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, இந்த நாசவேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் மாநில போலீசாரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் ரெட்வாணி பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    அதனை தொடர்ந்து போலீசாரும், ராணுவ வீரர்களும் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

    இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    அவர்களுடைய உடலை போலீசார் கைப்பற்றினர். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டுக்காரர் என்பதும், இவர்கள் 3 பேரும் தான் போலீஸ்காரர் முகமது சலீம் ஷாவை கடத்தி கொலை செய்தனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவர்கள் 3 பேரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்பில் இருந்ததாகவும், காஷ்மீரில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கதுவா மாவட்டம் கிரான் நகரில் போபியா என்கிற இடத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்ம நபர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தார். இதனை பார்த்த எல்லை பாதுகாப்புபடை வீரர்கள், அந்த நபரை தங்களிடம் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர்.

    ஆனால் அதனை பொருட்படுத்தாத அந்த மர்ம நபர் தொடர்ந்து முன்னேறினார். இதையடுத்து வேறுவழியின்றி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுட்டுவீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.   #policeconstableMohdSalim #Murder #tamilnews
    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ராஜ்கோட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார். குஜராத் ஜாம்நகரில் இவருடைய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஜடேஜாவின் மனைவி ரீவா நேற்று முன்தினம் தனது தாயார் பிரபுல்லபாவுடன் ஜாம் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார், அங்கு வேகமாக வந்த போலீஸ்காரர் சஞ்சய் அகிர் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதிவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், ரீவாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரது கூந்தலை பிடித்து இழுத்து, தலையை கார் கண்ணாடி மீது பலமாக மோத வைத்து 3 முறை கன்னத்திலும் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உடன் இருந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில முதல்-மந்திரி அலுவலகம் உள்ளூர் எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங்கை தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறிப்பு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டன.

    இதையடுத்து, ஜாம்நகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சஞ்சய் அகிரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டது.  #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டு அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் தர்மேந்திர சிங். அவர் கடந்த நான்கு மாதமாக விடுப்பு எடுக்காமலும், மனைவியை நேரில் சென்று பார்க்காமலும் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி, 4 மாதங்களுக்கு ஒருமுறை கூட மனைவியை பார்க்க வரவில்லை என்றால், எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுப்பு கேட்டு தனது மேலதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் அளித்துள்ளார். அதில், 10 நாட்கள் விடுப்பு பெற்று வீட்டிற்கு செல்லவில்லை என்றால், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள். ஆதலால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

    அவரது நிலைமையையும், விடுப்பிற்கான காரணத்தின் தீவிரத்தையும் உணர்ந்த மேலதிகாரி, உடனடியான அனுமதி வழங்கினார். இந்நிலையில் போலீஸ் கான்ஸ்டபிளின் விடுப்பு விண்ணப்பம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. #tamilnews
    ×