search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி சங்கமேஸ்வரர் கோவில்"

    • கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.
    • அதில் 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின்னால் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி பவானி கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    அவ்வப்போது சங்கமேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் திறந்து சமூக ஆர்வலர்கள் மூலம் உண்டியல்களில் உள்ள பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    அதேபோல் பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதிகேசவர் பெருமாள் சன்னதி மண்டபத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.

    அதில் ரூ.15 லட்சத்து 83 ஆயிரத்து 616 ரொக்க பணமாகவும், 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


    • வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடிக்கம்பத்தில் ரிஷப வாகன கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    சித்திரை தேர் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் புறப்பாடு நடைபெற்று முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் திருத்தே ரோட்டம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் முன்னிலையில் வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பின்னர் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் உற்சவமூர்த்திகள் தேரில் அமர்த்தப்பட்டு மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பவானி தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து நாளை காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. அதேபோல் வருகின்ற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×