search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one month salary"

    அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்குவர் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #GajaCycloneRelief
    புதுடெல்லி:

    தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கஜா புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை தயாரித்துக் கொண்டு இன்று காலை டெல்லி சென்றார்.

    அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார். 
    கஜா புயல் நிவாரணமாக 15,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-



    கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை மாலை தமிழகம் வருகிறது. நாளை தமிழகம் வரும் மத்தியக்குழுவினர் புயல் பாதித்த பகுதிகளில் 3 நாட்கள் ஆய்வு செய்கின்றனர்

    புயல் பாதித்த பகுதிகளின் புகைப்படங்களை பிரதமரிடம் காண்பித்து நிதி கோரப்பட்டுள்ளது. தமிழக அரசு கோரியுள்ள நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்குவார்கள் என தெரிவித்தார். #GajaCycloneRelief #AIADMK #EdappadiPalanisamy
    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #UPMLAS
    லக்னோ:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு உ.பி. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் அளிக்க உள்ளோம். மேலும், எம்.எல்.ஏ நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நேற்று நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும், திமுக தலைவர் கருணாந்தியின்  மறைவுக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #UPMLAS
    கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #Banwarilalpurohit
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை பாதிப்பால் இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ள பாதிப்புக்கு ஆளான கேரளாவில் முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு ஒருமாத சம்பளத்தை வழங்க உள்ளேன் என அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக மற்றும் திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #Banwarilalpurohit
    மத்திய சாலை, நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்னரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கங்கை நதி தூய்மை பணிக்காக ஒருமாத சம்பளத்தை அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார். #NitinGadkari #CleanGangaFund
    புதுடெல்லி:

    கங்கை நதியை தூய்மை செய்ய தனி அமைச்சகம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு தற்போது தூய்மை செய்யும் திட்டத்திற்கு நிதியை நன்கொடை மூலமாக பெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய சாலை, நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கூறுகையில்:-

    கங்கை நதியை தூய்மை செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து நிதி பெறப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 250 கோடி ரூபாய் வரை நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது.



    கங்கை நதியை தூய்மை செய்வதற்காக, ஒருமாத சம்பளத்தை நன்கொடையாக அளிக்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

    கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு பொதுமக்களும் அவர்களால் இயன்ற பண உதவியை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம்   அளிக்கலாம். கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு அளிக்கப்படும் நிதிக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும்

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×