search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut trees"

    • தென்னை மரங்களை வெட்டுவதற்கு மனமில்லாத சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் நடுவதற்கு திட்டமிட்டார்.
    • 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (வயது 54). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்க நினைத்தார். அப்போது அந்த இடத்தில் சுமார் 50 தென்னை மரங்களில் காய்கள் காய்த்து இருந்தது.

    அதனை வெட்டுவதற்கு மனமில்லாத சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் அந்த தென்னை மரங்களை நடுவதற்கு திட்டமிட்டார். இதையடுத்து மரங்களில் காய்த்து இருந்த தேங்காய்களை பறித்து விற்பனை செய்தார். பின்னர் 50 தென்னை மரங்களில் 35 தென்னை மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து, கிரேன் மூலம் லாரியில் ஏற்றி சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ள மற்றொரு தோட்டத்தில் நடவு செய்தார். 

    இதுகுறித்து விவசாயி சண்முகசுந்தரம் கூறுகையில், தனது தந்தை காலத்தில் வைக்கப்பட்ட இந்த தென்னை மரங்களில் இன்று வரை நல்ல முறையில் காய்கள் காய்த்து இளநீர், தேங்காய், கொப்பரை தேங்காய், மட்டை மற்றும் ஓலை என பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தால் மீண்டும் இந்த மாதிரி மரம் வளர்க்க 20 வருடம் ஆகும். எனவே என் தந்தை கந்தசாமி நினைவாக இந்த மரங்களை இவ்வாறு இடம் மாற்றி மீண்டும் புத்துயிர் கொடுத்து வளர்த்து வருகிறேன்.

    இந்த 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தேன். அதில் 23 மரங்கள் தற்போது மீண்டும் காய்கள் காய்க்க ஆரம்பித்துள்ளது. இரண்டு மரங்கள் மட்டும் பட்டுப்போனது. இன்று 10 மரங்கள் கொண்டு வந்து மாற்றி உள்ளோம். இவை அனைத்தும் நல்ல முறையில் உள்ளது. குறிப்பாக இடமாற்றம் செய்யப்பட்ட 35 மரங்களில் 33 மரங்கள் நல்ல முறையில் வளர்ந்துள்ளது. காய்கள் காய்க்கவும் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்னை டானிக் நுண்ணூட்டம் செலுத்த வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தென்னைக்கு தண்ணீர் அதிக அளவில் தேவை என்ற நிலையில் போதிய மழையில்லாததால் பல இடங்களில் தென்னை மரங்கள் கருகின. வெள்ளைப்பூச்சி தாக்குதலால் தென்னை இலைகள் பழுப்பு நிறத்திற்கு மாறின.வெள்ளைப்பூச்சி தாக்குதல் உள்ள தென்னை மரங்களில், தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். தென்னை டானிக் நுண்ணூட்டம் செலுத்த வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வட கிழக்குப்பருவ மழை கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். சேதத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.வேளாண்துறையினர் கூறுகையில், கடந்த 10 மாதமாக போதிய மழை பெய்யவில்லை. குறைந்தளவு மழை தான் பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் குறைந்திருந்தது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

    • இந்திய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் பிரதானமாக உள்ளது.
    • ஆய்வு முடிவுகள் அடிப்படையில் உருவாக்கப்படும் தென்னை ரகம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

    உடுமலை:

    மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின், ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தென்னை மரங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

    தென்னை மரங்கள் இந்தியாவில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், சுமார் 20.16 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்திய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் பிரதானமாக உள்ளது.

    தென்னை சாகுபடியில் நீர்ப்பற்றாக்குறை, சீதோஷ்ண நிலை மாற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிப்பு, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திநகரில் அமைந்துள்ள மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் தென்னை மகத்துவ மையம் மற்றும் நாற்றுப்பண்ணை, மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தை சேர்ந்த காசர்கோடு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தென்னை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வில் புதிய ரகத்தை உருவாக்கும் வகையில், வறட்சியை தாங்கும் தென்னை மரங்களை அடையாளம் காணுதல், தேங்காயின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துதல் மற்றும் வறட்சியை தாங்கும் வகையில் சாகுபடி நடைமுறையை மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

    இது குறித்து மத்திய தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ரகோத்துமன் கூறியதாவது:-

    தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் முதன்மை இணை ஆய்வாளராகவும், காசர்கோடு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த முதன்மை ஆய்வாளர் சம்சுதீன் மற்றும் சுப்ரமணியம், நிரல் உள்ளிட்டோரை கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சி 2022 ஏப்ரலில் துவங்கியது. 2024 மார்ச் மாதம் நிறைவு பெறும்.கோவை , திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி அதிகமாக ஏற்படும் பகுதிகள், நிலத்தடிநீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இப்பணியைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலிருந்து 24,168 தென்னை மரங்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து 2,037 தாய் மரங்கள் தேர்வு செய்யப்பட்டது.இந்த தாய் தென்னை மரங்களிலிருந்து, விதை காய்களை சேகரித்து திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரிய பண்ணையில் நடவு செய்யப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் வறட்சியை தாங்கும் தகவமைப்பு, மரபணு குழுவை கண்டறிந்து புதிதாக உருவாக்கப்பட்டு, புதிய ரகம் உற்பத்தி செய்யப்படும். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் உருவாக்கப்படும் தென்னை ரகம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது.
    • பல ஆண்டுகளாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரம் தற்போது கருகி அழிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டாரப் பகுதியில் அனைத்து தாப்பு மக்களும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

    தென்னை மரங்கள்

    ஆனால் சமீபகாலமாக பருவம் தவறி பெய்தமழை, பருவகாலங்களில் பொய்யாத மழை உள்ளிட்வைகளினால் ஏற்பட்ட வறட்சியால் உடன்குடி பகுதிகளில் தென்னை, பனை உள்ளிட்ட விவசாயம் வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு ஆண்டு பருவமழை குறைவால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் ஏராளமான தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தென்னை மரங்கள் கருகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    குறிப்பாக மெஞ்ஞான புரம், உடன்குடி, பரமன் குறிச்சி பகுதிகளில் ஏராள மான தென்னை மரங்கள் கருகி சாய்ந்து கொண்டி ருக்கிறது. பல ஆண்டுகளாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரம் தற்போது கருகி அழிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    விவசாயிகள் கோரிக்கை

    எனவே மாவட்ட நிர்வாகமும், அரசும் தக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், வருங்காலங்களில் நீர் மேலாண்மையில் பல நல்ல திட்டங்களை வகுத்து மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைத்து நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
    • ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் குளம், கால்வாய், கிணறு உள்ளிட்ட அனைத்து விதமான நீர்நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படு கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    இந்நிலையில் மழை இன்றி, பல ஆண்டுகளாக விவசாயிகளால் கஷ்டப் பட்டு வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் நீரின்றி கருகி வருகிறது. இதனால் ராதாபுரம் பகுதி விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    கடுமையான பாதிப்புக் குள்ளான விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் உள்ளது.
    • பட்டுப்போன மட்டைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்து எரிய வாய்ப்பு உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே காலகம் -ஆவுடையார் கோயில் சாலையில் நாடாகாடு முனி கோயில் பாலம் அருகில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் உள்ளது.

    அவற்றில் ஒரு தென்னை மரம் முற்றிலும் பட்டுப்போன நிலையில் மட்டைகள் காய்ந்து அவ்வப்போது சாலையில் விழுந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்விடத்தை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

    முற்றிலும் பட்டுப்போன தென்னை மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பட்டுப்போன தென்னை மரத்தின் அருகில் மின்சார கம்பிகள் செல்கின்றன. இதனால் பட்டுப்போன மட்டைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்து எரிய வாய்ப்பு உள்ளது. உயிர் சேதங்கள் ஏற்படும் முன்பாக பட்டுப்போன தென்னை மரத்தை அப்புறப்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறியதாவது, இந்த காலகம் - ஆவுடையார் கோயில் சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் அதிகம் உள்ளது. இவற்றை சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.  

    • கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி இரவு சுப்பிரமணியன், கவின்குமாருக்கு சொந்தமான 40 தென்னை மரங்கள் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் நீதிமன்றத்தில் விவசாயி கவின்குமார் வழக்கு தொடர்ந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வடக்கு அவினாசி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 37). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். கவின் குமார் என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி இரவு சுப்பிரமணியன், கவின்குமாருக்கு சொந்தமான 40 தென்னை மரங்கள் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் மரங்கள் முழுவதுமாக பட்டு போனது. இதுகுறித்து கவின்குமார் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இதுகுறித்து பல்லடம் நீதிமன்றத்தில் விவசாயி கவின்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இச்சம்பவம் குறித்து உடனடியாக அவிநாசி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் ஊற்றிய நபரை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவுப்படி சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் மீது அவிநாசி பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    வழக்கு பதிவு செய்து 15 நாட்கள் ஆகியும் இன்னும் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்யவில்லை எனவும், வேளாண்மை துறை சார்பில் ஆசிட் ஊற்றியதால் பட்டுப்போன 40 தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயி கவின்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் சூறாவளி காற்றும், பலத்த இடியும் மின்னியது.
    • ராமச்சந்திரன் தோட்டத்தில் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.

    சூலூர்,

    கோவை சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி அருகே ராயர்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஊர் கவுண்டர் தோட்டம் என்னும் பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் தென்னை மரம் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. நேற்று மாலை சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும், பலத்த இடியும் மின்னியது.

    அப்போது திடீரென வெடிப்பு சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில், தோட்டத்தில் இருந்த 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தென்னை மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகியது.

    இதுகுறித்து தோட்ட உரிமையாளர் ராமச்சந்திரன் கூறும் பொழுது வீட்டில் இருந்தபோது திடீரென பலத்த ஓசை கேட்டதாகவும் வெளியே ஓடி வந்து பார்த்தபோது தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது என்றார்.

    • அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் தென்னங்குருத்துகளை தின்றும் கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின.
    • யானைகள் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் திருமூர்த்தி அணையின் பின்புறம் ஈசல் தட்டு கிழக்கு பகுதி விவசாயிகள் குமார், ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் தென்னங்குருத்துகளை தின்றும் கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின. இதனால் சுமார் 15 மரங்கள் சேதமாகின. தொடர்ந்து யானைகள் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இரவு நேரம் தோட்டத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யானைகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகிறது.
    • கோடையில் மழை நீரை தக்க முறையில் வேரில் சேமிக்க உதவும்.

    குடிமங்கலம் :

    வறண்ட வானிலை நிலவு வதால் தென்னை மரங்களு க்கு உள்சாய்வு வட்டவடிவ பாத்தி அமைக்கலாம் என வேளாண் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகி றது.அதில் திருப்பூர் மாவட்டத்துக்கான சாகுபடி பரிந்துரையில், வறண்ட வானிலை நிலவுவதால் தென்னை மரத்தை சுற்றி உள்சாய்வு வட்ட பாத்திகளை அமைப்பது, கோடையில் மழை நீரை தக்க முறையில் வேரில் சேமிக்க உதவும். சட்டிக்கலப்பை கொண்டு உழவு செய்து கோடை மழையினை சேமிக்க லாம்.காய்கறி பயிர்களில், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கம் தென்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு கரைசலை தெளிக்க வேண்டும்.வாழை சாகுபடியில் 5 மாதத்துக்கு மேல் வளர்ச்சி தருணத்திலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை உயர்ந்தும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்பு ள்ளது. தீவனப்பயிர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் பாசன வசதியுள்ள விவசாயிகள் 10 சதவீத நிலத்தில் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.ஆட்டுக்கொள்ளை நோய் தாக்குதல் ஏற்படுவதை தவிர்க்க கால்நடை மருத்துவ மனையில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். நிலவும் வானிலையால் மா பூங்கொத்துகளில் தத்துப்பூச்சிகளின் தாக்குதல் தென்படுகிறது.ஒரு மில்லி தயோமீத்தக்ஸிம் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு ள்ளது.

    • 4 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.
    • 40 தென்னை மரங்கள் திடீரென கருகியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடக்கு அவினாசி பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுப்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் கவின் குமார் (வயது 31). இவர் சுமார் 4 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்து ள்ளார். இந்த நிலையில் இவரது தோட்டத்தில் இருந்த சுமார் 40 தென்னை மரங்கள் திடீரென கருகியது. இதனை ஆய்வு செய்த கவின்குமார் அதற்கு ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் ஊற்றி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கவின் குமார் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்ம நபர் யார்? முன்விரோதம் காரணமாக யாராவது இதனை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் சுமார் 7 யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக புகுந்தது.
    • வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    7 யானைகள்

    இவை அவ்வப்போது மலையையொட்டி அமைந்துள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் குட்டிகளுடன் சுமார் 7 யானைகள் கூட்டமாக புகுந்தது. அங்கு மனோஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 80 தென்னை மரங்களையும், அவரது தோட்டத்தின் அருகே மற்றொரு தோட்டத்தில் 7 தென்னை மரங்களையும் பிடுங்கி எறிந்தது. தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையி னர் வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இது தொடர்பாக வனத்துறை யினர் கூறுகை யில், யானைகள் தோட்டத்தை சேதப்படுத்து வதை அறிந்து 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து யானைகளை காட்டுக்கள் விரட்டி உள்ளோம்.

    வன விலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க சோலார் மின் வேலியை பராமரித்து அப்பகுதியில் உள்ள அகழியை தூர்வார தேவை யான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம் என்றனர்.

    இந்நிலையில் திரவியம் நகர், பெத்தான் பிள்ளை குடியிருப்பு, மேல ஆம்பூர் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×