search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்கு வழங்குவார்கள் - மு.க ஸ்டாலின்
    X

    திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்கு வழங்குவார்கள் - மு.க ஸ்டாலின்

    கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். #KeralaFlood #MKStalin #DMK
    சென்னை:

    திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கை பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்நிலையில் கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திமுகவின் சார்பில் ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கட்சி நிர்வாகிகளும், இங்குள்ள கட்சி தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக அளிப்பார்கள்'' என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×