search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்கால கூட்டத்தொடர்"

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கியது
    • விவாதங்களை எடுத்து வைப்பது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின்மீது நேற்று விவாதம் தொடங்கியது. இன்று விவாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

    இந்த விவாதத்தின்போது, ஆளுங்கட்சி எம்.பி.க்களை எவ்வாறு எதிர்கொள்வது, விவாதங்களை எப்படி எடுத்து வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் என்றால், அதன் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் 10.30 மணியில் நடைபெற இருக்கிறது.

    அதேபோல், காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இருக்கிறது.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தின்போது பிரதமர் மோடி பதில் அளிக்க இருக்கிறார்
    • இன்று காலை பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்களை சந்தித்து பேசினார்

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது இன்று விவாதம் தொடங்க இருக்கிறது.

    விவாதத்தை எப்படி எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து பிரதமர் மோடி, பாரளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பிரதமர் அவர்களிடம் பேசும்போது ''எதிர்க்கட்சிகள் சமூகநீதி பற்றி பேசுகிறார்கள். ஊழல் அரசியல், வாரிசு அரசியல் போன்றவற்றால் சமூக நீதிக்கு தீங்கு விளைவித்தவர்கள். எதிர்க்கட்சிகள் பரஸ்பர அவநம்பிக்கையால் நிறைந்துள்ளன. அதன் வெளிப்பாடு காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

    சிலர் மாநிலங்களவையில் நடைபெறும் வாக்கெடுப்பு 2024-ம் தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக இருக்கும் என்றார்கள். அரையிறுதியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கூறிய  எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடக்கம்
    • பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்தும், எதிர்க்கட்சிகள் இதை கொண்டு வந்துள்ளது

    பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் கூறுகையில் ''இன்று மக்களவையில் நம்பிக்கையில்லாத தீர்மானம் மீது விவாதம் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முதலில் பேசுவார்.

    எங்களுடைய பிரச்சனை மணிப்பூர் விவகாரம் குறித்தது மட்டுமே. பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டும், விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். ஆனால், பிரதமர் மோடி அதற்கு தயாராக இல்லை.

    அதனால்தான் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். உண்மையிலேயே, மக்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடையாது, ஆனால், மோடி என்ன சொல்லப் போகிறார்? என்பதை தெரிய விரும்கிறோம்.'' என்றார்.

    • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மறுப்பு
    • நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதுதான் ஒரே தீர்வு என எதிர்க்கட்சிகள் முடிவு

    மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விளக்கமான அறிக்கையை பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கமாட்டார் என மத்திய அரசு தெரிவித்தது.

    இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று முதல் விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.

    அதன்படி இன்று மக்களவையில் விவாதம் தொடங்க இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கவுரவ் கோகாய், மணிஷ் திவாரி, தீபக் பாய்ஜ் ஆகியோர் நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து பேசுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால், எம்.பி. பதவி பறிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் நேற்று மக்களவை அலுவலில் ராகுல் காந்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது
    • குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் தடை

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் டுவிட்டர் முகப்பு பகுதியில் மக்களவை உறுப்பினர் (Member of Parliament) என குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக, மக்களவை செயலகம் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஆணை பிறப்பித்தது.

    இதனால் தனது டுவிட்டர் முகப்பில் பராளுமன்ற உறுப்பினர் என்பதை நீக்கிவிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ராகுல் காந்தியின் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சபாநாயகர் மற்றும் மக்களவை செயலகத்திடம் முறையிட்டனர்.

    இதனால் இன்று காலை மக்களவை செயலகம், ராகுல் காந்தி மீதான தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றதை உறுதி செய்தது. இதனால் அவர் மக்களவையில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு பகுதியில் (Dis'Qualified MP) என்பதை மீண்டும் Member of Parliament என மாற்றியுள்ளார்.

    • ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு
    • இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிப்பு

    உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் எம்.பி., ஆனார்.

    தகுதி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி பாராளுமன்றம் வருவதாக காங்கிரஸ் சார்பில தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், முன்னதாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

    மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியதும், அவையில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்தார். பாராளுமன்றம் காந்தி சிலை முன் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் காந்தி வாழ்க என முழக்கமிட்டு அழைத்து சென்றனர்.

    அதன்பின் ராகுல் காந்தி மக்களவையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • அவை ஒத்திவைக்கும் வரை உறுப்பினர்கள், அங்கேயே இருக்க உத்தரவு
    • பா.ஜனதா கூட்டணிக்கு பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதர்வு

    நிர்வாகத்தில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநகருக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது. இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது.

    உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு டெல்லி அரசுக்கு முட்டுக்கட்டை போட்டது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி நிர்வாகம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்து, பெரும் அமளிக்கு இடையே நிறைவேற்றியது.

    இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலங்களவையில் எப்படியாவது தோற்கடித்துவிட கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டார். இதனால் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கட்டாயம் எதிர்க்கும்.

    இதனால் காங்கிரஸ் மற்றும் ஆத்மி கட்சிகள் தங்களுடைய எம்.பி.க்கள் தவறாமல் மாநிலங்களவைக்கு வரவேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைமை கொறடா ''இன்று நடைபெறும் அவைக் கூட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அவை ஒத்திவைக்கும் வரை, அவையில் இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.களுக்கும் கொறாடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 100 எம்.பி.க்களுக்கு மேல் உள்ளனர். ஏற்கனவே பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 238 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் மற்றும் சில கட்சிகளுடன் சேர்ந்து மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு போதுமான எண்ணிக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்வதாக அதிருப்தி
    • நேற்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது.

    இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர் இருக்கைக்கு வரவில்லை. ராஜேந்திர அகர்வால் தலைமை தாங்கினார். அப்போது காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ''அவை நடவடிக்கைகளை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவர் எங்களுடைய பாதுகாவலர்'' என்றார்.

    உடனே, இன்று அவைத்தலைவராக இருக்கும் ராஜேந்திர அகர்வால், ''இந்த தகவலை அவருக்கு தெரிவிக்கிறேன்'' என்றார்.

    முன்னதாக,

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு மக்களவையில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார்.

    குறிப்பாக நேற்றுமுன்தினம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • மத்திய அரசு ஓய்வூதியமாக குறைந்தபட்சம் 9 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது
    • 44,81,245 பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்

    மத்திய அரசு பணியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் இறந்தபின் அவர்களின் குடும்பத்தினர் ஓய்வு ஊதியங்கள் பெற்று வருகின்றனர். அவர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து பாராளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்தார் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங். அவர் அளித்த பதிலில் ''தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தும் எண்ணம் இல்லை.

    தற்போது 44,81,245 ஓய்வூதியர்கள் உள்ளனர். இதில் 20,93,462 பேர் குடும்ப ஓய்வூதியர்கள் ஆவார்கள். 2022-2023 நிதியாண்டில் 2,41,777.55 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படும் அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படும்'' என்றார்.

    • நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
    • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிப்பார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.

    மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் கொடூரம் நிகழ்த்தப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

    மணிப்பூர் சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று பிற்பகல் மத்திய, மாநில அரசுகளின் வக்கீல்கள் வாதத்திற்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக மணிப்பூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தற்போது நடந்து வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது. மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க கோரி இன்று 9-வது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது விதியாகும்.

    அதன்படி பாராளுமன்றத்தில் வருகிற 8-ந்தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி எம்.பி.க்களும் இதுதொடர்பாக பேச வாய்ப்பு வழங்கப்படும். இதன்காரணமாக மறுநாள் 9-ந்தேதியும் விவாதம் நீடிக்கும்.

    10-ந்தேதியும் விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. அன்று பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிப்பார். அவர் பேசி முடித்த பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

    சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும்.

    • நிர்வாகத்தில் அதிகாரிகளை நியமிப்பதில் மத்திய அரசு- கெஜ்ரிவால் இடையே மோதல்
    • உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்த நிலையில், சட்ட திருத்தம்

    டெல்லி மாநிலத்தில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும், டெல்லி மாநில முதல்வரான கெஜ்ரிவாலுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக கெஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது மாநில அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    இதனால் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இன்று சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி. சுஷில் குமார் ரிங்கு கூறுகையில் ''ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மசோதாவிற்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற அவைக்கு கொண்டு வந்து, அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவது அரசியலமைக்கு எதிரானது. மேலும், அம்பேத்கரின் அரசியலமைப்பை அவமதிப்பதாகும்.

    மத்திய அரசு ஆம் ஆத்மி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகழ் அதிகரித்து வருவதை கண்டு பயந்துள்ளது.'' என்றார்.

    • மாநிலங்களவையில் கடந்த 27ம்தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் குறுகிய காலம் விவாதிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விவாதம் நடத்த வேண்டும் என்றும், பிரதமர் பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவுகிறது. இந்த அமளிக்கு மத்தியிலும் சில முக்கிய மதோக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அவ்வகையில், மக்களவையில் இன்று கடும் அமளிக்கிடையே ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாளை காலை 11 மணிக்கு இனி மக்களவை கூடும்.

    ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 27ம்தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. 

    மாநிலங்களவையில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தினர். இதனால் அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன.

    ×