search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டாலின்"

    கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். #KeralaFlood #MKStalin #DMK
    சென்னை:

    திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கை பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்நிலையில் கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திமுகவின் சார்பில் ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கட்சி நிர்வாகிகளும், இங்குள்ள கட்சி தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக அளிப்பார்கள்'' என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    திமுக பொதுக்குழு வரும் 28-ம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 6-ம் தேதி காலமானார். இதனை அடுத்து, சமீபத்தில் கூடிய அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி மட்டும் பேசப்பட்டது. தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், அடுத்தவாரம் 28-ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு மு.க ஸ்டாலின் தலைமையில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக மு.க அழகிரி அறிவித்துள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூடுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
    கேரளாவில் கனமழை உலுக்கி எடுத்து வரும் நிலையில், வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். #KeralaFloods2018 #MKStalin #DMK
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 37-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நிவாரண நிதி வழங்குமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், திமுக அறக்கட்டளை சார்பில் கேரளாவுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பலியானர்கள் குடும்பத்துக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். 
    துயரச்சுமையை தாங்கி வீட்டுக்கு திரும்பும் தொண்டர்கள் பத்திரமாக செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன் என முக ஸ்டாலின் கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். #KarunanidhiDeath #MKStalin #DMK
    சென்னை:

    திமுக தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் இன்று மாலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், துயரச் சுமையை தாங்கியபடி ஊருக்கு செல்லும் தொண்டர்கள் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன். உடன்பிறப்புகள் பாதுகாப்பாக சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த பின்னரே நான் உறங்கச் செல்வேன் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

    தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ள நிலையில், ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். #KarunanidhiHealth #DMK #MKStalin
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ளதாக மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால், திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், திமுக செயல்தலைவரும் கருணாநிதியின் மகனுமாகிய முக ஸ்டாலின், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, துரை முருகன், அன்பழகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர். 

    இதற்கிடையே, மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில், மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #Karunanidhi #DMK #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று பின்னிரவில் சற்று நலிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.

    கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளையும் பிராத்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று பிற்பகலுக்கு பின்னர் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் சிறுநீரகத்தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக மருவத்துவர்கள் குறிப்பிட்டனர். இதற்கிடையில், இன்று மாலையில் சமூக வலைதளங்களில் கருணாநிதியை பற்றி விரும்பத்தகாத சில தகவல்கள் வதந்திகளாக உலா வந்தன.

    இதனை தொடர்ந்து, வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக மக்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கருணாநிதிக்கு 24 மணிநேரமும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். 

    மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அவரை சந்திக்க வருவதை பொதுமக்களும், தொண்டர்களும் தவிர்க்க என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 49 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். #DMK #Karunanidhi
    சென்னை:

    பெரியார் உடனான கருத்து வேறுபாட்டுக்கு பின்னர் ராயப்பேட்டை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் 1967-ல் தமிழகத்தில் ஆட்சிய பிடித்தது. அப்போது முதல் இப்போது வரை தேசிய கட்சிகள் தமிழகத்தில் தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டதில் திமுகவின் பங்கு அதிகம் என்றே கூறலாம்.

    திமுகவில் தலைவர் என்ற பதவி இல்லாமலேயே அண்ணா கட்சியை தொடங்கினார். காரணம் தலைவர் பதவி தனது வழிகாட்டியாக பாவித்த ஈ.வெ.ரா.பெரியாருக்கானது என்று அந்த இடத்தை அண்ணா காலியாகவே வைத்திருந்தார். மரணம் வரை அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கட்சியின் தலைமை பொறுப்பு யாருக்கு? என்று எழுந்த கேள்வி கட்சியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.



    கருணாநிதிக்கும், நாவலர் என்று அழைக்கப்படும் நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி இருந்த நிலையில், எம்.ஜி.ஆர் உள்பட பல மூத்த தலைவர்கள் முதல்வர் பதவியை கருணாநிதிக்கும், கட்சித்தலைமை பதவியில் நெடுஞ்செழியனை அமர்த்த சம்மதித்தனர்.

    இறுதியில் கட்சிக்கு தலைவர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு கருணாநிதி தலைவராகவும், நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும், எம்ஜிஆர் பொருளாளராகவும் பொறுப்பு வகிப்பது என முடிவானது. 

    1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து இன்று வரை திமுகவின் தலைவர் பொறுப்பில் உள்ள அவர் 49 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்து, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

    திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து அதிமுக, வைகோ பிரிந்து மதிமுக என்று பல கட்சிகள் உருவானாலும் திமுக எனும் இயக்கத்தின் தொண்டர்களை கட்டுக்குலையாமல் தலைவராக கருணாநிதி காத்து வந்துள்ளார். தேசிய கட்சிகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து விட்டு அதே கட்சிகள் உடன் அவர் கூட்டணி வைக்கும் சூழலை பலரும் விமர்சித்துள்ளனர்.



    ஆனால், விமர்சனங்களை தனது வளர்ச்சிக்கு உரமாக போட்டு எதிர்ப்பாளர்களை வாயை மூட வைக்கும் உத்தி கருணாநிதிக்கே வாய்த்த ஒன்று. தற்போது, உடல்நலக்குறைவால் வீட்டில் அவர் ஓய்வில் இருந்தாலும் கருணாநிதியுன் பழைய சுறுசுறுப்புக்கும், வேகத்துக்கும் யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை.

    கருணாநிதி தலைவராக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும் என முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்:-

    கட்சி இதுவரை பல தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இமாலய வெற்றியை ஈட்டியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.

    1977 முதல் 1989 வரை திமுக ஆட்சியில் இல்லாத 13 ஆண்டுகளிலும் திமுக தலைவர் கருணாநிதி கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். 1989-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே பல திட்டங்களைத் தீட்டியதுடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் திமுகவுக்குத் தொடர்பிருப்பிதாக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது.

    தேர்தல்களில் தோல்வியே காணாதவராக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. 13 தேர்தல்களில் பல தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். 1957-ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வுசெய்யப்பட்டார். அதிலிருந்து அனைத்து தேர்தல்களில் வெற்றிவாகை சூடியுள்ளார்.

    என அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
    நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தார்மீக ஆதரவு என்று ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் ஆதரவு? என மைத்ரேயன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். #NoConfidenceMotion #MKStalin
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை அவையில் ஆதரிக்க முடியாது என்றாலும், திமுக தார்மீக ஆதவை அளிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள அதிமுக எம்.பி. மைத்ரேயன், “திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை. அப்படி இருக்க எந்த அடிப்படையில் ஆதரவு? தார்மீக ஆதரவை எல்லாம் வாக்கெடுப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது குறித்து விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை’ என கூறியுள்ளார். #IncomeTaxRaid #EdappadiPalaniswami
    கோவை:

    தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் எஸ்.பி.கே நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு நிறுவனம் தனது வருமானத்திற்கு வரியை கட்டாமல் இருக்கும் போது வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. தமிழக அரசு டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஸ்டாலின் லண்டன் சென்றதும் நன்றாக மழை பெய்து தமிழக அணைகள் நிரம்பி விட்டன. அவர் தமிழகம் திரும்பியதும் மழை நின்று விட்டது. எனது உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பதாக கூறுகின்றீர்கள். எனக்கு தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருக்கின்றனர்.

    திமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 15 சதவிகித லாபத்துடன் டெண்டர் ஒதுக்கப்பட்டது. முட்டை டெண்டர் உரிய முறையில் ஒதுக்கப்படுகிறது. இதில், எந்த முறைகேடும் இல்லை. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்துக்கு ஸ்டாலின் ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். #MKStalin #RahulGandhi
    புதுடெல்லி:

    மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் , கடந்த 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

    இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரும் நாடாளுமன்ற தொடரில் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசி வரும் பிரதமர் மோடி, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.



    ராகுல் காந்தியின் கடிதத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்த திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளில் மகளிர் இடம்பெற கருணாநிதி எப்போதும் ஆதரவாக இருப்பார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் உங்களது முயற்சிக்கு எனது கட்சி சார்பில் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.

    ஸ்டாலினின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘நன்றி ஸ்டாலின். தமிழகத்தின் சிறந்த மகன் மற்றும் உண்மையான தலைவர் போல பேசியுள்ளீர்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் உந்துசக்தியாக இருக்கின்றனர். இதனை, இடஒதுக்கீடு மசோதா உறுதி செய்கிறது. இம்மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது’ என பதில் ட்வீட் செய்துள்ளார். 
    லோக் ஆயுக்தா மசோதாவில் அரசு ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது என்ற தனிப்பிரிவை சேர்த்தன் பின்னணி தற்போது தெளிவாகிறது என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். #IncomeTaxRaid #MKStalin
    சென்னை:

    தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனம் ஆகியவற்றில் சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் அரசு ஊழல் செய்திருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    நெடுஞ்சாலை திட்டங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. 

    இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலங்கோல அ.தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும் அவருடைய பினாமியுமான செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை ரெய்டும், அங்கு கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரொக்கப்பணமுமே சாட்சி



    தன்னுடைய உறவினர்கள், பினாமிகளுக்கு மட்டும் நெடுஞ்சாலைத் துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கி விட்டு,வலிமைமிக்க லோக் ஆயுக்தா அமைப்பில் “காண்டிராக்டுகளை விசாரிக்கக் கூடாது”என்ற தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி நடுங்கி ஏற்படுத்தியதன் பின்னணி தற்போது தெளிவாகிறது

    கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதைய வருமான வரித்துறை  வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடைபெற தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் கஜானாவில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

    என ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
    ×