search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்ரம்"

    • சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார்.
    • சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

    கடந்த மாதம் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். ஒரு மாதம் முழுவதும் எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் , மஞ்சும்மல் பாய்ஸ் என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    சமூக வலைத்தளங்களில் 'கண்மணி அன்போடு காதலன்' பாட்டு மிகவும் வைரலாகியது.

    படத்தை பார்த்து பல தமிழ் பிரபலங்களான கமல், ரஜினிகாந்த, விக்ரம் , சித்தார்த் என பலர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் இதுவரை 220 கோடி ரூபாய் வசூலித்துல்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில் நடிகர் விக்ரம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரான சிதம்பரம் இயக்கத்தில் அடுத்தப்படம் நடிக்கவுள்ளார். சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்கி முடித்தப் பின் விக்ரம் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சியான் 2024 ஆம் ஆண்டு வரிசையாக மிக சுவாரசியமான படங்களில் நடித்து வருகிறார்.

    தங்கலான்,கரிகாலன், கர்ணன், கருடா, என பெரும் படங்களில் நடித்து வருகிறார். சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது  நடித்து வருகிறார். 

    சியான் 62 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிதம்பரம் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது.
    • இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் .


    பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    இந்நிலையில், 'சித்தா' புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட புது படத்தில் நடிகர் விரக்ம் நடிக்க இருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சியான் 62' படத்தை இதற்கு முன் 'மும்பைகார்' மற்றும் 'தக்ஸ்' படங்களை தயாரித்த ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் சியான் விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க தொடங்குகிறார்.




     

    இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்துக்குஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'சியான் 62' படப்பிடிப்பு குறித்த 'அப்டேட்' பகிர்ந்து உள்ளார்.

     அதில் 'சியான் 62' படப்பிடிப்பு தொடர்பாக இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது. இதற்காக நாங்கள் முழு உழைப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் 'என கூறி உள்ளார்


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஸ்பை ஆக்ஷன் படமாக இப்படம் அமைந்துள்ளது.
    • ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மனோஜ் பரமஹம்சா, கதிர் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார்

    இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் துருவ நட்சத்திரம். நடிகர் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன் , ராதிகா, சிம்ரன் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு இப்படத்தின் பேச்சு வார்த்தை நடந்து 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு வேலைகளை துவங்கினர். முதலில் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் நடிகர் விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

     

    ஜான் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். ஸ்பை ஆக்ஷன் படமாக இப்படம் அமைந்துள்ளது. விக்ரம் 'பேஸ்மண்ட்' என அவருக்கென் ஒரு தனி அதிரடிப் படையை வைத்துள்ளார். அந்த படையை வைத்து தீவிரவாதி கும்பல்களை ரகசியமாக தாக்குகிறார் அரசாங்கத்திற்கு தெரியாமல் என்பதே கதைக்களம்.

     

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மனோஜ் பரமஹம்சா, கதிர் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார். போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்துக் கொண்டு இருக்கும் வேலையில் கோவிட் 19 வந்ததால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. 2023 ஆண்டு நவம்பர் மாதம் படத்தை வெளியிடத்திட்டமிட்டனர் ஆனால் படத்தை அந்த தேதியில் வெளியிட முடியவில்லை. நீடித்த நிதி மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக, படம் வெளிவராமல் உள்ளது.

     

    இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் படக்குழுவினரிடம் இருந்து எதிர்பார்க்கப் படுகிறது.

    இம்முறையாவது படம் வெளியாகும் என ரசிகர்கள் மிக எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ்.
    • கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது

    உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். 2018-ஆம் ஆண்டில் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.

    பெரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். அப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்கவுள்ளார்.

    நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கவுள்ளனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    "எனது 5-வது படத்தை நான் இயக்கவுள்ளேன் . மீண்டும் பா.ரஞ்சித் அண்ணாவுடன் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது.
    • மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

    சமீபத்தில் வெளியாகி கேரளாவில் பெரும் ஆதரவு பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களிடமும் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை பரவா பில்ம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

    இதில் ஷோபின் ஷஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்த படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு "ஜான்-இ-மான்"படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படம் பெரும் வசூலினை பெற்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமா முன்னணி பிரபலங்களான நடிகர் விக்ரம், நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்தி சுப்பராஜ், நடிகர் சித்தார்த், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை பார்த்து படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இப்படத்தில் கமல் நடித்த குணா படத்தில் உள்ள கண்மணி அன்போடு காதலன் என்னும் பாடல் இப்படத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதனால் மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதையொட்டி மார்ச் 1 -ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன், மஞ்சும்மாள் பாய்ஸ் படக்குழுவினர் அனைவரையும் அவரின் அலுவகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, குணா படத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    • மூன்று படங்களில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.
    • எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

    விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு. அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்கும் அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

     


    விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.

     


    'சியான் 62' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தில் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதே படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



      இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள "போர்" படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது.

      இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றப் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

      நடிகர் விக்ரம் நடித்த 'டேவிட்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான பிஜாய் நம்பியார், பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.

      டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். 2 நபர்களுக்கு இடையேயான ஈகோ மோதலாக இப்படம் உருவாகியுள்ளது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
      • இந்த படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.

      தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


      இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


      விக்ரம் 62 போஸ்டர்

      இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விக்ரமின் 62-வது படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


      • விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
      • இப்படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

      விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

      இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.


      இதையடுத்து, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

      இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணத்தை திரும்ப கொடுத்தால் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிடலாம் என கடந்த நவம்பர் 22-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து பணத்தை திரும்பி செலுத்தாததால் படத்தை இதுவரை வெளியிட முடியவில்லை.


      இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டிருப்பதால் இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

      • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
      • விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

      இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

      ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

      விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தங்கலான் படம் வரும் 26-ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியானது.

      இந்நிலையில், இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. 

      அதன்படி, தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக பட நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

      • வில்லேஜ் குக்கிங் சேனல் 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது.
      • இந்த யூடியூப் சேனல் மிகவும் பிரபலமாக உள்ளது.

      யூ டியூபில் பலரும் சமையல் சேனல்கள் வைத்திருந்தாலும் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலை கடந்த 2018-ஆம் ஆண்டு சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம், பெரியதம்பி ஆகியோர் தொடங்கினர்.

      இந்த குழுவை முன்னாள் சமையல் கலைஞரான பெரியதம்பி வழி நடத்துகிறார். இந்த சேனல் வெறும் உணவு சமைப்பதால் மட்டும் பிரபலமாகவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கிராமத்து பின்னணியில் உணவு தயாரிக்கப்படுவதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது முன்னிலையில் இருக்கிறது.


      அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தி இவர்களின் சமயலை சுவைத்து பாராட்டினார். மேலும், இந்த குக்கிங் சேனல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தனர். இதன் மூலம் இவர்கள் மேலும் பிரபலமானார்கள்.

      இந்நிலையில், 'விக்ரம்' படத்திற்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்று வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழு தெரிவித்துள்ளது. நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இந்த குழு, "இந்த சேனல் ஆரம்பிக்கும் முன்பே கன்டன்-யை தாண்டி எதுவும் செய்ய கூடாது என்று முடிவு செய்துவிட்டோம். விக்ரம் படத்தில் நடித்ததற்கு கூட ஒரு பைசா வாங்கவில்லை. எவ்வளவு ஆஃபர் வந்தாலும் வேண்டாம் என்று கூறியுள்ளோம்.


      ஏன் ஸ்பான்சர்சிப் கன்டன் செய்யவில்லை என்றால் ஒருவரிடம் நாம் பணம் வாங்கிக் கொண்டோம் என்றால் அவர்களுக்காக வேலை பார்க்க வேண்டும். அவங்களுக்கு என்று நம் வீடியோவில் நேரம் ஒதுக்க வேண்டும். அது எங்களுக்கு சரியாகப்படவில்லை என்றதால் இவ்வாறு செய்கிறோம். அதுமட்டுமல்லாமல் பணத்தின் மேல் ஆசை வரக்கூடாது. யூடியூபில் இருந்து வரும் வருமானம் போதும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கிறோம்" என்று கூறினார்.

      • படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
      • அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர்.

      பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தை உலகம் முழுவதும் உள்ள சில திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் யோசனையில் உள்ளதால் அதன் வெளியீட்டு தேதி ஜனவரி 26-இல் இருந்து தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 'தங்கலான்' திரையரங்குகளில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.

      இதனைத்தொடர்ந்து விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் முதல் முறையாக இணைகிறார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

      விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண். தற்போது தனது ஐந்தாவது படமான 'சியான் 62' படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு மற்றும் ஸ்கிரிப்ட் விவாதத்திற்காக விக்ரம் மற்றும் அருண் குமார் கோவா சென்றுள்ளனர்.

      ×