என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சித்திரை தேரோட்டம்"
- ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி அருகே பெரிய குரும்பட்டி அடுத்த மாதுப்பட்டியில் 100 ஆண்டு பழமையான ஸ்ரீ காளியம்மன் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழாவும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது. பின்னர் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையடுத்து காளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், விநாயகர் தேரோட்டமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து பல்வேறு பூஜைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) பந்தகாசி விழா நடக்கிறது.
இதையொட்டி காலையில் கங்கை பூஜையும், மேல்நாய்க்கம்பட்டியில் அண்ணாமலை கவுண்டர் தோட்டத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து அங்கிருந்து சாமி ஊர்வலமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
விழாவையொட்டி தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
- மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடிக்கம்பத்தில் ரிஷப வாகன கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
சித்திரை தேர் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் புறப்பாடு நடைபெற்று முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் திருத்தே ரோட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் முன்னிலையில் வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் உற்சவமூர்த்திகள் தேரில் அமர்த்தப்பட்டு மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் பவானி தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நாளை காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. அதேபோல் வருகின்ற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
- தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர்.
- ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது.
அவிநாசி :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வருகிற 25ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர். கோவில் வளாகத்தில் தகர ஷெட்டால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ள தேரை தயார்படுத்து வதற்காக ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் தேர் விழாவிற்கான முகூர்த்த ஆயக்கால் பூஜை நடந்தது.
செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கூறிய போது,தொடர்ந்து தேரை தயார்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்