என் மலர்
உள்ளூர் செய்திகள்

திராவகம் ஊற்றியதால் கருகிய தென்னை மரம்.
ஆசிட் ஊற்றி தென்னை மரங்களை அழித்த கும்பல்
- 4 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.
- 40 தென்னை மரங்கள் திடீரென கருகியது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடக்கு அவினாசி பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுப்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் கவின் குமார் (வயது 31). இவர் சுமார் 4 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்து ள்ளார். இந்த நிலையில் இவரது தோட்டத்தில் இருந்த சுமார் 40 தென்னை மரங்கள் திடீரென கருகியது. இதனை ஆய்வு செய்த கவின்குமார் அதற்கு ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் ஊற்றி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கவின் குமார் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்ம நபர் யார்? முன்விரோதம் காரணமாக யாராவது இதனை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






