search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drought"

    • பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள்.
    • தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தை யொட்டிய மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருவ தால் அங்கு உள்ள காட்டு யானைகள் தற்போது வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.என்.ஆா்.பகுதி க்கு 6 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள பாறைகளின் நடுவே தண்ணீர் கிடைக்கிறதா என தேடி பார்த்தன.

    அப்போது பாறைகளின் நடுவில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குட்டைகளில் உள்ள தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சிக் குடித்தன. பின்னர் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி சூட்டை தணித்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பகுதியில் பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள் குறித்து வனவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், `நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கான குடிநீா் தேவையும் அதிகரித்து உள்ளது.

    எனவே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கோடைக்காலம் முடியும்வரை தண்ணீரை நிரப்பவும், குட்டைகளை கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனத்தொட்டியில் தண்ணீர் நிரப்ப மக்கள் கோரிக்கை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக தாளவாடி, பர்கூர் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. எந்த ஆண்டு இல்லாத வகையில் இந்த ஆண்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. குளம், குட்டைகளும் வரண்டுவிட்டன.

    இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீரை தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தாள வாடி, பர்கூர் வனப்பகு தியில் கடும் வறட்சி நிலவுவதால் பச்சை பச்சை என காட்சியளித்த மரம், செடி, கொடிகள் காய்ந்து விட்டன.

    இந்த வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் அருகே இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இவ்வாறு கிராமங்களு க்குள் நுழையும் யானை களால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோ ளம், வாழைமரங்கள், தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டஈடும் ஏற்பட்டுள்ளது. சில சமயம் யானை களால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு விடுகிறது.

    அதேபோன்று மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவு, தண்ணீருக்காக யானைகள் அந்த பகுதியில் வரும் வாகனங்களை வழி மறைத்து வருகிறது. வாகனங்களை யானை துரத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    கிராமத்துக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் நீண்ட சிரமத்திற்கு பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, `தாளவாடி, பர்கூர் மலை கிராமங்களில் உள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

    ஆனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலர் லட்சக்கணக்கில் நஷ்டங்களை சந்தித்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதி முழுவதும் ஆங்காங்கே வனத்துறையினர் தொட்டிகளில் நீர்களை நிரப்ப வேண்டும்.

    இதற்கென்று வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து தினமும் காலை, மாலை வேலை என இரு வேலைகளில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீரை நிரப்ப வேண்டும். இவ்வாறு நீர் நிரப்புவதன் மூலம் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் எண்ணிக்கை குறையும்.

    இதேபோல் வனப்பகுதி முழுவதும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வனத்துறையினர் யானை கள் ஊருக்குள் புகாதவாறு அகழிகளை வெட்டி இருந்தனர். தற்போது அவை மண் நிறைந்து சமமாக ஆகிவிட்டது. இதனால் யானைகள் எளிதாக ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மீண்டும் அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல மாவட்டங்களில் குடிநீருக்கும் கடும் பஞ்சம் நிலவி வருகிறது.
    • இலந்த குண்டா அடுத்த பெத்தலிங்கப்பூரில் பயிரிடப்பட்ட நெற்யிர்களை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    கடும் வறட்சி நிலவிய போதும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்ப டவில்லை. அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் குடிநீருக்கும் கடும் பஞ்சம் நிலவி வருகிறது.

    வறட்சி காரணமாக பல 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் கருகியது. இதனைக் கண்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

    இலந்த குண்டா அடுத்த பெத்தலிங்கப்பூரில் பயிரிடப்பட்ட நெற்யிர்களை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர்.

    விவசாயிகள் நெற்பயிர்களை தீயிட்டு கொளுத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2023ல் ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் அதிகரித்தது
    • புளோரிடா மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறின

    முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2023ல் உலகளாவிய வெப்பநிலையில் கடும் மாற்றம் காணப்பட்டது.

    வல்லுனர்கள் நேரடியாக பூமியின் வெப்பத்தை கணக்கிட தொடங்கியதில் இருந்து 174 வருடங்களில் இத்தகைய வெப்பம் இருந்ததில்லை என்றும், நேரடியாக கணக்கிடாமல் அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட சில கணக்கீடுகளின்படி 1,25,000 வருடங்களில் இந்த அளவு அதிக வெப்பம் ஏற்பட்டதில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

    ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் இவ்வருடம் அதிகரித்தது.

    அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் (Arizona) பல வாரங்களுக்கு அதிக வெப்பம் மக்களை வாட்டியது. வெப்பம், தொடர்ந்து 110 டிகிரிக்கு மேல் 31 நாட்களுக்கு நிலவியது.

    புளோரிடா (Florida) மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறி அதிக வெப்ப நீரினால் கரை ஒதுங்கின.

    சீனா, தெற்கு ஐரோப்பா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது.

    படிம எரிபொருள் (fossil fuel) பயன்படுத்துவதால் வெளியாகும் புகையினால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை இதற்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் எதிர்கால தலைமுறை இப்பூமியில் வாழ்வது கடினமாகி விடும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • தாமிரபரணியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
    • மானூர் தாலுகா பகுதி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமாகவே உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் 50 சதவீதம் குறைவாக பெய்த நிலையில் கார் சாகுபடி முழுமையாக பொய்த்து போனது. மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்யப்படும் நிலையில் இந்த ஆண்டு தாமிரபரணி நேரடி பாசனம் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் மட்டுமே நெல் நடவு நடைபெற்றது.

    அதிலும் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டாலும் அது எந்த அளவில் பயன் அளிக்கும் என தெரிய வில்லை என்று விவசாயிகள் புகார் கூறிவந்தனர்.

    இதனிடையே மானூர் தாலுகா பகுதி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமாகவே உள்ளது. இங்குள்ள 9-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இது தொடர்பாக விவசாயிகள் பல முறை மாவட்ட கலெக்டரிடமும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் எடுத்து ரைத்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் மானூர் பகுதி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்து மனு அளித்தனர். மாவட்டம் முழுவதுமே வறட்சியான சூழல் நிலவுகிறது. எனவே நெல்லை மாவட்ட வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அரசுக்கு இது குறித்து பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து செவி சாய்க்காவிட்டால் இம்மாதம் 30-ந் தேதி வன்னிகோனேந்தல் பகுதியில் 5 ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.தங்கள் பகுதிக்கு வறட்சி நிவாரணம் கிடைக்காவிடில் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு கலெக்டர் கார்த்திகேயன் உறுதி அளித்தார்.

    • ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.
    • நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.இந்நிலையில் கோடை மழை, தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று கிணறு, போர்வெல்களில் நீரின்றியும், புதிதாக போர்வெல்கள் அமைத்தாலும் நீர் இன்றி, நிலைப்பயிரான தென்னையை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

    பல கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து, வெட்டி அகற்றும் அவல நிலை உள்ளது.

    இது குறித்து தென்னை விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது. ஒரு சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அடியோடு காய்ந்து கருகும்.

    நீண்ட கால பயிரான தென்னையை காக்க தண்ணீர் லாரிகள் வாயிலாக ஒரு லாரி ரூ.4,500 விலை கொடுத்து வாங்கி ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து, மரங்களின் உயிரை காப்பாற்ற விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடும், மறு நடவிற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தென்னை காப்புறுதி திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் தலா 25 சதவீதம், மாநில அரசும், விவசாயிகளும் செலுத்தும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    எனவே பயிர்க்காப்பீட்டு திட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இணையும் வகையில், அரசு துறைகளை ஒருங்கிணைத்து துரித நடவடிக்கை எடுக்கவும், காப்பீட்டுத்தொகையாக ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வராததினால் விவசாயிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது.
    • கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுப் பகுதியில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

    அப்பொழுது விவசாயி களின் கேள்விக்கு சரியான முறையில் பதில் சொல்வதற்கான அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வராததினால் விவசாயிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது .

    இதுகுறித்து கேட்டபோது, மாவட்ட கலெக்டர் உட்பட மாவட்ட உயர் அதிகாரிகள் வேறொரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்று ள்ளதாக அதிகாரி கள் பதில் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த விவ சாயிகள் மாவட்ட கலெக்டர் வந்த பின்பு கூட்டத்தை நடத்தலாம் என்றும், நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். இதனையடுத்து வேளாண்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சமரச முயற்சி தோல்வி அடையவே நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுப் பகுதியில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அவர்களுடன் பேசி சமாதானம் செய்து கூட்ட அரங்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததின் பேரில் மீண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
    • ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் குளம், கால்வாய், கிணறு உள்ளிட்ட அனைத்து விதமான நீர்நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படு கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    இந்நிலையில் மழை இன்றி, பல ஆண்டுகளாக விவசாயிகளால் கஷ்டப் பட்டு வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் நீரின்றி கருகி வருகிறது. இதனால் ராதாபுரம் பகுதி விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    கடுமையான பாதிப்புக் குள்ளான விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலை சத்துணவு திட்டத்தை நடைமுறைபபடுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் விவசாயம் நடை பெறவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    இதில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வ லட்சுமி, பஞ்சாயத்து செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை சத்துணவு திட்டத்தை நடைமுறைப் படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

    பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் விவசாயம் நடை பெறவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் மாநில நிதி குழு மானியத்தில் மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.2 ½ கோடி வழங்கப்பட்டுள்ளது.அதனை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் கூடுதலாக அதே திட்டத்தில் ரூ.10 கோடி கேட்டு தமிழக அரசை வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமன் டேவிட், அருந்த வசு, தனித்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மழை காலங்களில் அணைகளில் தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஆரம்பத்தில் ஓரளவு பெய்த மழையின் காரணமாக அணையின் பாபநாசம் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.

    நெல்லை:

    வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மேல் பொதிகை மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    விவசாயம் பாதிப்பு

    இந்த நதியின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 86 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. மழை காலங்களில் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் அணை களில் தேங்கி வைக்கப்பட்டு, விவ சாயத்துக்கு பயன்படு த்தப்பட்டு வருகிறது.

    பாபநாசம் அணையில் இருந்து ஒவ்வெரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாயத்து க்காக தண்ணீர் திறந்து விடப்படும். தொடர்ந்து 120 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. ஆரம்பத்தில் ஓரளவு பெய்த மழையின் காரணமாக அணையின் பாபநாசம் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதையடுத்து குறிப்பிட்ட சில கால்வாய்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததால் அந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    குளங்கள் வறண்டன

    அதேபோல் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நெல்லை மாவட்டத்தில் கோடகன் கால்வாய், நதியுன்னி கால்வாய் உள்ளி ட்ட பல்வேறு கால்வாய்கள் வழியாக மாவட்டத்தில் உள்ளங்களுக்கு செல்லும். அணையில் நீர் குறைவால் மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டது. அவை வெடிப்பு விழுந்து காணப்படுகிறது.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் நயினார் குளத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு சுத்தமல்லி அணைக்கு வந்து அங்கு இருந்து தனி கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. மிகவும் பழமையான இந்த குளம் 15 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 12 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த குளம் தண்ணீர் தேங்கி, கடல் போல் கட்சி யளிக்கும். பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும்.

    இந்த குளம் மூலம் 370 ஏக்கர் பாச னம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை கைகொடுக்காததால் குளம் நிரம்பவில்லை. நயினார் குளம் பாசனமும் பொய்த்து விட்டது. தற்போது குளம் வறண்டு காணப்படுகிறது. ஒரு ஓரத்தில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றன. மற்ற இடங்கள் வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் இல்லாததால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

    இதேபோல் மானூர் பெரியகுளம் வடக்கு விஜயநாராயணம் குளம் ஆகிய பெரிய குளங்களும் வறண்டு காணப்படுகிறது. மானுர் பெரியகுளம் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அப்படிப்பட்ட குளங்கள் இந்த ஆண்டு குறைவான நீர்வரத்தை மட்டுமே கண்டு வறண்டு போய் உள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

    • வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் எங்கள் பகுதி வறட்சி பகுதியாக அறிவிக்கப்படவில்லை.
    • வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் வன்னிகோனேந்தல் வருவாய் குறுவட்ட விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சுமார் 9 ஊராட்சிகள் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வரை ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. அப்போது இந்த ஊராட்சிகள் மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு உட்பட்டு இருந்தது. இந்த பகுதி எப்போதுமே வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது.

    அந்த நேரத்தில் எங்களுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால் 2019-க்கு பிறகு மானூர் யூனியனுடன் எங்கள் பகுதி இணைக்கப்பட்டதால் கடுமையான வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் வறட்சி பகுதியாக எங்கள் பகுதி அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக எங்களுக்கு வறட்சி நிவாரணமோ, பயிர் காப்பீடு தொகையோ வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளோம்.

    தற்போது தமிழக அரசால் 25 வட்டாரங்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சிகளையும் வறட்சி பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணமும், பயிர் காப்பீடும் வழங்க கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 9 கிராமங்களிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள். ஆனால் இன்று மிக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    • அபிராமம் பகுதியில் கடும் வறட்சி காரணமாக 16 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆடு-மாடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது வெயில் சுட்டெறிக்க தொடங்கி விட்டது. ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, தொண்டி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் உட்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இந்த ஆண்டு மேய்ச்சல் நிலங்களில் புல், செடி, கொடிகள் குறைவாக உள்ளதால் தேவையான இரை கிடைக்காமல் ஆடு, மாடுகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வந்தபோதும் கண்மாய்க ளுக்குச் செல்லும் நீர்வழி தடங்கள், கால்வாய், தடுப்பணைகள் சீரமைக்கப் படாததாலும் ஆக்கிரமிப்பு களாலும் பல கண்மாய்கள் வறண்டுள்ளன. மாவட் டத்தில் பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. இதனால் நீராதாரம் பாதிக்கப்படுவதால் மேய்ச்சல் நிலங்களும் வறண்டுள்ளது.

    காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருவகாலங்கள் மாறியதாலும், பருவமழை பொய்த்ததாலும் அடர்ந்த காடுகள் இருந்த இடங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.

    இந்த காலகட்டத்தில் மரங்களை நம்பி வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.

    இதுபற்றி அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் கூறுகையில், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் மேய்ச்சல் நிலங்களும் வறண்டு உள்ளது. 10 கிலோ மீட்டர் முதல் 16 கிலோமீட்டர் தூரம் வரை சென்று ஆடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போதிய அளவு மேய்ச்சல் நிலம் இல்லாததால் ஆடு , மாடுகள் மிகவும் சிரமப்படுகிறது. இதே நிலைதொடருமானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களாக மேய்ச்சல் உள்ள பகுதியை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

    ×