search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kauvery hospital"

    • ஐ.சி.யு. சிகிச்சை பிரிவில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
    • செந்தில் பாலாஜிக்கு திட உணவுகள் வழங்குவதாகவும், நடைபயிற்சி அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரிவித்தனர்.

    இதையடுத்து கோர்ட்டு அனுமதியின் பேரில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் அவருக்கு பைபாஸ் சர்ஜரி நடத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து ஐ.சி.யு. சிகிச்சை பிரிவில் இருந்த அவரை நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அவருக்கு திட உணவுகள் வழங்குவதாகவும், நடை பயிற்சி அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.

    இன்னும் 20 நாட்கள் வரை அவர் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்றும் இயல்பான நிலைக்கு வரும் வரை மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK #MamataBanerjee
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே சமயம் கருணாநிதியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் அழுதபடி வருவதை கண்ட தொண்டர்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம் கருணாநிதி குணமடைந்து மீண்டு வரவும் பிரார்த்தனை மேர்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய இன்று சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK #MamataBanerjee
    தமிழகம் முழுவதும் மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KalaignarHealth #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சற்று முன்பு வெளியான காவிரி மருத்துவமனையின் அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதேபோல, வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஆம்னி பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    கருணாநிதியின் உடல் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். #KarunanidhiHealth #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.

    கருணாநிதியின் உடல் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் விசாரித்தனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் குடும்பத்தினர் கருணாநிதியின் உடல்நிலை பற்றிய விவரங்களை தலைவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். ஆஸ்பத்திரியில் உடல் நலம் விசாரித்த பிறகு தலைவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:- கலைஞர் உடல் நிலை குறித்து நேற்று வெளியான மருத்துவ அறிக்கை கவலை தருவதாக இருந்தது. இன்று அவருடைய உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டு அறிந்தேன்.

    கலைஞர் அவருடைய மனோதைரியம், நெஞ்சுறுதி ஆகியவற்றால் மீண்டும் நலம் பெற்று வருவார் என்று நம்புகிறேன். தமிழகத் தில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பாதுகாவலரான அவர் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.


    ஜி.கே.வாசன்:- தமிழர்களின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் கலைஞர். இன்று உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கிறார். உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. என்றாலும் உயர்தர மருத்துவ சிகிச்சையால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வீடு திரும்புவார்.

    மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரிடம் கலைஞர் உடல் நலம் பற்றி கேட்டு அறிந்தேன். உடல் நலம் பெற்று வருவார் என்று நம்புகிறேன். மீண்டும் நல்ல நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன்.


    விக்கிரமராஜா:- இந்தியாவில் உள்ள வணிகர் நல்வாழ்வுக்காக பல்வேறு முன் மாதிரி திட்டங்களை தமிழகத்துக்கு தந்தவர் கலைஞர். நெருக்கடியான கால கட்டத்தில் அவர் இருக்கிறார். என்றாலும், பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். அவர் மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து வணிகர்களும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறோம். அதை ஏற்று இந்தியா முழு வதும் வணிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

    பேட்டியின்போது வணிகர்கள் பேரவை நிர்வாகி பாண்டியராஜன் உடன் இருந்தார். #KarunanidhiHealth #KauveryHospital
    கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

    மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். நேற்று மாலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் நிலைப்பற்றிய அறிக்கை வெளியானதும் சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    இரவு 10 மணிக்கு பிறகு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுஇருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து போலீசார் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #KarunanidhiHealth #Karunanidhi #KauveryHospital
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi #KauveryHospital #KarunanidhiHealth
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கழுத்தில் துளையிடப்பட்டு ‘‘டிரக்யாஸ்டமி’’ எனும் கருவி பொருத்தப்பட்டது.

    கடந்த சுமார் 20 மாதங்களாக அவர் அந்த செயற்கை கருவி மூலம் சுவாசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 18-ந்தேதி கருணாநிதிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் டிரக்யாஸ்டமி குழாய் கருவியை மாற்றி விட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டது. அன்றே அவர் வீடு திரும்பினார். சுமார் ஒரு வாரம் இயல்பு நிலையில் இருந்த கருணாநிதிக்கு ஜூலை 26-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    அதுவரை நன்றாக இருந்த கருணாநிதி வயது முதிர்வு காரணமாக முதன் முதலாக உடல் நலிவை சந்தித்தார். காவேரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு வீட்டுக்கு சென்று 2 நாட்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் கருணாநிதி உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவை தடுக்க இயலவில்லை.

    28-ந்தேதி கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிரவு அவர் மூச்சுவிட திணறியதால் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த அழுத்த குறைவு சீராக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் 30 நிமிடம் உட்கார வைக்கும் அளவுக்கு முன்னேற்றம் இருந்தது. இதனால் 3 நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதி கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களும் குறைந்தது. நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்வதே இந்த ரத்த தட்டணுக்கள்தான்.

    கல்லீரல் பாதிப்பு, சிறுநீர் பாதை தொற்று, மஞ்சள் காமாலை, ரத்த தட்டணுக்கள் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை கருணாநிதியின் நாடித்துடிப்பிலும் தொய்வு ஏற்பட்டது. இதனால் கருணாநிதி உடல்நிலை நேற்று மதியம் கவலைக்கிடமாக மாறியது.

    கருணாநிதி உடல் நிலை மோசமானதால் அவரது குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மதியம் 1.45 மணிக்கு தயாளு அம்மாள் வந்தார். கருணாநிதியைப் பார்த்து அவர் கண்ணீர் வடித்தார். நேற்று பிற்பகல் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இதனால் காவேரி ஆஸ்பத்திரி வளாகம் நேற்று மாலை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க ‘‘தலைவா எழுந்து வா’’ என்று கோ‌ஷமிட்டனர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மருத்துவ அறிக்கை காரணமாக தி.மு.க.வினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். மக்கள் மத்தியிலும் நேற்று மாலை முதல் பரபரப்பான மனநிலை காணப்படுகிறது. அனைவரது பார்வையும் காவேரி மருத்துவமனையை நோக்கியே திரும்பியுள்ளது.


    நேற்றிரவு கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு, இன்று காலை மீண்டும் மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தனர். இன்று கருணாநிதிக்கு 11-வது நாளாக டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. ஆனால் முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் கை கொடுக்கவில்லை.

    மருந்துகள் அனைத்தும் ரத்த தட்டணுக்கள் அளவு குறைவு காரணமாக மெதுவாகவே பலன் அளிக்கின்றன. இதன் காரணமாக கருணாநிதி உடல் நிலை இன்றும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் குழு கடுமையாக போராடி வருகிறது.

    கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உலக அளவில் புகழ் பெற்ற டாக்டர் முகம்மது ரேலே வழங்கியுள்ள ஆலோசனையின் பேரில் கருணாநிதிக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அந்த சிகிச்சையை கருணாநிதி உடல் ஏற்றக்கொண்டதா என்பது இன்று பிற்பகலில் தான் தெரியும். அதற்கு ஏற்ப கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய அடுத்தக்கட்ட சிகிச்சை பற்றி முடிவு செய்ய டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    எனவே கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட உள்ள 7-வது அறிக்கை மூலம் தெரியவரும். அதை தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பதட்டமான மனநிலையுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

    தொண்டர்கள் அனைவரும், கருணாநிதி இந்த சவாலிலும் வென்று உடல் நலம் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

    அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகத் தான் காவேரி ஆஸ்பத்திரி முன்பு ‘‘எழுந்து வா தலைவா’’ என்ற கோ‌ஷம் இரவு-பகலாக விண்ணதிர கேட்டுக்கொண்டே இருக்கிறது. #DMKLeader #Karunanidhi #KauveryHospital #KarunanidhiHealth
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகிய நிலையில், கருணாநிதி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து டிரெண்டாகி வருகிறது. #Karunanidhi
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்த மருத்துவமனை இருக்கும் ராயப்பேட்டை பகுதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு பகலாக திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



    இதற்கிடையே பிராதன சமூக வலைதளமான ட்விட்டரிலும் கருணாநிதி (#Karunanidhi) ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் காவேரி ஹாஸ்பிட்டல் (#KauveryHospital), கனிமொழி (#Kanimozhi) உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. #Karunanidhi #KauveryHospital

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ள நிலையில், ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். #KarunanidhiHealth #DMK #MKStalin
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ளதாக மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால், திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், திமுக செயல்தலைவரும் கருணாநிதியின் மகனுமாகிய முக ஸ்டாலின், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, துரை முருகன், அன்பழகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர். 

    இதற்கிடையே, மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில், மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க மத்திய மந்திரி நிதின் கட்கரி, தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். #Karunanidhi #NitinGadkari #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை:

    சென்னை காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக வெளியான தகவல் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீர்படுத்துவதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.



    இதையடுத்து, திமுக கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் காவிரி மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர். அதேசமயம் ஏற்கனவே மத்திய மந்திரி நிதின் கட்கரி கருணாநிதியை சந்திக்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி காவிரி மருத்துவமனைக்கு விரைந்தார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு சென்ற அவர்கள் காவிரி மருத்துவமனையில் இருந்த மு.க ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #Karunanidhi #NitinGadkari #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சிறிது கவலை அளிக்கும் வகையில் அறிக்கை வெளியானதை அடுத்து, மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.



    இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மருத்துவ அறிக்கையால் கவலை அடைந்துள்ள திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு வெளியே குவிந்து வருகின்றனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய மருத்துவ அறிக்கையில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 



    இது தொடர்பாக இன்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை:

    தி.மு.க தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதையடுத்து, இன்று காலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள தொண்டர்கள், கழக நிர்வாகிகள் என அனைவரும் காவிரி மருத்துவமனைக்கு வருவதும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதுமாக இருந்தனர். மேலும், கருணாநிதியை சந்திக்க அவரது மனைவி தயாளு அம்மாள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பு அதிகமானது.

    இந்நிலையில், காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    ×