search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டர்கள் பத்திரமாக செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன் - முக ஸ்டாலின்
    X

    தொண்டர்கள் பத்திரமாக செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன் - முக ஸ்டாலின்

    துயரச்சுமையை தாங்கி வீட்டுக்கு திரும்பும் தொண்டர்கள் பத்திரமாக செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன் என முக ஸ்டாலின் கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். #KarunanidhiDeath #MKStalin #DMK
    சென்னை:

    திமுக தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் இன்று மாலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், துயரச் சுமையை தாங்கியபடி ஊருக்கு செல்லும் தொண்டர்கள் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என இரு கரம் கூப்பி வேண்டுகிறேன். உடன்பிறப்புகள் பாதுகாப்பாக சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த பின்னரே நான் உறங்கச் செல்வேன் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×