search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்-தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
    X

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பேசிய காட்சி. அருகில் துணைத்தலைவர் செல்வலெட்சுமி அமிதாப் உள்ளார்.

    நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்-தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

    • காலை சத்துணவு திட்டத்தை நடைமுறைபபடுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் விவசாயம் நடை பெறவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    இதில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வ லட்சுமி, பஞ்சாயத்து செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை சத்துணவு திட்டத்தை நடைமுறைப் படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

    பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் விவசாயம் நடை பெறவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் மாநில நிதி குழு மானியத்தில் மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.2 ½ கோடி வழங்கப்பட்டுள்ளது.அதனை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் கூடுதலாக அதே திட்டத்தில் ரூ.10 கோடி கேட்டு தமிழக அரசை வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமன் டேவிட், அருந்த வசு, தனித்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×