search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vice president venkaiah naidu"

    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் சென்றடைந்தார். #VenkaiahNaidu #ASEM2018
    பிரஸ்ஸல்ஸ்:

    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்று தொடங்குகிறது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பு நல்க ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இது மிகவும் முக்கியமான கூட்டமாக அமைந்துள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சை சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    பெல்ஜியம் சென்றுள்ள வெங்கையா நாயுடு, அந்நாட்டு அரசர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

    மேலும்,, அந்நாட்டில் உள்ள ஜெயின் கலாச்சார மையத்தில் பெல்ஜியம்வாழ் இந்திய மக்களிடம் உரையாற்ற உள்ளார். அதன் பின்னர், பிரஸ்ஸல்ஸின் ஆண்ட்வர்ப் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #VenkaiahNaidu #ASEM2018
    மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் கல்லூரியின் பிளாட்டினம் ஜூப்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார்.

    இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். #TirupatiTemple #VenkaiahNaidu
    திருமலை:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

    இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். திருப்பதி கோவிலில் முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டும்.


    திருப்பதி தேவஸ்தானம் முக்கிய பிரமுகர்கள் ஒரு முறை மட்டுமே சாமி தரிசனம் செய்யும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும்.

    தமிழக முதல்-அமைச்சர் தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வேறு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவோயிஸ்டுகள் குறித்து கேட்ட கேள்விக்கு கோவிலில் இதுகுறித்து எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்றார்.  #TirupatiTemple #VenkaiahNaidu
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். #TirupatiTemple #VenkaiahNaidu #EdappadiPalaniswami
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு காரில் திருமலைக்கு வந்தார்.

    அவர்கள், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருமலையில் உள்ள வராகசாமி கோவில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து நடந்தே பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்றனர்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமலைக்கு வந்ததையொட்டி, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது. முன்னதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்று பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை போர்த்தினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி சென்றார். அங்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை அணிவித்தபோது எடுத்த படம்.

    அப்போது இருவரும் சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் நடந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.

     திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி சாமி தரிசனம் செய்த காட்சி.

    தரிசனத்திற்குப் பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி கவுரவித்தனர். ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சாமி கோவில் அருகே தேங்காய் உடைத்து பின்னர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தார்.

    ஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று காலையில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    தமிழக முதல்-அமைச்சர் தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வேறு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. மாவோயிஸ்டுகள் குறித்து கேட்ட கேள்விக்கு திருமலையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.  #TirupatiTemple  #VenkaiahNaidu #EdappadiPalaniswami
    ஒரு வாரம் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மால்டா நாட்டின் அதிபரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #MaltaPresident #MarieLouiseColeiroPreca
    வல்லெட்டா:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.

    இதைத்தொடர்ந்து, வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



    இந்நிலையில், தனது பயணத்திட்ட நாடுகளில் ஒன்றான மால்டாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்றடைந்தார். அரசு மரியாதையுடன் வரவேற்பு பெற்ற ஜனாதிபதி பின்னர் அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோ ப்ரெகாவை சந்தித்தார்.

    இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் மற்றும் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. #VenkaiahNaidu #MaltaPresident #MarieLouiseColeiroPreca
    சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #Chicago #WorldHinduCongress #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1892-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இந்து சமயம் பற்றி ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. அந்த நிகழ்வின் 125-வது ஆண்டையொட்டி உலக இந்து சமய மாநாடு சிகாகோ நகரில் வருகிற 7-ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
     
    அகில உலக இந்து அமைப்புகள், உலக அளவிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் உள்பட 3 அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்து சமயத்தை பின்பற்றி உலகம் முழுவதும் பணியாற்றும் பல்துறை வல்லுனர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஷ்வரன் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். தமிழகத்தில் இருந்து பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் உலக இந்து சமய மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chicago #WorldHinduCongress #VenkaiahNaidu
    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று விருதுகளை வழங்கினார். #NationalTeachersAwards
    புதுடெல்லி:

    சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸதி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


    இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. #NationalTeachersAwards
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார். துணை ஜனாதிபதியின் புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #VenkaiahNaidu
    புதுச்சேரி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார்.

    சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் வரவேற்றனர்.

    இதையடுத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கார் மூலம் காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

    அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். அங்கு மதிய உணவுக்கு பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் கட்டப்பட்டு உள்ள உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம், விடுதி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. அதில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர் செல்லும் சாலைகளின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு 50 அடி தூரத்துக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். #VenkaiahNaidu
    துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை காலை புதுவை வருகிறார்.
    புதுச்சேரி:

    துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை (வெள்ளிக் கிழமை) காலை புதுவை வருகிறார்.

    காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக் கழகத்துக்கு செல்லும் அவர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பின் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் லாஸ் பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

    புதுவைக்கு நாளை வரும் வெங்கையா நாயுடுவை வரவேற்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    புதுவை பல்கலைக்கழகத்தில் வருகிற 6-ந் தேதி நடைபெறும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் இருந்து புதுவை வருகிறார். #VicePresidentVenkaiahNaidu
    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் வருகிற 6-ந் தேதி மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

    புதுவை பல்கலைக்கழக மாணவர்களுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துரையாடுகிறார். இதற்காக 6-ந்தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புதுவை விமான நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வருகிறார்.



    அங்கு அவரை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை பல்லைக்கழகம் செல்கிறார்.

    புதுவை பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து புதுவை அரசு சார்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். அன்றைய தினம் மாலையே டெல்லி புறப்பட்டு செல் கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #VicePresidentVenkaiahNaidu

    பெரு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Peru
    லிமா:

    துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு முதல் முறையாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

    முதல் கட்டமாக கவுதமாலா நாட்டுக்கு சென்ற நாயுடு, கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற வெங்கையா நாயுடு, பனாமா ஜனாதிபதி ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இசபெல் செயிண்ட் மாலோ ஆகியோரை சந்தித்தார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



    இந்நிலையில், துணை ஜனாதிபதி மூன்றாவது கட்ட பயணமாக பெரு நாட்டுக்கு சென்றார். தலைநகர் லிமாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்று சுற்றிப் பார்த்தார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Peru
    பனாமா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Panama
    பனாமா சிட்டி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவுதமாலா, பனாமா மற்றும் பெரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல் கட்டமாக டெல்லியில் இருந்த புறப்பட்ட அவர், ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தில் இரண்டாம் கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரது முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Panama
    ×