search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bills"

    • அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.
    • வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.

    அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டனர்.

    உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது உண்டியல் எண்ணிக்கையில் ரூ.3 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 501 ரூபாயும், தங்கம் 1 கிலோ 860 கிராம், வெள்ளி 24 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    பொதுமக்கள் சார்பில் வேலாண்டி, மோகன் ஆகி யோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். 

    • கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.
    • அதில் 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின்னால் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி பவானி கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    அவ்வப்போது சங்கமேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் திறந்து சமூக ஆர்வலர்கள் மூலம் உண்டியல்களில் உள்ள பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    அதேபோல் பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதிகேசவர் பெருமாள் சன்னதி மண்டபத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.

    அதில் ரூ.15 லட்சத்து 83 ஆயிரத்து 616 ரொக்க பணமாகவும், 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


    • வருடாவருடம் வழக்கமாக 3 கூட்டத்தொடர்கள் நடைபெறும்
    • சிறப்பு கூட்டத்தொடரின் மசோதாக்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகிறது

    ஒவ்வொரு வருடமும் இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக கூட்டப்படும். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றுவரை பாராளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவல்கள் நாளை முதல் புதியதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற துவங்கும்.

    இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்காக எடுத்து கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023, அஞ்சல் அலுவலக மசோதா 2023 மற்றும் மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மற்றும் "இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றம் செய்வது" ஆகிய திட்டங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    • கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர்.
    • 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலுக்கு மர்மநபர்கள் கடந்த 3-ந்தேதி தீ வைத்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் விழுப்புரம் உதவி ஆணையர் திவாகர், ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.

    அதில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நல்ல நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் பிரிக்கப்பட்டது. மேலும், நாணயங்களும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்து போயிருந்தது. மேலும், நல்ல நிலையில் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கோவில் உண்டியலுக்குள் தீ வைத்து பக்தர்களின் காணிக்கைகளை எரித்த மர்மநபர்களை கிளியனூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன.
    • விளக்கங்கள் பெற நேரம் எடுக்கும் என்பதால், ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய மந்திரி அஜய் குமார் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது:-

    2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரப்பெற்ற 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 24 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் இருந்து வரப்பெற்ற 23 மசோதாக்கள், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

    2014- 2022 காலகட்டத்தில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன. இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

    மசோதாக்கள் தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆராயும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கங்கள் மற்றும் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இதுபோன்று ஆலோசனை செயல்முறை, கருத்துகள் மற்றும் விளக்கங்களைப் பெறுவதற்கு நேரம் எடுக்கும். எனவே, ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 3 கோடியே 10 லட்சத்தி 40 ஆயிரத்து 748 இருந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாதாந்திர உண்டியில் எண்ணிக்கை நேற்று காவடி பிறை மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டி யல்கள் திறந்து எண்ணப் பட்டது. சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவா ரப்பணி குழுவினர் உண்டி யல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 3 கோடியே 10 லட்சத்தி 40 ஆயிரத்து 748-ம், உலோகங்கள் தங்கம் 2 கிலோ 800 கிராம், வெள்ளி 25 கிலோ, பித்தளை 33 கிலோ, செம்பு 6 கிலோ, தகரம் 2 கிலோ மற்றும் அயல் நோட்டு 292-ம் இருந்தது.

    உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநி லையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொது மக்கள் பிரதிநிதியாக வேலாண்டி ஓதுவார், கருப்பன், மோகன், அயல் பணி மற்றும் கோவில் பணி யாளர்கள் உடன் இருந்தனர்.

    மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. #LokSabha #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 17-ம் தேதி துவங்கியது. இன்றுடன் இந்த மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி உட்பட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நேரமல்லாத நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    தனது இறுதி உரையில் மக்களுக்கும், மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த மக்களவை மழைக்கால கூட்டத்தொடரில் 17 முறை அவை கூட்டப்பட்டதாகவும், 112 மணி நேரங்கள் அவை நடைபெற்றதாகவும் சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். #LokSabha
    ×