search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசை வீடுகள்"

    • நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்
    • பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார்

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    • ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.
    • மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் அருள்தாஸ். ஆட்டோ டிரைவர்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சேகர்.

    இவர் கும்பகோணத்தில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

    இதன் அருகே உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர் சாமிநாதன், லோடு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

    3 வீடுகளும் குடிசை வீடுகளாகும்.

    இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அருகில் இருந்து வந்த ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.

    இதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் தீ மளமள பிடித்து எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அருள்தாஸ் என்பவர் வீட்டில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை, சேகர் வீட்டில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் வீட்டு ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

    இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது.
    • அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் சாலையில், தாமரைக் குளம் பகுதியில் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.இங்கு தர்மபுரி மாவட்டம் எம். பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி சிவகாமியுடனும், அதே பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் தனது மனைவி உமாவுடனும், தனித்தனியாக தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு குமாரின் மனைவி சிவகாமி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பற்றியது. இதில் மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது. சிறிது நேரத்திலேயே இரு குடிசைகளும் முற்றிலும் தீயில் எரிந்ததால் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர். அவிநாசி வட்டாட்சியர் மோகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தீ விபத்து பகுதியில் ஆய்வு செய்து இரு குடும்பத்தினரும் மாற்றிடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

    ×