என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதலமைச்சர் பழனிசாமி"
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ். நாகப்பட்டினம் மாவட்டம், ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். புதுக்கோட்டை மாவட்டம், குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்காளை.
தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ். பெரம்பலூர் மாவட்டம், திருவாளந்துறை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்.
நாகப்பட்டினம் மாவட்டம், கிடாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார். ஆறுபாதி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தகணேஷ். மதுரை மாவட்டம், செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி. மதுரை மாவட்டம், மேலக் குயில்குடி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால்.
வேலூர் மாவட்டம், நம்பரை கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி, நடராஜ் மனைவி மீனா. நாகப்பட்டினம் மாவட்டம், வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜன்.
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வேலு மனைவி சாந்தி. காஞ்சிபுரம் மாவட்டம், ஜமீன் எண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம். திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.
நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி சகுந்தலா. சேலையூரைச் சேர்ந்த சங்கர் மகன் கிஷோர் மற்றும் சிவானந்தம் மகள் சௌமியா.
திருவண்ணாமலை மாவட்டம், இளங்காடு மதுரா கயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த துரை. கோயம்புத்தூர் மாவட்டம், கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாபு ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
விருதுநகர் மாவட்டம், கான்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி, புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் மகள் ரம்யா ஆகியோர் பாம்பு கடித்ததில் உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 23 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 23 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்