search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து பலி
    X

    கோவை அருகே போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து பலி

    கோவை அருகே போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகர போலீசில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன்(வயது 55). இவர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த இவர் திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×