search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special worship at"

    • புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி மங்களகிரி பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    ஈரோடு:

    புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் இன்று அதி காலை பெருமாளுக்கு அபி ஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதை தொட ர்ந்து அவர்கள் மலை படிகளில் நீண்ட வர வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோ விலில் காலை 7 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சா மிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவி ல், கொள ப்பலூர் பெருமாள் கோவில், அழுக்குளி பெரு மாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சி றப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெரு மாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், அந்தி யூர் திருப்பதி பேட்டை பெரு மாள் உள்ளிட்ட கோவில்க ளில் புர ட்டாசி சனிக்கிழ மையை யொட்டி சிறப்பு அல ங்காரத்தில் சாமி பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம், வெள்ளையம்பாளை யம், சின்னத்தம்பி பாளை யம், அ ண்ணா மடுவு, கந்த ம்பாளை யம், பச்சாம் பாளையம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி கவுந்த ப்பாடி சந்தைபேட்டை பழ மையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர். முன்ன தாக பக்த ர்கள் கூடுதுறை யில் நீராடி பெருமாளை வழிபட்டனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிரா யன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வடடார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெரு மாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புஞ்சை புளியம்பட்டி கரிவராஜ பெருமாள் கோவில் இன்று புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

    மேலும் ஈரோடு கோட்டை அழகிரிநாதர் (பெருமாள்) கோவி லில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு அழகிரி நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதி களில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்தி ருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள பெரு மாள் கோவிலில் இன்று பெருமா ளுக்கு அபிஷேகம் செய்யப்ப ட்டது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து பெருமாளுக்கு துளசி அணிவித்து சாமி தரிசனம் செய்தனர்.

    • கரிவராஜ பெருமாள் கோவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவி லில் திருப்பணிகள் நடை பெற்று வருவதால் விநாயகர் கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவரத வரதராஜ பெருமாள். கருடாழ்வார். ஆஞ்சநேயர். கிருஷ்ணர் பாமா ருக்மணி. மற்றும் கோபுரங்கள் அத்தி மரத்தி னால் சிலைகள் அமைத்து பாலாலயம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    புஞ்சை புளியம்பட்டி கரிவராஜ பெருமாள் கோவில் இன்று புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் தாசர்களுக்கு அரிசி பருப்பு, புளி உள்ளி ட்ட பொருட்களை கொடுத்து வழிபட்டனர்.

    • பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு கல் தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது
    • ராஜகோபுரத்தில் 5 நிலைகளில் மகாதீபம் ஏற்றிய பிறகு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    பவானி,

    பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் போன்றவற்றில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், மற்றும் ஆதிகேசவ பெருமாள் சன்னதி ஆகியவை முன்னுள்ள கல் தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் ராஜகோபுரத்தில் 5 நிலைகளில் மகாதீபம் ஏற்றிய பிறகு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். சிவனடியார்கள் சிவபெருமானை பாடல் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.

    அதே போல் பவானி காவேரி வீதியில் அமைந்துள்ள சின்ன கோவில் என அழைக்கப்படும் விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு

    108 வலம்புரி சங்கு பூஜைகள், ருத்ரஜெபம், ருத்ர பாராயணம் உட்பட பல்வேறு பூஜைகளை சின்ன கோவில் சிவா சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.
    • பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.

    இதையொட்டி சென்னி மலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சென்னிமலை அடு த்துள்ள மேலப்பாளையம் ஆதிநாராயணப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம், தீபாராதனை பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்த ர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    இதையொட்டி இன்று காலை பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். மலை மீது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரி சனம் செய்தனர்.

    அதேபோல் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவி யங்கள் அடங்கிய அபி ஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடை பெற்றன. அதை தொடர்ந்து மலையை சுற்றி சிறிய தேர் மூலம் சுவாமி திருவீதி உலா வந்தது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மேட்டு வளவு பெருமாள் கோயில், மொடச்சூர் பெருமாள் கோவில்,கூகலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

    மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட ரமண பெருமாள், சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையம் ெபருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்ட த்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×