search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "irregular heartbeat"

    • ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உண்டாகும்.
    • ரத்தக் குழாய்கள் சுருங்குவது, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல் ஆகியவற்றால் மாரடைப்பு ஏற்படும்.

    இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்குவது, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல் போன்ற பல்வேறு காரணங்களால் இதய வால்வுகளில் அடைப்புகள் உண்டாகின்றன. இந்த அடைப்புகள் ஏற்படும்போது மூச்சுத் திணறல், படபடப்பு, சோர்வு, தலைசுற்றல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவை உண்டாகும். இந்த இதயப் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா உதவி செய்யும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இதயத் தமனிகளின் உட்புறச் சுவர்களில் கொழுப்புகள் அல்லது கொலஸ்ட்ரால் உருவாகத் தொடங்கும்போது இதய அடைப்பு ஏற்படுகிறது. இதய அடைப்புக்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

    அதிக கொழுப்புச்ச்த்து, உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது, உடல் உழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் இதய அடைப்பு பிரச்சினை உண்டாகிறது.

    சர்வாங்காசனம்

    சர்வாங்காசனம் செய்வதன் மூலம் உடலின் ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு ஜீரண மண்டலம் முதல் ஒட்டுமொத்த உடலின் இயக்கமும் சீராகும். குறிப்பாக சிறுநீரகச் செயல்பாடுகள் மேம்படும்.

    செய்யும் முறை

    * தரை விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்துப் படுக்கவும். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

    * கால்களை 90 டிகிரிக்கு மேலே உயர்த்த வேண்டும். இப்போது உள்ளங்கைகளை இடுப்பின் மீது வைத்தபடி இடுப்பை மேலே

    உயர்த்த வேண்டும்.

    * உடம்பும் கால்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்படி உடலின எடையை தோள்பட்டைகளில் தாங்கும்படி வைத்திருக்கச் செய்ய

    வேண்டும். கை முட்டிகள் தரை மீது இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

    * இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட்டபடி, 100 எண்ணிக்கை எண்ணும் வரை இதே நிலையில் வைத்திருங்கள்.

    * பின் மெதுவாக கால்களைக் கீழிறக்கி மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.

    சேது பந்தா சர்வாங்காசம்

    சேது பந்தா சர்வாங்காசனத்தை ஆங்கிலத்தில் பிரிட்ஜ் போஸ் என்று சொல்வார்கள். இதை தினமும் செய்வதன் மூலம் முதுகு வலி குறைந்து முதுகெலும்புகள் பலமாக இருக்கும். ரத்த அழுத்தம். ஆஸ்துமா, மனஅழுத்தம் ஆகியவற்றைச் சீராக வைத்திருப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    செய்யும் முறை

    * தரைவிரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு தேவைப்பட்டால் தலையணை வைத்துக் கொள்ளலாம். முழங்கால்களை மட்டும் மடக்கி, கால்களை முடிந்தவரை இடுப்புக்கு அருகில் கொண்டு வர வேண்டும். கால்களை நன்கு விரித்தபடி வைத்துக் கொள்ளுங்கள்.

    * உள்ளங்கைகள், தோள்கள் மற்றும் கால்களை தரையில் அழுத்தி, மெதுவாக இடுப்பை மேலே உயர்த்துங்கள். ஆனால் முதுகில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

    * தொடைகளை முழங்கால்களுக்கு அருகில் நெருக்கமாக வையுங்கள். கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டியபடி வைத்துக்

    கொள்ளுங்கள். இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

    உத்தனாசனம்

    உத்தனாசனம் செய்வதன் மூலம் இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் ஆகியவற்றை வலிமைப்படுத்தும். குறிப்பாக பெருங்குடல், சிறுகுடல், கணையம், கல்லீரல், இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளையும் பலப்படுத்தும்.

    செய்முறை

    * இரண்டு கால்களையும் லேசாக விரித்து வைத்தபடி தரை விரிப்பின் மீது நில்லுங்கள்.

    * இரண்டு கைகளையும் காதை ஒட்டினால் போல வைத்து மேல் நோக்கி தூக்குங்கள். இப்போது மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்ட படியே குனிந்து கால்களை வளைக்காமல் கால் பாதங்களைத் தொடவும்.

    * 20 விநாடிகள் இதே நிலையில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.

    ×