என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூடியூபர் கைது"

    • கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 பிரபல யூடியூபர்களுக்கு மாநில சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது.
    • கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும், டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருந்ததும், அதன்மூலமாக பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்ததும், அந்த நாட்டுக்கு உளவு வேலை பார்த்ததும் தெரியவந்தது. அவரைத்தொடர்ந்து பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே யூடியூபர் ஜோதி, கேரள அரசுக்கு பிரசாரம் செய்த பரபரப்பு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில அரசு அளித்த பதிலில், 'கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 பிரபல யூடியூபர்களுக்கு மாநில சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவை கேரள சுற்றுலாத்துறை ஏற்றுக்கொண்டது.

    அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டனர். அதில் ஜோதி மல்கோத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த செய்தி கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் கூறியதாவது:-

    கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை அது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பலர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக ஜோதி மல்ஹோத்ராவும் அழைக்கப்பட்டார். அனைத்தும் வெளிப்படையாகவும், நல்ல நோக்கத்துடனும் செய்யப்பட்டன.

    கேரளாவில் உள்ள இடது முன்னணி அரசு உளவு பார்க்க உதவும் அரசு அல்ல. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நடந்த நிகழ்வு முழுக்க முழுக்க கேரள சுற்றுலாத்துறையின் பிரசாரத்துக்கானது. உளவாளி என்று தெரிந்தே அரசு ஒருவரை அழைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனினும், கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ஒருவரின் பின்னணி பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் ஒரு அரசு எவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கலாம் என அவை கேள்வி எழுப்பி உள்ளன.

    இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், "பாரத மாதாவுக்கு தடை விதிப்பார்கள். ஆனால், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பார்களா?. சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ், முதல்-மந்திரி பினராயி விஜயனின் மருமகன். அவரை பதவி நீக்கம் செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.

    கேரள அரசை விமர்சித்துள்ள பா.ஜ.க.வுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. சந்தோஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கேரள அரசா ஜோதியை பாகிஸ்தானுக்கு அனுப்பியது?. மத்திய அரசின் உளவுத்துறை செயலிழந்து விட்டது. தங்கள் மீதுள்ள குறையை மறைக்க மற்றவர்கள் மீது பழி சுமத்துவதா?' என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 படகுகள் முழுமையாக எரிந்தது. 20 படகுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன.
    • படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

    40 படகுகள் முழுமையாக எரிந்தது. 20 படகுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன.

    இந்த தீபத்து காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 மீனவ குடும்பத்தினர். இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    இந்நிலையில் தீ விபத்துக்கு காரணமான யூடியூபர் நானி என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நானி என்பவருக்கு சொந்தமாக 2 மீன்பிடி படகுகள் உள்ளன. இவர் லோக்கல் பாய் நானி என்ற பெயரில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவதுடன் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

    கடலில் மீன் பிடித்தல் உட்பட பல குறும்படங்களை தயாரித்து வெளியிட்டு பிரபலமாக உள்ளார்.

    இந்நிலையில் நானியின் மனைவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வளைகாப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து நானி துறைமுகத்தில் உள்ள அவரது படகில் வைத்து நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார்.

    அப்போது படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த மோதலில் ஒரு படகில் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கும் தீ வேகமாக பரவி எரிந்து நாசமாகி உள்ளன.

    தீ விபத்து ஏற்பட்டதும் யூடியூபர் நானி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். விபத்தில் படகுகள் கொழுந்து விட்டு எரிந்த நேரத்தில் அங்கே இருந்த நானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மத்தியில் இருந்தபடி வீடியோ பதிவு செய்தார்.

    மேலும் தங்கள் படகுகள் எரிவதை பார்த்து கூக்கிரலிட்டு கண்ணீர் விட்டு அழுத மீனவர்களையும் படம்பிடித்தார். இந்த வீடியோவை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ வைரலாக பரவியது. விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (வயது 23).

    யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் தயாரித்து பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவிப்பதற்காக சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதன்மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார். இவருக்கு யூ-டியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவர் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவை குளத்தின் அருகே உள்ள முத்துலிங்கம் (75) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் மோகத்தில் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சென்று ஒரு கட்டிடத்தின் மேலே நின்று கீழே நண்பர்களை நிற்க வைத்து, குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அந்த தீயில் குதிப்பது போல சாகச வீடியோ பதிவிட்டு அதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    அதில் அருகில் நின்ற நண்பர்கள் மீது இந்த தீ பரவுகிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கங்களில் தேரிக்காட்டில் மண்ணுக்குள் தலைகீழாக புதைந்து நின்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் வீடியோக்கள் என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடிப்பிடித்து விசாரணை நடத்தி ரஞ்சித் பாலா, சிவக்குமார், இசக்கி ராஜா ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 277-தண்ணீரை மாசுபடுத்துதல், 278-சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல், 430-நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல், 285-பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல், 308-மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • பலவிதமான சாகசங்களை செய்து யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.
    • விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காட்கேசர், பாலா நகரை சேர்ந்தவர் பானு சந்தர் ரெட்டி. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பல்வேறு விதமான சாகசங்களை செய்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பானு சந்தர் ரெட்டி பரபரப்பாக காணப்படும் ஓ.ஆர்.ஆர் ரிங் ரோட்டுக்கு வந்தார்.

    தான் கட்டு கட்டாக கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளை மேலே வீசினார். ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்து சாலையில் சிதறியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் நடந்து சென்ற பொது மக்கள் காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும் பொதுமக்கள் வாகனங்களுக்கு இடை இடையே புகுந்ததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை எடுப்பதை பானு சந்திர ரெட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பதிவு செய்த வீடியோவை தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனைக் கண்ட போலீசார் பானு சந்தர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


    ×