search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boat fire"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 படகுகள் முழுமையாக எரிந்தது. 20 படகுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன.
    • படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

    40 படகுகள் முழுமையாக எரிந்தது. 20 படகுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன.

    இந்த தீபத்து காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 மீனவ குடும்பத்தினர். இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    இந்நிலையில் தீ விபத்துக்கு காரணமான யூடியூபர் நானி என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நானி என்பவருக்கு சொந்தமாக 2 மீன்பிடி படகுகள் உள்ளன. இவர் லோக்கல் பாய் நானி என்ற பெயரில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவதுடன் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

    கடலில் மீன் பிடித்தல் உட்பட பல குறும்படங்களை தயாரித்து வெளியிட்டு பிரபலமாக உள்ளார்.

    இந்நிலையில் நானியின் மனைவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வளைகாப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து நானி துறைமுகத்தில் உள்ள அவரது படகில் வைத்து நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார்.

    அப்போது படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த மோதலில் ஒரு படகில் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கும் தீ வேகமாக பரவி எரிந்து நாசமாகி உள்ளன.

    தீ விபத்து ஏற்பட்டதும் யூடியூபர் நானி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். விபத்தில் படகுகள் கொழுந்து விட்டு எரிந்த நேரத்தில் அங்கே இருந்த நானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மத்தியில் இருந்தபடி வீடியோ பதிவு செய்தார்.

    மேலும் தங்கள் படகுகள் எரிவதை பார்த்து கூக்கிரலிட்டு கண்ணீர் விட்டு அழுத மீனவர்களையும் படம்பிடித்தார். இந்த வீடியோவை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ வைரலாக பரவியது. விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நாகையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை கடுவையாற்று பகுதியில் மீன்பிடி படகுகளுக்கான கட்டுமான தளம் அமைந்துள்ளது.

    இங்கு நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான புதிய விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படகு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அப்போது அந்த வழியாக சென்ற மீனவர்கள் சிலர் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் படகில் பற்றிய தீயை அணைத்தனர்.

    ஆனால் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகின் மேற்கூரை, படகில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்கள், ஐஸ் பெட்டி என அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், மீன்பிடி படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து படகிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கஜா புயலால் ஏற்கனவே படகுகள் சேதமான நிலையில் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×