search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "monsson session"

    • எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்வதாக அதிருப்தி
    • நேற்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது.

    இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர் இருக்கைக்கு வரவில்லை. ராஜேந்திர அகர்வால் தலைமை தாங்கினார். அப்போது காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி ''அவை நடவடிக்கைகளை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவர் எங்களுடைய பாதுகாவலர்'' என்றார்.

    உடனே, இன்று அவைத்தலைவராக இருக்கும் ராஜேந்திர அகர்வால், ''இந்த தகவலை அவருக்கு தெரிவிக்கிறேன்'' என்றார்.

    முன்னதாக,

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு மக்களவையில் தொடர்ந்து உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளார்.

    குறிப்பாக நேற்றுமுன்தினம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தமடைந்தார். அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைப்பதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டேன் என கூறியதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சபாநாயகரின் அதிருப்தி குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கியபோது ஓம் பிர்லா சபாநாயகருக்கான இருக்கையில் இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை தலைமை தாங்கி நடத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒழுங்கை பராமரிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் அவையில் அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
    • நாங்கள் தயாராக இருக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இதுவரை விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்ற பின்னர்தான் மற்ற அலுவல் பணிகள் தொடர வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபின் மசோதாக்கள் நிறைவேற்றப்படக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டு வரும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

    இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று பாராளுமன்றம் கூடியது. மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவையில மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசுகையில் ''பாராளுமன்றத்தில் நாங்கள் இன்று மதியம் 2 மணிக்கு மணிப்பூர் விவகாரத்தை விவாவதத்திற்கு எடுக்க விரும்புகிறோம். எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களுக்கான சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அரசு மணிப்பூர் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் முக்கியமான 9 நாட்களை வீணடித்துவிட்டது'' என்றார்.

    விவசாயிகள் உரிமைகளை மீட்டுத்தர கோரி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வெளியே இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #ParlimentMonsoonSession #Congress #YSRCongress
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. 
        
    இந்நிலையில், விவசாயிகள் உரிமைகளை மீட்டுத்தர கோரி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வெளியே இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடாளுமன்றத்தின் வெளியே திரண்ட காங்கிரசார் தங்கள் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்தும், விவசாயிகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இதேபோல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #ParlimentMonsoonSession #Congress #YSRCongress
    ×