search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavani Sangameswarar temple"

    • கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.
    • அதில் 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின்னால் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி பவானி கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    அவ்வப்போது சங்கமேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் திறந்து சமூக ஆர்வலர்கள் மூலம் உண்டியல்களில் உள்ள பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    அதேபோல் பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதிகேசவர் பெருமாள் சன்னதி மண்டபத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.

    அதில் ரூ.15 லட்சத்து 83 ஆயிரத்து 616 ரொக்க பணமாகவும், 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


    • பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் பொது ஏலம் நடந்தது.
    • ஏலதாரர்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    பவானி:

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் பின்புறம் உள்ள பரிகார மண்டபத்தில் பரிகார பொருட்கள் விற்கப்படும் உரிமைக்கான ஏலம், பிரசாத கடை, புக் ஸ்டால், ராஜகோபுரம் முன் பகுதியில் உள்ள தேங்காய் பழம் பூ விற்பனை செய்யும் கடைகள் மற்றும் டீக்கடை, ஓட்டல் போன்றவற்றிற்கு ஒராண்டு வாடகை உரிமம் பெறுவதற்கான ஏலம் கோவில் அதிகாரிகள் மூலம் நடைபெறுவது வழக்கம்.

    பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் பசலி 1433 க்கான பலவகை உரிம இனங்கள் பொது ஏலம் நேற்று மாலை ராஜகோபுரம் அருகில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது.

    ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் அன்னக்கொடி, பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சுவாமிநாதன், கோவில் கண்காணிப்பாளர் நித்யா கோவில் பணியாளர்கள் மூலம் ஏலம் விடப்பட்டது.

    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 கடைகளில் நேற்று 17 கடைகளுக்கு ஒராண்டு வாடகை உரிமம், ஆற்றில் துணி சேகரம் செய்யும் உரிமம், ராஜ கோபுரம் முன் உள்ள கோட்டை விநாயகர் கோவி லில் பக்தர்கள் உடைக்கும் சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம், தென்னை மரங்கள் பலன் உரிமம் ஆகிய இனங்க ளுக்கு ஏலம் விடப்பட்டதில் 47.63 லட்சம் ரூபாய்க்கும்,

    கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் பின்பகுதியில் பரிகார பொருட்கள் விற்பனை செய்யும் உரிமை க்கான ஏலம் ரூ. 69 லட்சம் ரூபாய் என ஒரு கோடியே 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடை பெற்று உள்ளதாக சங்கமே ஸ்வரர் கோவில் நிர்வா கத்தினர் தெரிவித்தனர்.

    இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்கள் தங்களுக்கு அடிப்படை வசதியான கழிப்பிட வசதி குடிநீர் வசதி போன்றவையை கோவில் நிர்வாகத்தினர் முறைப்படி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். 

    • வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடிக்கம்பத்தில் ரிஷப வாகன கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    சித்திரை தேர் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் புறப்பாடு நடைபெற்று முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் திருத்தே ரோட்டம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் முன்னிலையில் வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பின்னர் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் உற்சவமூர்த்திகள் தேரில் அமர்த்தப்பட்டு மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பவானி தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து நாளை காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. அதேபோல் வருகின்ற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    பவானி, காவேரி மற்றும் அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், கூடுதுறை என பலர் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் தினசரி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து காவேரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதை தொடர்ந்து கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நலன் கருதி வெப்பத்தை தணிக்கும் வகையில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நீர் மோர் வழங்கும் திட்டத்தை சங்கமேஸ்வரர் கோவில் ஆணையாளர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் சங்கமேஸ்வரர் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு கல் தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது
    • ராஜகோபுரத்தில் 5 நிலைகளில் மகாதீபம் ஏற்றிய பிறகு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    பவானி,

    பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் போன்றவற்றில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், மற்றும் ஆதிகேசவ பெருமாள் சன்னதி ஆகியவை முன்னுள்ள கல் தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் ராஜகோபுரத்தில் 5 நிலைகளில் மகாதீபம் ஏற்றிய பிறகு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். சிவனடியார்கள் சிவபெருமானை பாடல் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.

    அதே போல் பவானி காவேரி வீதியில் அமைந்துள்ள சின்ன கோவில் என அழைக்கப்படும் விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு

    108 வலம்புரி சங்கு பூஜைகள், ருத்ரஜெபம், ருத்ர பாராயணம் உட்பட பல்வேறு பூஜைகளை சின்ன கோவில் சிவா சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    • கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களால் கோவில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
    • பவானி போலீசார் சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் பகுதி, பரிகார மண்டப பகுதி என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக விளங்கி வருகிறது.

    கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறையில் உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகை தரும் காரணத்தால் கோவில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பவானி போலீசார் சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் பகுதி, கோவில் வளாகம், பரிகார மண்டப பகுதி என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் ஜேன் பேக்குகள், உடமைகளை தீவிர பரிசோதனை செய்து கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • சங்கமேஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பின்னர் கோவிலின் உள் பகுதியில் பக்தர்கள் முன்னிலையில் வேதனாகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    பவானி:

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் சன்னதி போன்றவைகள் ஒரே வளாகத்தில் அமையப்பெற்று உள்ளது.

    அதேபோல் கோவில் பின்னால் இரட்டை விநாயகர் சன்னதி, படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் தினசரி உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சங்கமேஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் உள் பகுதியில் பக்தர்கள் முன்னிலையில் வேதனாகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    இதில் பவானி, காளிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், குமாரபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பக்தர்கள் போன் பே, கூகுள் பே, பேடிஎம், பீம் யுபிஐ போன்ற செல்போன் செயலிகளை பயன்படுத்தி காணிக்கைகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின்பகுதியில் உள்ள காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்ன கத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு தினசரி பரிகார பூஜைகள் செய்து வழிபட ஏராளமான உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வருகை தந்து பல்வேறு வகையான பரிகாரங்கள் செய்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நன்கொடை வழங்குவதற்காகவும், காணிக்கை செலுத்துவ தற்காகவும் யுபிஐ ஐடியுடன் கூடிய க்யூஆர் கோடு அட்டைகள் வங்கி சார்பில் கோவில் உதவி ஆணையர் சுவாமி நாதனிடம் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் பக்தர்கள் எந்த ஒரு யுபிஐ ஐடி மூலம் போன் பே, கூகுள் பே, பேடிஎம், பீம் யுபிஐ போன்ற செல்போன் செயலிகளை பயன்படுத்தி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தங்களது காணிக்கைகளை செல்போன் வழியாக செலுத்தலாம் எனவும், கோவிலில் 20 இடங்களில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×