search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
    • நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.


    சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.


    இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 'லவ் இருக்கா? இல்லையா?' என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


    நடிகை அதிதி ராவ், நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பல படங்களிலும் நடித்துள்ளார். 


    • படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
    • அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தை உலகம் முழுவதும் உள்ள சில திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் யோசனையில் உள்ளதால் அதன் வெளியீட்டு தேதி ஜனவரி 26-இல் இருந்து தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 'தங்கலான்' திரையரங்குகளில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் முதல் முறையாக இணைகிறார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

    விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண். தற்போது தனது ஐந்தாவது படமான 'சியான் 62' படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு மற்றும் ஸ்கிரிப்ட் விவாதத்திற்காக விக்ரம் மற்றும் அருண் குமார் கோவா சென்றுள்ளனர்.

    • சித்தா திரைப்படத்தை இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.
    • சித்தா படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.

    இந்த படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சித்தா படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி சித்தா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நவம்பர் 28-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    • அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'.
    • இப்படத்தை சித்தார்த் தயாரித்திருந்தார்.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'. இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.


    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.


    சித்தா போஸ்டர்

    இந்நிலையில், 'சித்தா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 17-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தார்த் படத்திற்கு நல்ல வரவேற்பு.
    • சித்தா படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார்.

    எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் 'சித்தா'. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சித்தா படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சித்தார்த், "இது அருண்குமாரின் 'சித்தா'. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம்," என்று தெரிவித்தார்.

    • அருண்குமார் 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.


    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவான இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'சித்தா' திரைப்படத்தை பாராட்டி நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சித்தா மிகவும் உணர்திறன் மிக்க விஷயம், மிக இலகுவான முறையில் மிகவும் தெளிவுடன் கையாளப்பட்டுள்ளது. இயக்குனர் அருண் குமாருக்கு வாழ்த்துகள். சித்தார்த் இந்த திரைக்கதையை தேர்ந்தெடுத்து தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.


    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'சித்தா' படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் இப்படம் குறித்து பேசியுள்ளார்.


    அவர் கூறியதாவது, "வித்தியாசமான தமிழ் படங்களை பார்க்க வேண்டும் எடுக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர்களில் ஒருவர் சித்தார். இப்படி சினிமாவை நற்திசையில் நோக்கி நகர்த்தும் பல கலைஞர்களில் முக்கியமான ஒருவர் சித்தார்த். அவர் 'சித்தா' படத்தின் நாயகன். சித்தப்பாவாக இருப்பது மிகவும் கடினம் கூட மிகவும் சந்தோஷமானதும் கூட. இந்த சித்தப்பாவின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். 'சித்தா' திரைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படம் ‘சித்தா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைக்கிறார்.


    சித்தா முதல் தோற்ற போஸ்டர்

    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

    இதையடுத்து சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    • அரசு ஆயுர்வேதா, கல்லூரி, 2 சித்தா கல்லூரி தலா ஒரு யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன.
    • 26 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1660 இடங்கள் உள்ளன.

    சென்னை:

    ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்பிற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

    அரசு ஆயுர்வேதா, கல்லூரி, 2 சித்தா கல்லூரி தலா ஒரு யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள் 259-ம் உள்ளன.

    26 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1660 இடங்கள் உள்ளன. அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது.

    யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்புக்கு கலந்தாய்வு மூலம் டாக்டர்கள் ஜெயின் ராஜ், கதிரேசன், ரமேஷ், வினோத்குமார், அரவிந்த், ரஞ்சித் நடேஷ் ஆகிய 6 மாணவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, இந்த ஆட்சியில் விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல் மற்றும் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நிதி அறிக்கையில் 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் செயல்பாடுகள் அனைத்துமே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

    சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். #NEET
    சென்னை:

    நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மூலம் கலந்தாய்வு  நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணை கொண்டு மாணவர் சேர்க்கை நடத்துமாறு மத்திய அரசு சமீபத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.  இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    இதில், நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சி.பி.எஸ்.இ.-க்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கவுன்சிலிங்கை எப்படி நடத்துவது? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

    மேலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
    ×