search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜிகர்தண்டா- 3 பார்த்தேன்.. அதிர்ச்சியடைய வைத்த பார்த்திபன்
    X

    ஜிகர்தண்டா- 3 பார்த்தேன்.. அதிர்ச்சியடைய வைத்த பார்த்திபன்

    • 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் நேற்று வெளியானது.
    • இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் பார்த்திபன் 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜிகர்தண்டா -3'

    பார்த்தேன் -FDFS

    என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம்… ஜிகர்தண்டா -2 !

    நான் விமர்சகன் அல்ல.

    நிறை குறை சொல்ல!

    தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால்

    அதன் பெயர் பேய்!

    இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன்.நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது.

    நண்பர் Mr larence

    நண்பர் mr s j surya

    நண்பர் திரு சந்தோஷ் நாராயணன்

    நண்பர் திரு திரு

    நண்பர் திரு கதிரேசன்

    இன்னும் நாயகி உட்பட பலரும்

    யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்.

    மிரட்டும் யானைகளோ நம் கண்களில் நீர் சுரக்க நடிக்கிறார்கள்.

    பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன்

    Jigarthanda -1 நான் நடித்திருக்க வேண்டிய படம்.

    முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி

    தியேட்டரில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×