search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liver"

    • ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர்.
    • பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது.

    நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர் ஆகும். இது நமது வயிற்றில் வலது மேல் பகுதியில் இருக்கும் கல்லீரலில் உருவாகி, அதன் அடியிலுள்ள பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, நாம் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பை உடைத்து, நுண் கொழுப்புப் பொருளாக மாற்றி, பின்னர் உடலிலுள்ள பலவிதமான உயிரணுக்களுக்கும் தேவைப்படும் சக்தியாக மாற்றி அளிக்கிறது.

    பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது. அப்படி இல்லை என்றால், வாந்தி, குமட்டல், தலைசுற்றல், அஜீரணம், ஏப்பம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    ரசாயனப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பது, சுத்தமில்லாத எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சில மருத்துவ ரீதியான நோய்களின் போதும் பித்த வாந்தி வருவதுண்டு.

     பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் வாந்தி இருந்தால், அது பித்தநீர் கலந்த வாந்தி தான். பித்த நீர் அதிகமாக சுரக்கிறது என்றால், மேல் வயிற்றில் வலி இருக்கும். நெஞ்செரிச்சல் இருக்கும். நாக்கு கசக்கும். வாந்தி வருகிற மாதிரி இருக்கும். இருமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.

    நீங்கள் சாப்பிட்ட உணவில் அதிக அளவில் கொழுப்பு இருந்தால் உங்களது கல்லீரலில் பித்த நீரும் அதிக அளவில் சுரக்கும். இது பித்த அமில நீராகி உங்களது குடலுக்குள் செல்லும். இது உடலுக்கு நல்ல தல்ல.

    பித்த அமில நீர் அதிகமான அளவில் சுரக்காமல் இருக்க...

    * கொஞ்சம் கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிட வேண்டும்.

    * சாப்பிட்டவுடன் சுமார் அரை மணி நேரமாவது சாயாமல் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கவும் கூடாது.

    * கொழுப்பு சத்துள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

    * மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.

    * அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

    * படுக்கையின் தலைப்பகுதி சற்று தூக்கலாக இருக்க வேண்டும்.

    * நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், வெண்ணெய், எண்ணெய் அதிக அளவில் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம்.

    மூளைக்கு அடுத்தபடியாக உடலின் இரண்டாவது பெரிய உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், வளர்சிதை மாற்றம் உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கல்லீரலின் பங்களிப்பு முக்கியமானது. கல்லீரலின் செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடும். மது பழக்கம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், ஹெபடைடிஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கல்லீரல் எதிர்மறையாக பாதிப்புக்கு ஆளாகிறது.

    ஒட்டுமொத்த உடல் நலனில் கல்லீரலின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரல் தொடர்பான நோய்கள், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ந் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி பார்க்கலாம்.

    செய்யக்கூடியவை:

    * கீரை, புரோக்கோலி, காலே போன்ற பச்சை இலை காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் உடலில் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறையை தூண்டுவதற்கு உதவுகின்றன.

    * வால்நெட், அவகோடா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகள் நிறைந்தவைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

    * கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீர் தான் இயற்கையாகவே நச்சுத்தன்மையை நீக்கும் முகவராக செயல்படுகிறது. உடலில் இருந்து கழிவுகளை சுலபமாக அகற்ற கல்லீரலுக்கு நீர் உதவிகரமாக செயல்படுகிறது.

    * உண்ணும் உணவில் பழங்களும் இடம் பெற வேண்டும். அவை ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கிரேப் புரூட் உள்ளிட்ட வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுதான் எல்லா நோய்களில் இருந்தும் உடலை காக்கும் அருமருந்து. உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாட வாழ்வில் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நேரத்தை செலவிட வேண்டும்.

    இன்றைய இளம் தலைமுறையினரிடையே 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்தும் மோகம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தும் மை தரமானதாக இருக்க வேண்டும். அதனை குத்துவதற்கு பயன்படுத்தும் கருவி கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு பயன்படுத்திய டாட்டூ குத்தும் கருவி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படாவிட்டால், மற்றொருவருக்கு பச்சை குத்தும்போது ரத்தம் மூலம் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் அதிகம். குறிப்பாக ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி, கல்லீரல் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். டாட்டூ குத்தும் கருவிகள் மூலம் பரவும் வைரஸ்கள் ஆரம்பத்தில் கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

    காலப்போக்கில் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் புதியதா அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஏற்கனவே கல்லீரல் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை குத்திக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

    செய்யக்கூடாதவை:

    * பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். இந்த வகையான உணவுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த உணவுகள் உடலில் சர்க்கரை அளவையும் அதிகரிக்க செய்துவிடும்.

    * கெட்ட கொழுப்புகள் எனப்படும் நிறைவுற்ற கொழுப்புகளை தவிர்க்கவும். பொரித்த உணவுகளும் இதில் அடங்கும்.

    * கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம். மதுவில் உள்ள ஆல்கஹால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலின் செயல்பாட்டை கடினமாக்கிவிடும். அதனால் கல்லீரல் எளிதில் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.

    * ஆடு, மாடு, பன்றி போன்ற பாலூட்டிகளின் இறைச்சி, சிவப்பு இறைச்சியாக கருதப்படும். அந்த வகை இறைச்சியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகை இறைச்சி உணவுகள் கல்லீரலில் அதிக கொழுப்புகள் படிவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    * சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற அதிக சர்க்கரை கொண்ட உணவுகளையும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    • தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
    • தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை கோர்ட் சுட்டிக்காட்டியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர்.

    இதையடுத்து உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் அந்த நபர் பதிவு செய்து காத்திருந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. எனவே அவரது 17 வயதே ஆன மகள், தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார்.

    ஆனால் மருத்துவ சட்டவிதிகளின் படி மைனர் பெண் உறுப்பு தானம் செய்யக்கூடாது. இதனால் டாக்டர்கள், 17 வயது சிறுமியின் உறுப்பை தானமாக பெற மறுத்தனர். இதையடுத்து அந்த சிறுமி, ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    அதில் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். சிறுமியின் மனுவை பரீசிலித்த கோர்ட்டு சிறுமி அவரது, தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது.

    தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்க சிறுமிக்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு அவரை பாராட்டவும் செய்தது. தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    மேலும் இதுபோன்ற மகளை பெற அவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    தக்காளியை நாம் பெரும்பாலான உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கிறோம். அதற்கு காரணம் அதில் இருக்கும் சத்துக்கள்தான். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நுரையீரல், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

    இதயநோய், நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்தும் காக்கவும் உதவுகிறது. தக்காளியில் இருக்கும் லைகோபின் புற்றுநோய்க்கு எதிராக போராடும் வலிமை கொண்டதாக விளங்குகிறது. கல்லீரல் புற்றுநோயை தடுக்கவும் தக்காளி உதவுகிறது.

    இதுபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் டப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜியாங் டங் வாங், ‘‘தக்காளியை சமைத்தோ, ஜூஸாகவோ, சாஸாகவோ தயாரித்து பயன்படுத்தலாம். அதிலிருக்கும் லைகோபின் சிறந்த மருந்து பொருள் போல் செயல்படுகிறது’’ என்கிறார்.

    கொய்யா, தர்பூசணி, திராட்சை, பப்பாளி மற்றும் சிவப்பு குடைமிளகாய் போன்றவற்றிலும் லைகோபின் இருக்கிறது. எனினும் தக்காளியை ஒப்பிடுகையில் அவற்றில் லைகோபினின் அளவு குறைவாகவே இருக்கிறது. மேலும் தக்காளியில் வைட்டமின் இ, சி, தாதுக்கள், போலேட், பீனோலிக் கலவைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் தினமும் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
    மருத்துவத்தில் பல நோய்களைப் பற்றியும், அவைகளை வருமுன் காப்பது பற்றியும் நாம் நன்கு கேட்டு, படித்து அறிந்து வருகின்றோம். அவற்றினை கடை பிடித்தும் வருகின்றோம். ஆனால் சில பொதுவான அதிகமாக காணப்படும் பாதிப்புகள் நம் கண்களிலும் கவனத்திலும் தவற விட்டு விடுகின்றோம். அதில் ஒன்றுதான் நம் கல்லீரல் பாதுகாப்பு.

    மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

    சில உடல் சொல்லும் அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும்.

    * அடிக்கடி உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கின்றதா?

    சில சமயம் முதுகுவலி, வயிற்று வலி, கீழ் காலில் சவுகர்யமின்மை ஏற்படுகின்றதா?

    * வயிற்று பிரட்டல், பசியின்மை ஏற்படுகின்றதா?

    * உடல் நிறமோ, கண்ணின் வெள்ளைப் பகுதியோ மஞ்சளாக இருக்கின்றதா?

    * அதிக எடை இருக்கின்றதா? அதனை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கின்றதா?

    * கழுத்து, கை உள் மடிப்பு பகுதிகளில் அடர்ந்த கறுப்பு நிறம் இருக்கின்றதா?

    * உங்கள் சருமம் ஆரோக்கியமற்று இருக்கின்றதா?

    * வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படுகின்றதா?

    * தலைவலி, குழப்பம், கவனக்குறைவு ஏற்படுகின்றதா?

    * எப்போதும் பசி, அதன் காரணமாக அதிகம் சர்க்கரை, கார்போஹைடிரேட் உணவு உண்ணுதல் போன்ற பாதிப்புகள் உள்ளதா?

    * என்னவென்றே தெரியாத உடல்நலமின்மை உள்ளதா?

    இவைகளில் அனைத்துமோ, சிலவோ இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது கொழுப்பு நிறைந்த கல்லீரலின் பாதிப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. இதற்கு உடனடியாக முறையான கவனம் கொடுக்கவில்லை என்றால் கல்லீரலில் அதிக பாதிப்பு, இருதய பாதிப்பு, பக்க வாதம், சர்க்கரை நோய், புற்று நோய் என பல கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.

    இன்று குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வேலைகளை கல்லீரல் செய்கின்றது.

    * உடலில் நச்சுக்களை நீக்குகின்றது.

    * குளுகோசினை சேமித்து தேவைப்படும் போது சக்தியாக வெளியிடுகிறது.

    * ரத்தத்தில் கிருமிகளை நீக்குகின்றது.

    * ரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகின்றது. இப்படி விவரித்துக் கொண்டே போகலாம்.

    * இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் கொழுப்பு சேர்ந்த கல்லீரலாக மாறும் போது அது வீக்கம் பெறுகின்றது. பெரிதாகின்றது. அதனுடைய வேலைகளை முறையாக செய்ய முடியாமல் போகின்றது.

    * அதிக எடை ஆகியவை கொழுப்பு கல்லீரலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    * கல்லீரலில் 10 சதவீதம் சரியாக வேலை செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

    கல்லீரலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி?

    * நோயினை எதிர்ப்பது என்பது நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது ஆகும்.

    * அளவான எடை இருக்குமாறு நம்மை காக்க வேண்டும். அதிக எடையினை குறைப்பது கல்லீரலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவும்.

    * விகிதாச்சார உணவு அவசியம். அதிக கலோரி சத்து உள்ள உணவு, அதிக கொழுப்பு, மைதா வகைகள், அதிக பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை இவற்றினைத் தவிருங்கள். நார் சத்து மிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள், விதைகள் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

    * அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் கல்லீரல் கொழுப்பினை குறைக்கும்.

    * மது, புகை, புகையிலை போன்ற நச்சுப் பொருட்களை அடியோடு தவிர்ப்போம்.

    * உங்கள் சுகாதாரப் பொருட்களை மற்றவர்களுடன் பங்கு போட வேண்டாம்.

    * கல்லீரலுக்கான ஏ, பி. வைரஸ் தவிர்க்க நடைபயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

    * மது அருந்துபவர்கள், அருந்தாதவர்கள் இருவரும் கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய்க்கு தீர்வாக மேலும் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

    * அளவான முறையில் காபி அருந்தலாம். காபியில் உள்ள கேபின் கல்லீரலில் ஏற்படும் முறையற்ற என்ஸைம்கள் அளவினை சரி செய்யும்.

    * கீரைகள், பச்சை காய்கறிகள் பெரிதும் உதவும்.

    * டோஃபு எனப்படும் சோயா பன்னீரினை அளவாய் பயன்படுத்தவும்.

    * மீன், ஒமேகா -3 இவை கல்லீரல் வீக்கம், கொழுப்பு இரண்டினையும் வெகுவாய் குறைக்கும்.

    * ஒட்ஸ் உணவினை காலை உணவாக உட்கொள்ளலாம்.

    * வால் நட்ஸ் எனப்படும் பாதாம்பருப்பு தினமும் 3-4 எடுத்துக்கொள்ளலாம்.

    * கொழுப்பு குறைந்த பால் உபயோகிக்கலாம்.

    * ஆலிவ் எண்ணெயினை சமையலில் பழக்கிக் கொள்ளுங்கள்.

    * பூண்டினை அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.

    * கிரீன் டீ ஒரு வேளையாவது பருகுங்கள்.

    * பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

    மேலும் எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்த படியே இருக்காதீர்கள். தினமும் 20 நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள்.

    கொழுப்பினை உணவில் வெகுவாய் குறையுங்கள்.

    சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

    மேலும் ஆல்கஹால், வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு, அதிக அசைவம் இவற்றினைத் தவிருங்கள்.
    கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் இந்த அறிகுறிகள் இருந்தால் நாம் கல்லீரலைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
    கல்லீரல் சுமார் 500 விதமான வேலைகளை செய்கின்றது. அப்படிப்பட்ட கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும். ஆக ஒவ்வொருவரும் கல்லீரலை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நாம் கல்லீரலைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    * நீண்ட கால சோர்வு, எப்பொழுதும் மெத்தனமாக இருத்தல்
    * தலைவலி, மூட்டுகளின் வலி, தசைகளில் வலி
    * அதிக வியர்வை, அஜீரணம், வயிற்றுவலி
    * மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மனஉளைச்சல்
    * வாய் துர்நாற்றம், அதிக எடை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனைப்பெறவும்.
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது.
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. தினமும் இரண்டு கப் காபி பருகுவதன் மூலம் கல்லீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 63 ஆயிரம் காபி பிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்டுகளாக அவர்கள் பருகும் காபியின் அளவு பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதில் 114 பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள்.

    இதையடுத்து காபி அதிக அளவிலும், குறைந்த அளவிலும் பருகுபவர்களை தரம் பிரித்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இறுதியில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

    அதேவேளையில் டீ, பழ ஜூஸ் போன்ற பானங்கள் பருகுவதற்கும் கல்லீரல் அழற்சி நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுதான் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் அமெரிக்கர்கள்தான் கல்லீரல் அழற்சி நோயால் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    கல்லீரல் ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதி. இதன் மிக முக்கியமான வேலைகளையும், கல்லீரலை பாதுகாக்கும் வழிமுறைகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒருவரது உடல் நலம் பல காரணங்களை கூட்டாகக் கொண்டே அமையும். உணவு, தூக்கம், பரம்பரை, சுற்று சூழ்நிலை, உறவுகளின் ஒற்றுமை, சுறுசுறுப்பான அன்றாட வாழ்க்கை. உடல் எந்த அளவு மூச்சுக்களை உடனடியாக வெளியேற்றுகின்றது என்பதை பொறுத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியம் அமைகிறது. இதில் அநேகமானவற்றை நம் கவனம், அக்கறை மூலம் சீராய் வைத்துக் கொள்ள முடியும்.

    நாம் எப்போதும் நம் உடலின் நச்சுப் பொருள் வெளியேற்றம் சீராய் இருக்கின்றதா? என்பதனை கவனிக்கத் தவறி விடுகின்றோம். கல்லீரல் ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதி. 500 வகைகளுக்கும் மேலான வேலையினைச் செய்வது. உடலின் உள் உறுப்புகளில் பெரிதான உறுப்பு. இதன் மிக முக்கியமான வேலைகளில் சிலவையாக.

    பித்த நீர் உற்பத்தி

    * பித்த நீர் தான் கொழுப்பு, புரதம், சில வைட்டமின்கள் இவற்றினை உடைத்து குடல் முலம் உடலில் உறிஞ்சப்பட உதவுகின்றது.

    * மெட்டபாலிஸம் எனப்படும் வளர் சிதை மாற்று முறையில் ஹீமோகுளோபினை உடைத்து பிலுரூபின் எனும் புரத உருவாக்கத்திற்கு உதவுகின்றது. வெளிவரும் இரும்பு கல்லீரல் மற்றும் எலும்பு மஞ்ஜையில் சேமிக்கப்பட்டு புது ரத்த செல்கள் உருவாக உதவுகின்றது.

    * உடலில் அடிபட்டு ரத்தம் கசியும்போது அதிக ரத்தம் வெளியேறாமல் ரத்தம் உறைய உதவுகின்றது.

    * ரத்தம் உறைய வைட்டமின் கே சத்தும் அவசியமான ஒன்று. பைல் எனும் பித்த நீர் வைட்டமின் கே உடலில் உறிஞ்சப்பட அவசியமானது.

    * கார்போஹைடிரேட் என்பது மாவு சத்தின் வளர் சிதை மாற்றங்கள். கார்போஹைடிரேட்டுகளை கல்லீரல் உடைத்து க்ளுகோஸாக ரத்தத்தில் சேர்த்து உடலின் அனைத்து செல்களும் சக்தி பெற்று செயல்பட உதவும்.

    * அதிக க்ளுகோஸ் கல்லீரலில் க்ளைகோகனாக சேமிக்கப்பட்டு அவசர நேரத்தில் உடல் செயல்பாட்டிற்கு உதவும்.

    * கல்லீரல் வைட்டமின்கள் ஏ, பி12, சி, டி,,இ.கே தாது உப்புகளான இரும்பு, காப்பர் இவற்றினை சேமித்து வைத்து உணவில் இவற்றில் பற்றாக்குறை ஏற்படும் போது தற்காலிக அவசரத்திற்கு உதவி அளிக்கின்றது.

    * ரத்தத்தினை வடிகட்டி சுத்தம் செய்கின்றது. நச்சுப்பொருட்கள் அதிக ஹார்மோன் போன்ற பல பாதிப்பு ஏற்படும் பொருட்களை வடிகட்டி சுத்தம் செய்து உடலுக்கு அளிக்கின்றது.

    * நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்ட உதவுகின்றது.

    * உள்உறுப்புகளில் கல்லீரல் ஒன்று தான் காயப்பட்டாலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை உள்ளது. இப்படி கல்லீரலின் அபார முக்கிய செயல்களை விவரித்துக்கொண்டே செல்லலாம். அதிக உடல் பாதிப்புகளும், ஆல்கஹாலும், பெரிதும் கல்லீரலை பாதித்துவிடும்.

    * வைரஸ் ஹைப்படைடிஸ் ஓ.லி.சி

    * ஆல்கஹால் இல்லாத கொழுத்த கல்லீரல் பாதிப்பு நோய்.

    * அதிக காப்பர் சேர்க்கை.

    * பித்தநீர் குழாய் சீராக இன்மை.

    * க்ளூகோஸ் வளர் சிதை மாற்ற குறைபாடு (பரம்பரை காரணம்).

    * கல்லீரல் தசை தடிப்பு. அதிக சர்க்கரை உண்ணும் பழக்கம்.

    * கிருமிகள் தாக்குதல் போன்றவைகள் கல்லீரல் பாதிப்பிற்கான காரணங்கள் ஆகின்றன. கல்லீரலை பாதுகாக்க

    * அதிக சர்க்கரை உண்பதைத் தவிருங்கள்.

    * இப்பொழு தெல்லாம் ஊசி போடுவது கூட அவரவருக்கு போட்டவுடன் நீக்கப்படுகின்றது. ஆகவே ஊசிகள் மூலம் எந்த தொற்றும் பரவாமல் தடுக்கப்படுகின்றது. கல்லீரல் சரிவர வேலை செய்யவில்லை என்பதனைக் காட்டும் அறிகுறிகள்.

    * மஞ்சள் காமாலை * வயிற்று வீக்கம் வலி * வீங்கிய கால்கள், கணுக்கால், * அரிக்கும் சருமம் * அடர்ந்த நிறம் கொண்ட சிறுநீர் * தார்போல் நிறத்தில் வெளிப்போக்கு * ரத்தம் கசிந்த வெளிப்போக்கு * அதிகசோர்வு * குழப்பம் * மூட்டுவலி * ரத்தப்போக்கு ஆகியவை ஆகும். ஆக கல்லீரலை எல்பொழுதும் ஆரோக்யமாக வைத்துக்கொள்வது நம் உடலை பாதுகாக்கும் சிறந்த முறையாகும்.

    தவறான உணவுகளை உட் கொள்வதைத் தவிருங்கள். ரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிருங்கள் கெட்ட கொழுப்பு உணவுகளை தவிருங்கள். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதோடு இருதய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு பாதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அலர்ஜி என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடுகின்றன. எனவே இவைகளை சிறுவயது முதலே தவிர்த்து விடுங்கள்.

    * காய்கறி சாறு குடியுங்கள்- வெகு எளிதாக கல்லீரலை  காத்துக் கொள்ளும் முறை காய்கறி சாறு குடிப்பது தான். * எலுமிச்சை * வெள்ளரி * தர்பூஸ் * புதினா * கொத்தமல்லி * காரட் * பீட்ருட்* கீரை* முட்டைகோஸ் * இஞ்சி  * பூண்டு * திராட்சை.



    மற்றும்  கடலை பீர்க்கை, சுரைக்காய் போன்ற காய்களில் தினமும் சிலவற்றினை  ஜூஸாக செய்து குடிப்பது கல்லீரலை மிகவும் சிறப்பாக பாதுகாக்கும். மிகவும் எளிதானதும் கூட.

    * பொட்டாசியம் சேர்க்க வேண்டும்- கல்லீரல் பாதிப்பு உடையவர்களுக்கு ரத்தத்தில் பொட்டாஷியம் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்  எனப்படும் கொழுப்பு சேர்ந்த கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கும் பொட்டாஷியம் குறைபாடு ரத்தத்தில் இருப்பதற்கும் தொடர்பு  இருக்கின்றது.

    என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கல்லீரலுக்கு பொட்டாஷிய சத்து கிடைத்தாலே பல முக்கிய வேலைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கும்.சிறு நீரக பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனைப்பெற்றே பொட்டாஷியம் சத்தினை அவர் அறிவுரைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * பீன்ஸ் பிரிவுகள் * பீட்ருட் கீரை * சர்க்கரை வள்ளி
    * தக்காளி ஜூஸ் *  வாழைப்பழ-ம் போன்றவை வெகுவாய் உதவும்.
    * மஞ்சளை சமையலில் நன்கு பயன்படுத்துங்கள்.
    *  மது பழக்கத்தினை அடியோடு விட்டு விடுங்கள்.

    இன்சுலின் செயல்பாடு தடை:

    உடலின் செல்களால் ஹார்மோன் இன்சுலினை சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகின்றது. இதனை சரிசெய்ய மேலும் இன்சுலின் சுரக்கும். நாளடைவில் உறுப்புகள் பாதிப்பும் ஏற்படுகின்றது. அதிக கார்போஹைடிரேட் உணவு, இனிப்பு இவையெல்லாம் பாதிப்பினை கூட்டுகின்றன.

    இதன் அறிகுறிகளாக * அதிக தாகம் * சிறுநீர் போக்கு *  அதிக பசி * அதிக சோர்வு * பார்வை சரியின்மை * கை, கால்கலில் மதமதப்பு * புண்கள் சீக்கிரம் ஆறாமை * காரணமின்றி எடை குறைதல் * வறட்சியான சருமம் *  எளிதில் கிருமிகள், பூஞ்ஞை பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
    மேலும் இவர்களுக்கு

    * மனச்சோர்வு * இருதய நோய் * அதிக கொழுப்பு * உயர் ரத்த அழுத்தம் * சிறுநீரக நோய் * நரம்பு பாதிப்பு * பக்கவாதம் என மனிதனை உலுக்கி எடுத்து விடுகின்றன.

    சர்க்கரை நோய் பாதிப்பு  ஒரு இரவில் ஏற்படுவதில்லை. ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடித்து விட்டால் உணவு குறை, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை இவற்றில் முறையான மாற்றங்களை கொண்டு வந்து கட்டுப்பாட்டில்  சர்க்கரையின் அளவினை கொண்டு வந்துவிடலாம்.
    மேலும் அமைதியான வாழ்க்கை முறை, 8 மணி நேர தூக்கம், தியானம், யோகா இவை இன்றைய ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமாகி விட்டது என்பதனை அறிந்து அதனை கடைப்பிடிக்க வேண்டும்.

    பூஞ்ஞை (அ) காளான் தொற்று

    கான்டிடா எனப்படும் பூஞ்ஞை தொற்று உடலில் பல பிரச்சினைகளை உருவாக்கலாம். இது உணவுக்குழாயில் பொதுவாக காணப்படும் ஒன்று. இதன் அளவு பெருகும் பொழுது பிரச்சினைகள் உணவு குழாயோடு மற்றும் நிற்காமல் பரவுகின்றன.

    இதனது அதி தீவிர வளர்ச்சி குடல் சுவற்றில் ஒட்டைகளை உருவாக்கு கின்றது. இதனால் நச்சுப் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் கலக்கின்றது. கல்லீரல் பாதிப்பு ஏற்படுகின்றது. சர்க்கரை அளவு மாறுபடுகின்றது. ஹார்மோன்கள் கட்டுப்பாடு பாதிக்கப்படுகின்றது.

    ஏன் இந்த கன்டிடா பூஞ்ஞை அதிக வளர்ச்சி பெறுகின்றது. கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது. அதிக மன அழுத்தம், மது அருந்துவது அவசியம் காரணமாக சில நேரங்களில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் அதிக அளவினால் நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவது போன்றவை இந்த பூஞ்ஞை அதிக உருவாக்க காரணம் ஆகின்றன.

    இதன் அறிகுறிகள்


    * தோல், நகங்களில் தொற்று * மலச்சிக்கல் * வயிற்றுப்போக்கு * செரிமான பிரச்சினை * பிறப்புறுப்பில் அரிப்பு, தொற்று * இனிப்பு அதிகம் உண்ண ஆசைப்படுவது ஆகியவைகள் ஆகும்.

    இது வந்து விட்டால் மருத்துவ சிகிச்சை மிக அவசியம். ஆனால் தவிர்ப்பு முறைகளாக

    * தேங்காய் எண்ணெய் உடலில் தடவி குளியுங்கள்
    * அதிக மாவு சத்து உணவுகளைத் தவிருங்கள்
    * இனிப்பு அதிகம் உண்ணாதீர்கள்
    * அன்றாடம் ஒரு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்
    * பூண்டு உணவில் தினமும் சேருங்கள்
    * பச்சை காய்கறிகள், கீரை உணவுகளை உண்ணுங்கள்.
    ×