search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடி ஊர்வலம்"

    • நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
    • ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவையொட்டி முன்னதாக கடந்த 10-ந் தேதி தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    கந்தூரி விழாவையொட்டி நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமானது யாகூசன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளி தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது.

    ஊர்வலத்தில் மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் என ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கொடி ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    நாகையில் இருந்து நாகூர் வரை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது கண்கவர் வான வேடிக்கையுடன் நாகூர் தர்கா, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் வருகிற 23-ந்தேதி இரவு நடக்கிறது. மறுநாள் 24-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம்
    • பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மந்தவெளி பகுதியில் உள்ள ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஹசாத் சையத் இஸ்மாயில் ஷா அவுலியாதர்காவில் பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தர்காவில் மாலை அணிவித்து பாத்தியா நடத்தினர். தொடர்ந்து பிறைகொடி ஊர்வலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,நகர செயலாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள்.சந்தனக்கூடுவிழா கமிட்டி நிர்வாகிகள் ஜான் பாஷா, அசாதுல்லா, ஜெ. எஸ். சர்தார், ஷமியுள்ளா, ஷாஜகான், முபாரக், ஹாஜி ஷரீப்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×