என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "incometax raid"

    எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது குறித்து விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை’ என கூறியுள்ளார். #IncomeTaxRaid #EdappadiPalaniswami
    கோவை:

    தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் எஸ்.பி.கே நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு நிறுவனம் தனது வருமானத்திற்கு வரியை கட்டாமல் இருக்கும் போது வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. தமிழக அரசு டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஸ்டாலின் லண்டன் சென்றதும் நன்றாக மழை பெய்து தமிழக அணைகள் நிரம்பி விட்டன. அவர் தமிழகம் திரும்பியதும் மழை நின்று விட்டது. எனது உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பதாக கூறுகின்றீர்கள். எனக்கு தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருக்கின்றனர்.

    திமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 15 சதவிகித லாபத்துடன் டெண்டர் ஒதுக்கப்பட்டது. முட்டை டெண்டர் உரிய முறையில் ஒதுக்கப்படுகிறது. இதில், எந்த முறைகேடும் இல்லை. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    லோக் ஆயுக்தா மசோதாவில் அரசு ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது என்ற தனிப்பிரிவை சேர்த்தன் பின்னணி தற்போது தெளிவாகிறது என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். #IncomeTaxRaid #MKStalin
    சென்னை:

    தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனம் ஆகியவற்றில் சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் அரசு ஊழல் செய்திருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    நெடுஞ்சாலை திட்டங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. 

    இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலங்கோல அ.தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும் அவருடைய பினாமியுமான செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை ரெய்டும், அங்கு கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரொக்கப்பணமுமே சாட்சி



    தன்னுடைய உறவினர்கள், பினாமிகளுக்கு மட்டும் நெடுஞ்சாலைத் துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கி விட்டு,வலிமைமிக்க லோக் ஆயுக்தா அமைப்பில் “காண்டிராக்டுகளை விசாரிக்கக் கூடாது”என்ற தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி நடுங்கி ஏற்படுத்தியதன் பின்னணி தற்போது தெளிவாகிறது

    கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதைய வருமான வரித்துறை  வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடைபெற தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் கஜானாவில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

    என ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
    ×