search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burned Down"

    • ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.
    • மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் அருள்தாஸ். ஆட்டோ டிரைவர்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சேகர்.

    இவர் கும்பகோணத்தில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

    இதன் அருகே உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர் சாமிநாதன், லோடு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

    3 வீடுகளும் குடிசை வீடுகளாகும்.

    இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அருகில் இருந்து வந்த ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.

    இதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் தீ மளமள பிடித்து எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அருள்தாஸ் என்பவர் வீட்டில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை, சேகர் வீட்டில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் வீட்டு ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

    இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது
    • மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேலப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 56)விவசாயி. இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன் 4 பைக்குகளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

    பின்னர் நள்ளிரவில் வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தார். பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து புகை வருவது கண்டு பிடிக்கட்டது.

    இதனையடுத்து வெளியே சென்று பார்த்த போது, வீட்டின் முன்பகுதி வழியாக செல்லும் மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது.

    இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 பைக்குகளும் தீப்பற்றி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைக்க முயற்சித்தனர். அதற்குள் 4 வண்டிகளும் எரிந்து சாம்பலாகியது.

    இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக அவளூர் போலிசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.        

    • இரவு 12 மணியளவில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவித்தனர்.
    • தீ பற்றியதில் இரண்டு இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஏவி குளத்தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ரபிக்.

    இவரது மனைவி நஸ்ரத் பீவி. இவருக்கு சொந்தமான வீடு அப்பகுதியில் உள்ளது.

    அந்த வீட்டின் கீழ்த்தளத்தை வாடகை விட்டுவிட்டு, மேல் தளத்தில் இவர் வசித்து வந்தார்.

    இவருடைய மகளும், மகனும் பயன்படுத்தும் 2 மோட்டார் சைக்கிகளை கீழ்வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி இருப்பது வழக்கம். அதேபோன்று நேற்று இரவு நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.

    திடீரென்று கீழ் வீட்டில் இருப்பவர்கள் இரவு 12 மணியளவில் வாசலில் நிறுத்தியுள்ள தங்களுடைய இரண்டு இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் கீழே வந்து வாகனத்தின் மீது தண்ணீர் விட்டு தீயை அணைத்தனர்.

    தீ பற்றியதில் இரண்டு இருசக்கர வாகன மும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

    இதுகுறித்து நசரத் பீவி பட்டுக்கோட்டை நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மமான முறையில் எரிந்த இரண்டு சக்கர வாகனங்களில் எவ்வாறு தீ பற்றியது, வேறு யாரும் திட்டமிட்டு சதி செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    ×