என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jigarthanda"

    • தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நடவடிக்கையின் பலனாக புவிசார் குறியீடு பதிவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது.
    • இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக் கருவியாக தஞ்சாவூர் வீணை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின்கீழ் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இயங்கி வருகிறது. இந்த மன்றத்தின் ஒரு அங்கமான காப்புரிமை தகவல் மையம், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து காப்புரிமைகள், பதிப்புரிமைகள் வர்த்தக குறியீடுகள், தொழில்துறை வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற அறிவுசார் சொத்துரிமைக்கு மாநில அளவிலான உதவிகளை வழங்குகிறது.

    அந்த வகையில் ஒரு பொருளின் தரம், தனித்துவம் மற்றும் நன்மதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படக்கூடிய புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த புவிசார் குறியீடு விவசாயம், இயற்கை, கைவினை, உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், தயாரிப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்குவதற்கும், அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை தடுக்கவும் புவிசார் குறியீடு முக்கியமாக கருதப்படுகிறது.

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நடவடிக்கையின் பலனாக புவிசார் குறியீடு பதிவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறது.

    இதில் தஞ்சாவூர் வீணை, திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலை பூண்டு, உடன்குடி பனங்கருப்பட்டி ஆகிய 4 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதிலும் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக் கருவியாக தஞ்சாவூர் வீணை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுமட்டுமல்லாமல், கடந்த 7 மாதங்களில் அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 10 பொருட்களை அடையாளம் கண்டு அதற்கு புவிசார் குறியீடு கேட்டு, புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் விண்ணப்பம் செய்ய உதவியுள்ளது.

    இந்த பட்டியலில், ஜவ்வாது புளி, வந்தவாசி கோரைப்பாய், கொல்லிமலை காபி, கொல்லிமலை பலாப்பழம், பொள்ளாச்சி தென்னை நார், முகவை குழியடிச்சான் சிவப்பு அரிசி, மதுரை அப்பளம், கீழக்கரை தொதல் அல்வா, மதுரை ஜிகர்தண்டா, கன்னியாகுமரி நன்னாரி ஆகியவை அடங்கும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ச.வின்சென்ட் தெரிவித்தார்.

    • ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் 'மாமதுர' பாடலின் வீடியோ இன்று வெளியானது. இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் வெற்றிக்காக படக்குழு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • ஜிகர்தண்டா 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில், ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டதாக நடிகர் தனஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து இருக்கிறார். மேலும் படம் குறித்த தனது கருத்துக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பான பதிவில், "ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டேன். கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான படைப்பு. அற்புதமாக இருப்பது எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாடிக்கையான விஷயமாகிவிட்டது. ராகவா லாரன்ஸ்-இன் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    • 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் நேற்று வெளியானது.
    • இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் பார்த்திபன் 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜிகர்தண்டா -3'

    பார்த்தேன் -FDFS

    என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம்… ஜிகர்தண்டா -2 !

    நான் விமர்சகன் அல்ல.

    நிறை குறை சொல்ல!

    தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால்

    அதன் பெயர் பேய்!

    இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன்.நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது.

    நண்பர் Mr larence

    நண்பர் mr s j surya

    நண்பர் திரு சந்தோஷ் நாராயணன்

    நண்பர் திரு திரு

    நண்பர் திரு கதிரேசன்

    இன்னும் நாயகி உட்பட பலரும்

    யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்.

    மிரட்டும் யானைகளோ நம் கண்களில் நீர் சுரக்க நடிக்கிறார்கள்.

    பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன்

    Jigarthanda -1 நான் நடித்திருக்க வேண்டிய படம்.

    முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி

    தியேட்டரில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜிகர்தண்டா -2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
    • இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'ஜிகர்தண்டா 2' படத்தில் நடித்த மலைவாழ் மக்களுடன் இப்படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், "ஜிகர்தண்டா 2 படத்தை அப்படத்தில் நடித்த தண்டிக்குடி மக்களுடன் திரையரங்கில் பார்த்தேன். பெரிய திரையில் வருவதை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர்களை பார்த்து மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்
    • சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா.

    சென்னையில் விளம்பர மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் சஞ்சனா நடராஜன். இவர் இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0, பாலாஜி மோகனின் வலைத் தொடரான 'அஸ் ஐம் சப்ரிங் பிரம் காதல்' ஆகியவற்றில் நடித்து புகழடைந்தார்.

    ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    அதோடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தில் எஸ். ஜே. சூர்யா விற்கு இணையாக நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா. அதில் இவர்கள் இருவருக்கும் இடையிலான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப் பட்டது.

    தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சஞ்சனா, இந்தக் கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்பட கலைஞரான ஹ்ரிஷி, சஞ்சனாவை அழகாக படம்பிடித்துள்ளார்.

     

    இந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சனா, கடற்கரையில் வெள்ளை நிற ஆடையில் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நிமிஷா சஜயன்.
    • ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் எந்த வெப் தொடரில் நடித்துள்ளார்.

    சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நிமிஷா சஜயன்.

    தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . படத்தில் அவரது நடிப்பை லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஒவ்வொரு விழாக்களிலும் பாராட்டினார்கள்.

    அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பாராட்ட வைத்தது.

    தொடர்ந்து ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் எந்த வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் விரைவில் வெளியாக இருக்கிறது.

    சினிமா மற்றும் வெப் தொடர்களில் பிசியாக நடித்து வரும் நிமிசா சஜயன் சமூக வலைத்தளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டு அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில் அருவி ஒன்றில் ஆனந்தமாக குளித்து மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிமிஷா சஜயன்.

    இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவர்ச்சியாகவும் நடிப்பதற்கு நிமிஷா ரெடி என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    தற்போது 100 படத்தில் நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். #Atharvaa
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா.

    இந்த படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பக்கபலமாக அமைந்தது.



    இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. இதில் சித்தார்த் வேடத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாலினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
    ×