search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganduri Festival"

    • ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவதால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.

    தொடர்ந்து, சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்று இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது.

    கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

    நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தனக்கூடு ஊர்வலத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • ஜாம்புவானோடையில் பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • 23-ந்தேதி நள்ளிரவு சந்தன கூடு வளம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக புகழ் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 722-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று அதிகாலை இடும்பாவனம் கேசவன் குழுவினர் நாதஸ்வரம் மங்கள இசையுடன் மத ஒற்றுமை எடுத்துக்காட்டாக தொடங்கியது.

    பின்னர் மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை சிறப்பு வழிப்பாடுகள் பிராத்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்காரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.

    பின்னர் புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.

    இதில் பூக்களால் ஆன புனித கொடி சுமந்த பல்லாக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், குதிரை, ஒட்டகங்கள் பேண்டு வாத்தியகங்கள், தப்ஸ் கச்சேரி, வண்ணத்துப்பூச்சி கலைஞர்களின் நடனங்கள் என ஊர்வலமாக வந்தது.

    ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் கோரையாறு பாலம் சென்று திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது.

    அங்கு ஆட்டோ சங்கம், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் நெடுவேங்கும் வியாபாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பழைய பேரூந்து நிலையத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறு பாலம், ஜாம்புவானோடை சென்று தர்காவை அடைந்தது.

    பின்னர் தர்கா அருகில் உள்ள அம்மா தர்கா, ஆற்றாங்கரை பாவா தர்கா சென்று மீண்டும் தர்காவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.

    இதையடுத்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் துவங்கியது.

    சிறப்பு துஆ ஓதி அதனைத்தொடர்ந்து சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு 9மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து கந்தூரி விழா துவங்கியது. இதில் ஆயிரக்காணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்துக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகநாதன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பலத்த பாதுக்காப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.

    கந்தூரி விழாவின் முக்கிய விழாவான வரும் 23-ந்தேதி நள்ளிரவு சந்தன கூடு வளம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரும் 27-ந்தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.

    21-ந் தேதி காலை 8.15 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படும்.

    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா ஆகிய புகழ் பெற்ற மூன்று வழிபாட்டுத் தலங்களும் மும்ம தத்திற்கான அடையா ளமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

    இந்த வழிபாட்டு தலங்களின் விழாக்களின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவு பக்தர்கள் கலந்து கொள்வர். இதற்காக சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் நாகூர் தர்கா ( சின்ன ஆண்டகை ) கந்தூரி விழாவானது நாளை தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சி 21ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

    அதாவது 21-ந் தேதி காலை 8.15 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம் ,கடலூர், சிதம்பரம் ,சீர்காழி ,மயிலாடுதுறை, திருவாரூர் , நாகப்பட்டினம் வழியாக நாகூருக்கு மாலை 3.30 மணிக்கு வந்தடைகிறது. அதே ரெயில் காரைக்காலுக்கு மாலை 3.50 மணிக்கு சென்று அடைகிறது.இந்த ரெயிலானது மறு மார்க்கமாக மீண்டும் 22-ந் தேதி காலை 6 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு 6.20 மணிக்கு நாகூர் வந்து மதியம் 1.30 மணி அளவில் தாம்பரம் சென்று அடைகிறது.

    மேற்கண்ட தகவலை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    • தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
    • யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார். தர்கா குளத்தை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    அப்போது தர்காவை சுற்றியுள்ள சாலைகளில் பேவர் பிளாக் அமைப்பது மற்றும் யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    ஆய்வின் போது தர்கா நிர்வாகிகள், நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×