search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
    X

    தீ விபத்தில் சேதமான குடிசை வீடுகள்.

    3 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

    • ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.
    • மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் அருள்தாஸ். ஆட்டோ டிரைவர்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சேகர்.

    இவர் கும்பகோணத்தில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

    இதன் அருகே உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர் சாமிநாதன், லோடு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

    3 வீடுகளும் குடிசை வீடுகளாகும்.

    இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அருகில் இருந்து வந்த ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.

    இதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் தீ மளமள பிடித்து எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அருள்தாஸ் என்பவர் வீட்டில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை, சேகர் வீட்டில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் வீட்டு ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

    இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×