என் மலர்
நீங்கள் தேடியது "Nagapattinam"
- 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் காட ம்பாடி மறைமலைநகரில் உள்ள பழமை வாய்ந்த கருமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. ஏழைப் பிள்ளையார் கோவிலில் இருந்து நூற்றுக்கும்மேற்ப ட்ட பெண்கள் அம்ம னுக்கு பூதட்டுகளை கையில் ஏந்தியவாறு கருமாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.பின்னர் கோவி லை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்தி க்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம்செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெ க்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் ஆகியவை சேர்த்து சிறப்பு முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், விடுப்பட்டு போன முன்களப் பணியா ளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
செப்டம்பர் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டு உள்ள அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
- தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை கடுவையாற்று பகுதியில் மீன்பிடி படகுகளுக்கான கட்டுமான தளம் அமைந்துள்ளது.
இங்கு நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான புதிய விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படகு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற மீனவர்கள் சிலர் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் படகில் பற்றிய தீயை அணைத்தனர்.
ஆனால் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகின் மேற்கூரை, படகில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்கள், ஐஸ் பெட்டி என அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
இதுகுறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், மீன்பிடி படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து படகிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கஜா புயலால் ஏற்கனவே படகுகள் சேதமான நிலையில் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.
இதற்கிடையே விடுபட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.

அதன்பின்னர் நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். #EdappadiPalaniswami #GajaCyclone

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, திருவாரூரிலும் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூரில் இருந்து புதன்கிழமை இரவு ரயில் மூலமாக சென்னை திரும்புகிறார். #EdappadiPalanisamy #GajaCyclone
நாகப்பட்டினம்:
நாகை ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்கள் இருவரும் டாக்டர்கள்.
ராமசாமி வீடு பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை பூட்டிவிட்டு சுப்பையா முதலியார் தெருவில் வாடகை வீட்டில் கடந்த 4 மாதங்களாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராமநாயக்கன் குளத்தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தமிழ்ச்செல்வி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் நகைகளை
திருடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து திருட்டு நடந்த வீட்டில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தமிழ்ச்செல்வின் வீட்டின் கதவை உடைத்து 7 பேர் உள்ளே புகுந்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து நகைகளை திருடியது தொடர்பாக வெளிப்பாளையம் காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த லூர்துசாமி மகன் எடிசன் (வயது22) மற்றும் 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீட்டில் நகைகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயத்துக்கான நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் இன்று இரவு 8 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதேசமயம், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலத்தில் வழியாக சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.
இதனால், நாகை மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல், பவானிசாகர் அணையின் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்களில் நீர் திறக்கப்பட உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கரூர், திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #FloodAlert #Nagapattinam
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பழையகூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மகள் வள்ளி (வயது17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் வள்ளி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வயிற்று வலியால் வள்ளி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி மாலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.வெங்கடேசன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதை ஏற்று மாணவியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Tamilnews
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று வீசிய வண்ணம் இருந்தது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு தொலை தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்பதை குறிப்பதாகும். இருந்தபோதிலும் நாகை மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏதும் ஏற்படவில்லை வெயில் சுட்டெரிக்கிறது. கடல் பரப்பில் காற்று அதிகமாக வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர கதியில் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கடல்களில் சுமார் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழும்பி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் இன்றும் 3-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேதனையில் இருந்து வருகின்றனர்.