search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament Monsoon Session"

    • நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
    • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிப்பார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.

    மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் கொடூரம் நிகழ்த்தப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

    மணிப்பூர் சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று பிற்பகல் மத்திய, மாநில அரசுகளின் வக்கீல்கள் வாதத்திற்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக மணிப்பூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தற்போது நடந்து வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது. மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க கோரி இன்று 9-வது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது விதியாகும்.

    அதன்படி பாராளுமன்றத்தில் வருகிற 8-ந்தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி எம்.பி.க்களும் இதுதொடர்பாக பேச வாய்ப்பு வழங்கப்படும். இதன்காரணமாக மறுநாள் 9-ந்தேதியும் விவாதம் நீடிக்கும்.

    10-ந்தேதியும் விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. அன்று பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிப்பார். அவர் பேசி முடித்த பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

    சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு சார்பில் நாங்கள் விவாதத்திற்கு தயார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
    • எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என வலியுறுத்துகிறது

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை பற்றி எரிகிறது. இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து மவுனம் காத்து வந்தார். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம், மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேவேளையில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.

    எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் பாராளுமன்றம் 2-வது நாளாக முடங்கியுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசு சொல்வது என்ன?. எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன? என்பதை பார்ப்போம்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

    நான் மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால், எனக்கு வாய்ப்பு வழங்கப்படவிலலை. இந்த விவகாரம் குறித்து அரசு விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச வேண்டும். பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி பேசுகிறார். அவர் பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத்

    இது மிகவும் முக்கியமான விசயம். மணிப்பூர் வன்முறை பற்றி சர்வதேச அமைப்பில் பேச வேண்டும். நமது பாராளுமன்றத்தில் இல்லை. ஏன் நீங்கள் (மத்திய அரசு) மணிப்பூர் சட்டம்-ஒழுங்கை பற்றி பேசவில்லை. நிர்பயா விவகாரத்தில், பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்த போது அரசை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால் தற்போது இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா

    மணிப்பூர் வன்முறை நமது ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மத்திய அரசு தூக்கத்தில் இருந்து எழுந்து, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். மணிப்பூரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய ஒட்டு மொத்த மக்களும் விரும்புகிறார்கள். மணிப்பூர் அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறோம்.

    காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி

    இந்த நேரத்தில் இதை வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிடுவதைவிட துரதிர்ஷ்டவசமானது வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவும் கடந்த 77-478 நாட்களாக மணிப்பூரில் அராஜக சூழ்நிலை நிலவுகிறது. அரசு மற்றும் நிர்வாகம் அங்கு சீர்குலைந்துள்ளது என்பதை சொல்வது தவறாக இருக்க முடியாது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் பேசுவது அவரது வேலை இல்லையா?. அதனால் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

    எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

    சபாநாயகர் எப்போது உத்தரவு பிறப்பித்தாலும், விவாதிக்க தயாராக இருக்கிறோம். சபாநாயகர் மற்றும் மாநிலங்களை தலைவரிடம் நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் புதிய கோரிக்கைகளை வைப்பது, விவாதங்களை தடுப்பது தவறு

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவது பற்றி எதிர்க்கட்சிகள் முக்கியமானதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அரசு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தால் நாடே வெட்டுகப்படுகிறது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றால், அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

    மத்திய மந்திரி அனுராக் தாகூர்

    விவாதங்களைத் தவிர்க்கவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவும் எதிர்க்கட்சிகள் சில அல்லது வேறு சாக்கு போக்குகளை கூறுகின்றன. பாராளுமன்றத்தில் இருந்து சிலர் வெளியேறுகின்றனர். பாராளுமன்றம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. பாராளுமன்ற விவாதத்தில் இருந்து அவர்கள் ஏன் ஓட வேண்டும்?. அவர்களுடைய அரசியல்வாதிகள் நீண்ட நாட்கள் பாராளுமன்றத்தில் சேவை ஆற்ற முடியாது என்பதாலா? அல்லது அவர்களுடைய அரசின் ஓட்டைகள் வெளிப்படும் என்பதாலா?.

    பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா

    காங்கிரஸ் கட்சி ஜனநாயத்தில் பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் விவாதம் நடத்த விரும்பாது. காங்கிரஸ் அதிகாரத்திற்கும் வரும்போதெல்லாம், ஜனநாயகத்தை நசுக்க முயற்சிக்கும். கர்நாடகாவில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தல்
    • கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளே எதிர்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் கொடூரம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தை எழுப்பினார்கள்.

    மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரதமர் மோடி மவுனத்தை கலைத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் பாராளு மன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இரு அவைகளிலும் எந்த பணிகளும் நடைபெறாமல் முடக்கம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்ததால் விவாதம் எதுவும் நடைபெறாமல் நாள் முழுவதும் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

    முன்னதாக இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் கேள்வி- நேரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முன்னதாக நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.

    தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார்கள். ஆனால் அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து பாராளுமன்றத்தில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

    இந்த அமளிகளுக்கு மத்தியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் எழுந்து மணிப்பூர் விவகாரம் முக்கியமான விஷயம். சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. மணிப்பூரில் நடந்துள்ளது ஒட்டு மொத்த நாட்டிற்கே அவமானம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டத்திலும் இதனை தெரிவித்து இருக்கிறேன். பாராளுமன்றத்திலும் அதை உறுதியாக கூறுகிறேன். ஆனால் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த விடக்கூடாது என சில கட்சிகள் நினைத்து செயல்படுகின்றன என்று பேசினார்.

    ஆனால் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்துவிட்டனர். பிரதமர் மோடி இரு அவைகளிலும் இதற்கு விரிவாக பேச வேண்டும் என கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

    சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையில் பதாகைகள் ஏந்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை பார்த்து சபாநாயகர் ஓம் பிர்லா அனைவரும் அமைதியாக இருக்கைக்கு சென்று அமருமாறு கூறினார்.

    ஆனால் சபாநாயகர் வேண்டுகோளை ஏற்காமல் எதிர்க்கட்சியினர் ஒட்டு மொத்தமாக தொடர்ந்து கோஷங்கள் போட்டவாறு இருந்தனர். இதனால் சபையில் யார்? என்ன பேசுகிறார்கள் என கேட்க முடியாத அளவுக்கு நிலைமை மாறியது. சபையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.

    இதையடுத்து பாராளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே சபையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். பின்னர் 12 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியது. சபை கூடியதுமே எதிர்க்கட்சிகள் மறுபடியும் பிரச்சினையை கிளப்பினார்கள்.

    மணிப்பூர் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? எதிர்கட்சிகள் கேள்விக்கு பிரதமர் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் இருக்கையை விட்டு எழுந்து தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

    கையில் பதாகைகள் ஏந்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை இருக்கையில் அமருமாறு சபையை நடத்திய ராஜேந்திர அகர்வால் கூறினார். ஆனால் தொடர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால் சபை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது. இதனால் வருகிற திங்கட்கிழமைக்கு சபையை ஒத்தி வைத்து அவைத்தலைவர் உத்தரவிட்டார்.

    மணிப்பூர் விவகாரம் மேல்சபையிலும் இன்று புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கும் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் போட்டனர். இடைவிடாமல் அவர்கள் முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் இருந்ததால் சபை நடவடிக்கை 2-வது நாளாக இன்றும் முடங்கியது.

    இதனால் மேல்-சபையை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார். மணிப்பூர் விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 2-வது நாளாக விவாதம் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.

    • துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன.
    • ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின.

    எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர், இது தொடர்பாக கூறியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன. அத்துடன் இதை அரசியலாக்கவும் முயற்சிக்கின்றன.

    மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க தயார் என நாங்கள் கூறிவிட்டோம். ஆனால் இது குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் எடுக்கின்றன.

    ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் சோனியா, ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகள் மவுன பார்வையாளர்களாக கடந்து விடுகின்றன. ஒரேயொரு மாநிலத்துக்காக (மணிப்பூர்) கண்ணீர் வடிக்கின்றனர்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீங்கள் எப்படி மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியும்? பெண்களை அரசியல் ஆயுதமாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள்.

    மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் விவாதிக்காமல் ஏன் ஓடுகிறீர்கள்? ராஜஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சோனியா, ராகுல் ஆகியோரும் பதிலளிக்க வேண்டும்.

    இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறுகையில், 'மணிப்பூர் பிரச்சினையில் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக அரசு தெளிவாக கூறியபோதும், காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற அலுவல்களை முடக்கியுள்ளன. சபையை செயல்பட விடக்கூடாது என்ற முடிவோடுதான் அவர்கள் வந்துள்ளனர் என்பது எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறையில் இருந்து தெரிகிறது' என குற்றம் சாட்டினார்.

    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் வன்முறை மற்றும் சத்தீஷ்கார், ராஜஸ்தானில் நடைபெறும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள் மனதில் கவலை இருக்கலாம் என்றும் அவர் சாடினார்.

    இதைப்போல மணிப்பூர் பிரச்சினையில் பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதாவும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இன்று நாம் ஜூலை மாதத்தில் இருக்கிறோம். ஆனால் மே முதல் வாரத்தில் நடந்த ஒரு சம்பவம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் டுவிட்டரில் வெளியாகி இருக்கிறது. இதன் மர்மம் தொடர்பாக எனது மனதில் பல கேள்விகள் எழுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'மணிப்பூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதனால் நாங்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தை விவாதிக்க தயாராக இருக்கிறோம் என மத்திய மந்திரிகள் பாராளுமன்றத்தில் அறிவித்தபோதும், காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் விவாதத்துக்கான விதிகளுக்கு வாதம் செய்கிறார்கள். அப்படியானால் இந்த சம்பவங்கள் உங்களுக்கு முக்கியமில்லை, விதிகள்தான் முக்கியமா' என்றும் கேள்வி எழுப்பினார்.

    • பாராளுமன்ற கூட்டத்த நடத்த விடக்கூடாது என்பதில் என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக இருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    • மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு உள்துறை மந்திரி அமித் ஷா விரிவாக பதில் அளிப்பார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகள் கூட்டணியும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    குறிப்பாக அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்றும், பெண்கள் மீதான கொடூர தாக்குதல் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து அமளி நீடித்ததால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

    எதிர்க்கட்சிகள் முன்வைத்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்ற பிறகும், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை பார்க்கும்போது, அவர்கள் பாராளுமன்ற கூட்டத்த நடத்த விடக்கூடாது என்பதில் என்பதில் தெளிவாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக பார்ப்பதாகவும், விவாதிக்க தயாராக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகுவதாகவும் மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை ஏற்கனவெ தெளிவுபடுத்திவிட்டதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். மேலும், மணிப்பூர் விவகாரம் உணர்வுபூர்வமான பிரச்சினை, விவாதத்திற்கு உள்துறை மந்திரி விரிவாக பதில் அளிப்பார். விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும் என்றும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

    • ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்.
    • 17 அமர்வுகள் இடம்பெறும் நிலையில், 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.

    இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிக்கட்சிகள் கேள்விகள் எழுப்பி நெருக்கடி அளித்து வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது
    • பொது சிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும்

    இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும்.

    பொது சிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம், டெல்லி மாநில அரசின் அதிகாரத்திற்கு எதிராக கொண்டு வந்துள்ள அவசர சட்டம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் நிலையில், இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.

    • ஆகஸ்ட் 10-ந்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறலாம்
    • டெல்லி மாநில அரசு அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் தாக்கல் செய்யப்படலாம்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10-ந்தேதி வரை கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓரிரு நாட்களில் தேதியை இறுதி செய்யும். ஜூலை 17 அல்லது 20-ந்தேதி ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் தொடங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்றம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் வேலை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் பழைய கட்டிடத்தில் மழைக்கால கூட்டம் நடத்தப்படலாம் என்பதை புறந்தள்ளிவிட முடியாது.

    இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, டெல்லி மாநில அரசு தொடர்பான அவசர சட்டம் ஆகிய விவகாரத்தை கையில் எடுக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக டெல்லி மாநில அரசுக்கு எதிரான அவசர சட்டம் அதிர்வலையை ஏற்படுத்தும்.

    மக்களவையில் பா.ஜனதாவுக்கு போதுமான ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில்தான் பா.ஜனதாவுக்கு போதுமான எம்.பி.க்கள் எண்ணிக்கை இல்லை. ஆகவே, கெஜ்ரிவால் பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை விவாதத்திற்கு வரும்போது அந்த கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என கூறியுள்ளார். #MonsoonSession #Parliament #TDPMP
    அமராவதி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.



    இதில், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக நாளை விவாதம் நடத்தப்படுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. திவாகர் ரெட்டி, நாளை நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விவாதத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கூட்டத் தொடரிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கொறடா உத்தரவிடுவது வழக்கமான நடைமுறைதான். எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி கவிழப்போவதில்லை. என்னாலும் விவாதத்தின்போது ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேச முடியாது. எனவே நான் சபையில் இருக்கிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை’ என்றார்.

    இவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அவரை தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தொடர்பு கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MonsoonSession #Parliament #TDPMP
    பாராளுமன்ற செயல்பாடுகள் கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினரை மந்திரி விஜய் கோயல் சந்தித்து வருகிறார். #monsoonsession #govtreachesopposition #Parliamentmonsoonsession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது.

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.

    இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினரை பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி விஜய் கோயல் தற்போது சந்தித்து வருகிறார்.

    சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற தலைவர் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி பாராளுமன்ற தலைவர் சத்திஷ் சந்திரா மிஸ்ரா, சிவசேனா பாராளுமன்ற தலைவர் சஞ்சய் ரவுத், இந்ஹ்டிய கன்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா மற்றும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்த விஜய் கோயல், எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை இடையூறுகள் ஏதுமின்றி நல்லமுறையில் செயல்பட ஒத்துழைக்குமாறு கேட்டுகொண்டார்.

    பாராளுமன்றத்தின் பணிகள் உரியமுறையில் நிறைவேற்றப்பட வேண்டியது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தேசிய கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்த விஜய் கோயல், பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை மத்திய அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #monsoonsession #govtreachesopposition #Parliamentmonsoonsession
    ×