என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Parliament special session"
- வருடாவருடம் வழக்கமாக 3 கூட்டத்தொடர்கள் நடைபெறும்
- சிறப்பு கூட்டத்தொடரின் மசோதாக்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகிறது
ஒவ்வொரு வருடமும் இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக கூட்டப்படும். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுவரை பாராளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவல்கள் நாளை முதல் புதியதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற துவங்கும்.
இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்காக எடுத்து கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023, அஞ்சல் அலுவலக மசோதா 2023 மற்றும் மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" மற்றும் "இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றம் செய்வது" ஆகிய திட்டங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
- 1949 செப்டம்பர் 18 அன்று "இந்தியா எனும் பாரத்" என தொடங்கும் வரைவை சபை ஏற்றது
- இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 அன்று செயலாக்கம் பெற்றது
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 அன்று தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.
"அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகஸ்ட் 31 அன்று இதனை அறிவிக்கும்போது தெரிவித்திருந்தார்.
எந்தெந்த பிரச்சனைகள் மற்றும் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது என்றும் என்னென்ன தீர்மானங்கள் முன்மொழியப்படும் அல்லது மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்தும் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், இக்கூட்டத்தொடரில், நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இச்செய்திக்கு ஆதாரம் சேர்க்கும் விதமாக இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கான அழைப்பிதழில் அவர் பெயரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளதை விமர்சகர்கள் சுட்டி காட்டுகின்றனர்.
இதற்கிடையே, இந்தியா-பாரத் பெயர் மாற்ற சர்ச்சை குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்து பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா ஆகஸ்ட் 15, 1947ல் சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இந்தியாவிற்கென ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க 389 பேர் உறுப்பினர் கொண்ட "அரசியலமைப்பு சபை" ஒன்று உருவாக்கப்பட்டது. இச்சபை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஜனவரி 26 அன்றுதான் செயலாக்கம் பெற்றது.
அரசியலமைப்பு சட்டத்தின் சட்டப்பிரிவு 1ல், 'பாரத்' எனும் பெயரும் 'இந்தியா' எனும் பெயரும் இடம் பெறுகிறது.
4 நாட்கள் விவாதம் செய்த இந்திய அரசியலமைப்பு சபை, 1949 செப்டம்பர் 18 அன்று "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் யூனியனாக இருக்கும்" என தொடங்கும் வரைவை ஏற்று கொண்டது.
இதை குறிப்பிட்டு தற்போதைய சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் (செப்டம்பர்) 18 அன்று தொடங்க போவதையும் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் விவாதிக்கின்றனர்.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடப்பதற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.
- சிறப்பு கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வ விவாதங்களை எதிர்பார்ப்பதாக மத்திய மந்திரி தகவல்.
செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்து இருக்கிறார்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், ஜி20 மாநாட்டை தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.
Special Session of Parliament (13th Session of 17th Lok Sabha and 261st Session of Rajya Sabha) is being called from 18th to 22nd September having 5 sittings. Amid Amrit Kaal looking forward to have fruitful discussions and debate in Parliament.ಸಂಸತ್ತಿನ ವಿಶೇಷ ಅಧಿವೇಶನವನ್ನು… pic.twitter.com/k5J2PA1wv2
— Pralhad Joshi (@JoshiPralhad) August 31, 2023
"பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி, செப்டம்பர் 22-ம் தேதி வரை என மொத்தம் ஐந்து அமர்வுகள் நடைபெறுகின்றன. சிறப்பு கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் உரையாடல்களை எதிர்பார்க்கிறேன்," என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்