search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைசுற்றல்"

    • கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
    • உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.

    கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.

    தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.

    உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.

    வாழ்க்கை முறை:

    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.

    4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை 1 முதல் 2 இஞ்சிச்சாறில் எடுக்க வேண்டும்.
    • தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.

    வெர்டிகோ என்பது இயக்கம் அல்லது சுழலும் உணர்வு. இது பெரும்பாலும் தலைச்சுற்றல் என்று விவரிக்கப்படுகிறது. வெர்டிகோ பிரச்சினை உள்ளவர்களுக்கு தலைசுற்றல், குமட்டல் அல்லது வாந்தி, பார்வை மங்கல், நடை தளர்வு போன்றவை இருக்கும். இது நபருக்கு நபர் வேறுபடும். இந்த நோய்க்கான காரணங்கள் வருமாறு:

     1) ப்ராக்ஸிமல் பொசிஷனல் வெர்டிகோ:

    இந்த நிலையில் சுழல்வது அல்லது நகர்வது போன்ற தவறான உணர்வை ஏற்படுத்துகிறது. இது தலையின் இயக்கத்தில் ஏற்படும் விரைவான மாற்றத்தால் தூண்டப்படுகின்றன, அதாவது படுக்கையில் திரும்பும் போது, உட்காரும்போது அல்லது தலையில் அடிபடுவது இந்த வெர்டிகோவிற்கு மிகவும் பொதுவான காரணமாகும்.

    2) வெஸ்டிபுலர் நியூரைடிஸ்:

    வெஸ்டிபுலர் நரம்பில் ஏற்படும் வைரஸ் தொற்றின் போது, தீவிரமான வெர்டிகோ நிலையை ஏற்படுத்தும்.

     3) மெனியர் நோய்:

    உள் காதில் அதிகப்படியான திரவம் நிரம்புவதால் இந்த நோய் வருகிறது. இது பல மணிநேரம் நீடிக்கும், தலைசுற்றல், காது கேளாமை, காதில் ஒலித்தல், காது இரைச்சல் போன்றவை காணப்படும்.

     4) மைக்ரேன்:

    ஒற்றைத் தலைவலி எனப்படும் இந்த பாதிப்பு உள்ள நபர்களுக்கு வெர்டிகோ அல்லது பிற வகையான தலைச்சுற்றல் சில நேரங்களில் ஏற்படும். இது சில நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை நீடிக்கும்.

     5) மூளையில் ஏற்படும் கட்டிகள், ரத்த அழுத்தம் குறைதல், ரத்த சர்க்கரை அளவு குறைதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு போன்ற நிலைகளிலும் தலைசுற்றல் ஏற்படும். இதை வெர்டிகோ பாதிப்பில் இருந்து வேறுபடுத்த வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) துளசிச் சூரணம் ஒரு கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி. ஆகியவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை 1 முதல் 2 இஞ்சிச்சாறில் எடுக்க வேண்டும்.

    3) ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மல்லி விதை, மிளகு, கருப்பட்டி சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

    4) தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.

    5) கிராம்பு 1, அன்னாசிப்பூ 1, இஞ்சி, எலுமிச்சை இவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

    6) படுக்கையை விட்டு திடீரென எழும்பக் கூடாது.

    • நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது.
    • ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது.

    நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சினைகள் அவர்களை தாக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த நோயை கண்டுபிடிக்கிறார்கள்.

     நீரிழிவு நோயினால் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, அதிலும் குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

     நீரிழிவு நோய் கொண்டவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது "டயாபடிக் நெப்ரோபதி". இந்த நிலையைத் தடுக்க ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், 4-6 மாதங்களுக்கு ஒரு முறை `மைக்ரோ அல்புமின்யூரியா' என்ற எளிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது `டயாபடிக் நியூரோபதி'.

     இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவ்ஜிவ் என்ற உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது ஆண்கள், பெண்களில் பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்து, உயிருக்கு உலை வைக்கும் கேங்ரீன் போன்ற நோய்த்தொற்றையோ, ஊனத்தையோ ஏற்படுத்தக்கூடும்.

     நீரிழிவு நோய் ரத்த தமனிகளை அடைத்துவிடும் என்பதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் நீரிழிவு நோய் உள்ளவர்கள், வழக்கமாக இதய பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஹைபோகிளைசீமியா அல்லது குறைந்த ரத்த சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்த பிரச்சினை ஏற்படும். வியர்த்தல், பலவீனம், தலைசுற்றல் உள்ளிட்டவை குறைந்த சர்க்கரையின் அறிகுறிகள் ஆகும்.

    • ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர்.
    • பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது.

    நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர் ஆகும். இது நமது வயிற்றில் வலது மேல் பகுதியில் இருக்கும் கல்லீரலில் உருவாகி, அதன் அடியிலுள்ள பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, நாம் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பை உடைத்து, நுண் கொழுப்புப் பொருளாக மாற்றி, பின்னர் உடலிலுள்ள பலவிதமான உயிரணுக்களுக்கும் தேவைப்படும் சக்தியாக மாற்றி அளிக்கிறது.

    பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது. அப்படி இல்லை என்றால், வாந்தி, குமட்டல், தலைசுற்றல், அஜீரணம், ஏப்பம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    ரசாயனப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பது, சுத்தமில்லாத எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சில மருத்துவ ரீதியான நோய்களின் போதும் பித்த வாந்தி வருவதுண்டு.

     பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் வாந்தி இருந்தால், அது பித்தநீர் கலந்த வாந்தி தான். பித்த நீர் அதிகமாக சுரக்கிறது என்றால், மேல் வயிற்றில் வலி இருக்கும். நெஞ்செரிச்சல் இருக்கும். நாக்கு கசக்கும். வாந்தி வருகிற மாதிரி இருக்கும். இருமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.

    நீங்கள் சாப்பிட்ட உணவில் அதிக அளவில் கொழுப்பு இருந்தால் உங்களது கல்லீரலில் பித்த நீரும் அதிக அளவில் சுரக்கும். இது பித்த அமில நீராகி உங்களது குடலுக்குள் செல்லும். இது உடலுக்கு நல்ல தல்ல.

    பித்த அமில நீர் அதிகமான அளவில் சுரக்காமல் இருக்க...

    * கொஞ்சம் கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிட வேண்டும்.

    * சாப்பிட்டவுடன் சுமார் அரை மணி நேரமாவது சாயாமல் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கவும் கூடாது.

    * கொழுப்பு சத்துள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

    * மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.

    * அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

    * படுக்கையின் தலைப்பகுதி சற்று தூக்கலாக இருக்க வேண்டும்.

    * நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், வெண்ணெய், எண்ணெய் அதிக அளவில் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.

    • ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உண்டாகும்.
    • ரத்தக் குழாய்கள் சுருங்குவது, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல் ஆகியவற்றால் மாரடைப்பு ஏற்படும்.

    இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்குவது, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல் போன்ற பல்வேறு காரணங்களால் இதய வால்வுகளில் அடைப்புகள் உண்டாகின்றன. இந்த அடைப்புகள் ஏற்படும்போது மூச்சுத் திணறல், படபடப்பு, சோர்வு, தலைசுற்றல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவை உண்டாகும். இந்த இதயப் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா உதவி செய்யும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இதயத் தமனிகளின் உட்புறச் சுவர்களில் கொழுப்புகள் அல்லது கொலஸ்ட்ரால் உருவாகத் தொடங்கும்போது இதய அடைப்பு ஏற்படுகிறது. இதய அடைப்புக்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

    அதிக கொழுப்புச்ச்த்து, உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது, உடல் உழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் இதய அடைப்பு பிரச்சினை உண்டாகிறது.

    சர்வாங்காசனம்

    சர்வாங்காசனம் செய்வதன் மூலம் உடலின் ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு ஜீரண மண்டலம் முதல் ஒட்டுமொத்த உடலின் இயக்கமும் சீராகும். குறிப்பாக சிறுநீரகச் செயல்பாடுகள் மேம்படும்.

    செய்யும் முறை

    * தரை விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்துப் படுக்கவும். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

    * கால்களை 90 டிகிரிக்கு மேலே உயர்த்த வேண்டும். இப்போது உள்ளங்கைகளை இடுப்பின் மீது வைத்தபடி இடுப்பை மேலே

    உயர்த்த வேண்டும்.

    * உடம்பும் கால்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்படி உடலின எடையை தோள்பட்டைகளில் தாங்கும்படி வைத்திருக்கச் செய்ய

    வேண்டும். கை முட்டிகள் தரை மீது இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

    * இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட்டபடி, 100 எண்ணிக்கை எண்ணும் வரை இதே நிலையில் வைத்திருங்கள்.

    * பின் மெதுவாக கால்களைக் கீழிறக்கி மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.

    சேது பந்தா சர்வாங்காசம்

    சேது பந்தா சர்வாங்காசனத்தை ஆங்கிலத்தில் பிரிட்ஜ் போஸ் என்று சொல்வார்கள். இதை தினமும் செய்வதன் மூலம் முதுகு வலி குறைந்து முதுகெலும்புகள் பலமாக இருக்கும். ரத்த அழுத்தம். ஆஸ்துமா, மனஅழுத்தம் ஆகியவற்றைச் சீராக வைத்திருப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    செய்யும் முறை

    * தரைவிரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு தேவைப்பட்டால் தலையணை வைத்துக் கொள்ளலாம். முழங்கால்களை மட்டும் மடக்கி, கால்களை முடிந்தவரை இடுப்புக்கு அருகில் கொண்டு வர வேண்டும். கால்களை நன்கு விரித்தபடி வைத்துக் கொள்ளுங்கள்.

    * உள்ளங்கைகள், தோள்கள் மற்றும் கால்களை தரையில் அழுத்தி, மெதுவாக இடுப்பை மேலே உயர்த்துங்கள். ஆனால் முதுகில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

    * தொடைகளை முழங்கால்களுக்கு அருகில் நெருக்கமாக வையுங்கள். கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டியபடி வைத்துக்

    கொள்ளுங்கள். இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

    உத்தனாசனம்

    உத்தனாசனம் செய்வதன் மூலம் இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் ஆகியவற்றை வலிமைப்படுத்தும். குறிப்பாக பெருங்குடல், சிறுகுடல், கணையம், கல்லீரல், இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளையும் பலப்படுத்தும்.

    செய்முறை

    * இரண்டு கால்களையும் லேசாக விரித்து வைத்தபடி தரை விரிப்பின் மீது நில்லுங்கள்.

    * இரண்டு கைகளையும் காதை ஒட்டினால் போல வைத்து மேல் நோக்கி தூக்குங்கள். இப்போது மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்ட படியே குனிந்து கால்களை வளைக்காமல் கால் பாதங்களைத் தொடவும்.

    * 20 விநாடிகள் இதே நிலையில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.

    • நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் காரணமாக நீரிழப்பு அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவும் தலை சுற்றல் ஏற்பட்ட்டு, மயக்கம் வரும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாதல், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு காரணமாக திடீரென்று மயக்கம் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு தலை சுற்றல் ஏற்படுவதற்கு கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றோ அதற்கு மேலும் இருக்கலாம்:

    ரத்த சர்க்கரை தாழ்நிலை (ஹைபோ கிளைசீமியா), ரத்த சர்க்கரை அதிகரித்தல், நீரிழப்பு (வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது வேறு காரணங்களாலோ உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழக்கும் போது ஏற்படும் நிலை), குறைந்த ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், மீனியர் நோய் (இது ஒரு சமநிலை கோளாறு ஆகும்.

    இதில் காதில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அதிகம் சேர்வதால் காதுகளுக்குள் அழுத்தம் எற்படும். இந்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும் போது மூளைக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு தலை சுற்றல் ஏற்படுகிறது), கழுத்து எலும்பு தேய்மானம், இதய கோளாறு, ரத்த சோகை, அதிகமான கொலஸ்ட்ரால் அளவு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை, உட்கொள்ளும் மாத்திரைகள் செயல்பாடுகள். (உதாரணமாக - சர்க்கரை அளவை குறைக்க, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு பாதிப்புக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகள்)

    எனவே நீரிழிவு நோயாளிகள் தலைசுற்றல் ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் உள்ளதா என கண்டறிந்து, அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×