search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysterious disease"

    • சிறுவன் மர்ம நோயால் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • தமிழக முதல்வர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து எங்கள் மகன் மர்ம நோயில் இருந்து மீள்வதற்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்

    செம்பட்டி:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் எஸ்.பாறைப்பட்டி தோட்டத்து குடியிருப்பைச் சேர்ந்த மாரிமுத்து-கஸ்தூரி தம்பதியினர். இவர்களது மகன் முகேஷ் (வயது 10) அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்த சிறுவன் முகேஷ் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.

    இதையடுத்து பழனி மற்றும் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், உடல்நிலை முன்னேற்றமடையாததால், மேல் சிகிச்சைக்கு மதுரை அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து தங்கள் வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் நிலங்களை விற்று ரூ.7 லட்சம் வரை செலவு செய்து நவீன பரிசோதனை செய்தனர்.

    இதில் சிறுவன் வில்சன் காப்பர் என்னும் மர்ம நோயால் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் சிகிச்சையின் போதே மாணவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. முகேசுக்கு கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை செய்ய வேண்டும்.

    இது மர்மநோய் என்பதால் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏைழ பெற்றோர் தங்கள் குழந்தையை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இது குறித்து சிறுவனின் தாய் கஸ்தூரி, தந்தை மாரிமுத்து கூறுகையில், 5ம் வகுப்பு படிக்கும் எங்களது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டு பழனி, திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி என பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் உடல் நிலையில் எந்த முன்னேற்றம் இல்லாமல் நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலையில் வீட்டிற்கு வந்து விட்டோம்.

    எனவே, தமிழக முதல்வர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து எங்கள் மகன் மர்ம நோயில் இருந்து மீள்வதற்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர்.
    • தென்னை மரங்கள் காய்ப்புக்கு வர வேண்டிய நேரத்தில் மர்ம நோய்கள் தாக்குவதினால் தென்னை மரங்கள் கருகியும், மஞ்சள் நிறத்தில் மாறியும் வருவதாகவும் கூறுகின்றனர்.

    பணகுடி:

    ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர். தற்போது தென்னை மரங்களுக்கு நோய் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தென்னை மரங்கள் காய்ப்புக்கு வர வேண்டிய நேரத்தில் மர்ம நோய்கள் தாக்குவதினால் தென்னை மரங்கள் கருகியும், மஞ்சள் நிறத்தில் மாறியும் வருவதாகவும் கூறுகின்றனர்.

    இதற்கு பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோய்கள் குணமாவதில்லை. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கூறியும் அதற்கான விளக்கம் அளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த மர்ம நோய்களுக்கு ராதாபுரம் பகுதிகளில் உள்ள பல தென்னைமர விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு அதற்கான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தால் தென்னை மரங்களை பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    ×