search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur Riot"

    • ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்களுடன் செல்பி எடுத்துள்ளார் தலைமை காவலர்.
    • தலைமைக் காவலரை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்ததால், மீண்டும் வேலை வழங்குமாறு போராட்டம்.

    மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுடன் சேர்ந்த செல்பி எடுத்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக சுரசந்த்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமைக் காவலர் மீது ஒழுங்கை நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

    இதற்கு ஆயுதம் ஏந்திய குழு மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

    சுமார் 300 முதல் 400 பேர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கலைந்த செல்ல உத்தரவிட்ட நிலையில் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளனர்.

    அப்போது போராட்டம் நடத்திய கும்பல் எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், கல்வீசி தாக்கல் நடத்தியுள்ளனர். போலீசார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

    இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    குகி-சோ பழங்குடியின மக்கள், பொலீசார் தங்கள் கிராமங்களை குறிவைத்து தாக்கி வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர. ஆனால், போலீசார் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும், "கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களை" ஊக்குவிப்பதில் குகி-சோ கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவதாக தெரித்துள்ளனர்.

    • கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
    • மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை.

    கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இடையில் செப்டம்பர் மாதத்தில் சில நாட்கள் மட்டும் இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் அடுத்தடுத்து இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது.

    இதைத்தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே சமூக வலைத்தளங்கள் வழியாக வதந்தி பரவுவதை தடுக்க செல்போன் இணையதள சேவை துண்டிப்பை நாளை (புதன்கிழமை) வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை கமிஷனர் ரஞ்சித் சிங் பிறப்பித்து உள்ளார்.

    • லடாக் சென்றிருந்த ராகுல் காந்தி மணிப்பூர் குறித்து பேச்சு
    • மக்கள் உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது

    மணிப்பூரில் அமைதி திரும்ப பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த, அம்மாநில முதல்வர் பிரேன் சிங், இன்று மணிப்பூரில் நடைபெறும் அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.

    மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். இதுகுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-

    நாங்கள் அவருடைய ஆலோசனையை எப்போதும் எடுத்துக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பேச்சை கேட்டபிறகு மணிப்பூரில் அமைதி நிலவுகிறது. தற்போது இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு மற்றும் மீண்டும் குடியேற்றத்திற்கான வழக்கமான பணி. இதற்கான உள்துறை அமைச்சரின் ஆலோசனையைப் பெறவே நாங்கள் வந்துள்ளோம்.

    லடாக்கில் இருக்கும்போது ராகுல் காந்தியால் எப்படி மணிப்பூர் குறித்து நினைக்க முடியும்?. நீங்கள் லடாக் சென்றீர்கள் என்றால், லடாக்கை பற்றி பேச வேண்டும். இன்று மணிப்பூரில் நடப்பது அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை. மனித உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது'' என்றார்.

    பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையின்போது, "ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுடன் இருக்கிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதி மட்டுமே தீர்வு. மணிப்பூரில் அமைதி நிலவ மாநில மற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன" என்றார்.

    • I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று கள ஆய்வு
    • மணிப்பூரில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து ஜனாதிபதியிடம் விவரிப்பு

    I.N.D.I.A. கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூரில் வன்முறை நடைபெற்ற இடங்களை பார்வையிட இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்து ஒரு அறிக்கை தயார் செய்தனர். இரண்டு நாள் பயணம் முடிந்த நிலையில், மணிப்பூர் மாநில கவர்னரை சந்தித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு-வை I.N.D.I.A. கூட்டணி பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது மணிப்பூர் கள நிலவரம் குறித்து தயார் செய்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.

    முன்னதாக, நேற்று திடீரென அமித் ஷா ஜனாதிபதியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நண்பருடன் காரில் சென்ற பத்திரிகையாளர் வீடு திரும்பவில்லை
    • இம்பாலில் ஆண் நண்பருடன் சென்ற மாணவி மாயம்

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் 3 மாதங்களில் 30 பேர் மாயமானது தெரியவந்துள்ளது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியாமல் உள்ளது.

    வன்முறை தொடங்கிய நேரத்தில் மே மாதம் 6-ந்தேதி சிங் என்பவர் (பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர், சமூக சேவகர்) மாயமாகியுள்ளார். அவருடன் யும்கைபாம் கிரண்குமார் சிங் என்பவரும் மாயமாகியுள்ளார். இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை. இருவரும் கங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஒலிம்பிக் பார்க்கை ஒட்டியுள்ள சாஹெய்பங் பகுதியில் இருவரும் காரில் சென்றுள்ளனர். அதன்பின் அவர்களின் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதேபோல் மே மாதத்தில் சுமார் 30 பேர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. மாயமானவர்களை தேடிவருகிறோம். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    மாயமான சிங் தனது மகனை விஞ்ஞானியாக்க விரும்பினார். அவர்கள் குடும்பம் மே மாதம் ஷில்லாங் செல்ல இருந்தது. அந்த நிலையில்தான் காணாமல் போகியுள்ளார்.

    அவரது மகன் இதுகுறித்து கூறுகையில் ''எனது தந்தை கடின உழைப்பாளி, என்னை ஷில்லாங்கில் உள்ள இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி நிகழ்ச்சியில் என்னை சேர்க்க விரும்பினார்.'' என்றார.

    அவரது மனைவி ''நாங்கள் எனது மகனை டெல்லியில் படிக்க வைக்க விரும்பினோம். எனது கணவர் மட்டும்தான் சம்பாதித்து வந்தார். தற்போது அவர் மாயமாகி உள்ள நிலையில், எப்படி குடும்பத்தை நிர்வகிப்பது எனத் தெரியவில்லை'' என்றார்.

    பத்திரிகையாளர் ஒருவர் காணாமல் போன நிலையில், இம்பாலில் ஜூலை 6-ந்தேதி ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

    ஜூலை 6-ந்தேதி ஊடரங்கு தளர்த்தப்பட்டதால், ஹிஜாம் லுவாங்பி என்ற 17 வயது மாணவி நீட் பயிற்சிக்காக வெளியில் சென்றுள்ளார். அவரை அவருடைய ஆண் நண்பன் அழைத்துச் சென்றுள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், மோட்டார் சைக்கிளில் நீண்ட தூரம் சென்றுள்ளனர். அவர்கள் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இம்பால் பள்ளத்தாக்கில் இருவரும் நம்போல் நோக்கி சென்றுள்ளதாக சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    சைபர்கிரைம் போலீசார் தரப்பில் கடைசியாக அந்த மாணவியின் செல்போன் குவாக்டா பகுதியிலும், அவரின் நண்பர் செல்போன் லம்டான் பகுதியிலும் சுவிட்ச் ஆஃப் ஆனதாக கூறப்படுகிறது. இரண்டும் வெவ்வேறு பகுதியாகும். குவாக்டா பிஷ்ன்புர் மாவட்டத்தில் உள்ள பகுதியாகும், லம்டான் சுரசந்த்புரில் உள்ளது. இரண்டு இடங்களுக்கும் இடையிலான இடைவெளி 18 கி.மீ. ஆகும். வன்முறை நடைபெற்ற முக்கியமான இடமாக இந்த இரண்டு இடமும் பார்க்கப்படுகிறது.

    அவள் வீட்டிற்கு திரும்பாத நிலையில், நான் போன் செய்தபோது, அவள் பேசினாள். நம்போலில் இருப்பதாக தெரிவித்த அவள், பயந்துபோய் இருந்தாள். இடம் தெரிந்தால், அவளது தந்தையை அனுப்பி வீட்டிற்கு அழைத்து வர முடியும் என்பதால் அவள் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு கேட்டேன். அதன்பின் அவளது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது'' என அந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.

    அவர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் அச்சப்படுகிறார்கள். மாணவியின் ஆண் நண்பர் செல்வோன் தற்போது உபயோகத்தில் உள்ளதாகவும், அவரது போனில் புதிய நம்பர் பயன்படுத்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ''போனில் சிக்னல் கிடைத்த இடம் மெயின் ரோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால், போலீசார் அங்கு செல்ல தயங்குகிறார்கள்'' என அந்த பையனின் தந்தை தெரிவித்துள்ளார்.

    பழங்குடியின தலைவர்கள் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர், ''காணாமல் போனவர்களின் 44 உடல்கள் இம்பால் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அந்த உடல்களை அடக்கம் செய்வதற்காக அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது
    • ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் நாட்டையே அதிர்வலைக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இதற்கிடையே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதுடன் பாரட்சமின்றி, நியாயமான விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். தங்களது அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று மத்திய அரசு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. அப்போது இரண்டு பெண்கள் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரரிக்கும் எனத் தெரிகிறது.

    இரண்டு பெண்கள் விவகாரம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு வழக்குகளை சிபிஐ-யும், இரண்டு வழக்குகளை புலனாய்வு முகமையும் விசாரிக்க இருக்கிறது.

    வைரல் வீடியோ பரப்பப்பட்டபோது, உச்சநீதிமன்றம் தனது வேதனைகளை தெரிவித்தது. மேலும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்திருந்தது.

    • ஆறு வழக்குகள் சிபிஐ, 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும்
    • வீடியோ வழக்கில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தனது வேதனையை தெரிவித்ததோடு மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டன.

    நேற்றுமுன்தினம், சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் இதுகுறித்த வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரத்தில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மத்திய அரசு ஆறு வழக்குகளை சிபிஐ-யிடமும், மூன்று வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடமும் ஒப்படைத்துள்ளது.

    • I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர் மணிப்பூர் சென்றுள்ளனர்
    • இரண்டு நாட்கள் மணிப்பூரில் நடப்பது என்ன? என்பதை ஆராய உள்ளனர்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைக்குப் பிறகு இன்னும் அமைதி திரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. சபாநாயகர் இன்னும் விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே கள நிலவரம் குறித்து ஆராய இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் இரண்டு நாட்கள் பயணம் செய்ய முடிவு செய்தனர். இந்த குழுவில் 21 எம்.பி.க்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி.

    இவர் மணிப்பூர் செல்வது குறித்து கூறியதாவது:-

    இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து குரல் கொடுத்த பின்னர்தான், மத்திய அரசு தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளது.

    நாங்கள் அரசியல் பிரச்சனையை எழுப்புவதற்காக மணிப்பூர் செல்லவில்லை. மணிப்பூர் மக்களின் அவலநிலை, அவர்களின் வலியை புரிந்து கொள்வதற்கான செல்கிறோம். அவர்களின் வலிக்கு தீர்வு காணவேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்.

    இது சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை குறித்தது அல்ல. வகுப்புவாத வன்முறை அங்கு நடக்கிறது. இதுகுறித்து நாங்கள் கவலையடைகிறோம். மணிப்பூரில் நடக்கும் விசயம், அருகில் உள்ள மாநிலங்களையும் பாதித்துள்ளது. அரசு அமைதி மற்றும் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டவில்லை. மணிப்பூரில் உண்மையிலான நிலை குறித்து ஆராய்வதற்காக செல்கிறோம்.

    இவ்வாறு கூறினார்.

    • இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி உருவான பிறகு எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
    • இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் 2 பேர் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும், அம்மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் பதில்அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி சார்பாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

    இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் அறிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேரில் சென்று இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளது.

    மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர்ரஞ்சன், துணைத்தலைவர் கவுரவ் கோகாய் தலைமையிலான இந்த குழுவில் கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான தி.மு.க. சார்பாக அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இடம்பெற்று உள்ளார். மேலும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ராஜின் ரஞ்சன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொல் திருமாவளவன், தி.மு.க. ரவிக்குமார், சுஷ்மிதா தேவ், சந்தோஷ் குமார், ஏ.ஆர். ரஹிம், மனோஜ் குமார் ஜா, ஜாவத் அலிகான், மஹுவா மாஜி, முஹம்மது பைசல், மொஹம்மது பஷீர், பிரேம சந்திரன், சுஷில் குப்தா, அரவிந்த் சாவந்த், ஜெயந்த் சிங் மற்றும் புலோ தேவி உள்ளிட்ட 21 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது எதிர்கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த இந்த 21 எம்.பிக்கள் இன்று மணிப்பூர் சென்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பைசல் முகமது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ஜாவேத் அலி, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சந்தீப் பதக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

    இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி உருவான பிறகு எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்த குழுவினர் இன்று இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சுரா சந்த்பூருக்கு சென்றார்கள். இந்த குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசினர். குக்கி பழங்குடியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து வன்முறை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் இம்பாலுக்குத் திரும்பும் முன், மைதேயி சமூகத்தினரையும் சந்திப்பார்கள் என்று எதிர்க்கட்சி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இது குறித்த அறிக்கை ஒன்றையும் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிவாரண முகாம்களுக்குச் சென்று நிலைமையை பர்வையிட்ட இந்த குழு நாளை (ஞயிற்றுக் கிழமை) காலை மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேவையும் சந்திக்க உள்ளது.

    குழுவில் இடம்பெற்று உள்ள காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறுகையில் "மணிப்பூரில் உண்மை நிலவரத்தை கண்டுபிடித்து, அந்த உண்மையை பாராளுமன்றத்தில் முன்வைப்போம். இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது என்றார். ஆதிர்ரஞ்சன் எம்.பி. கூறுகையில், மணிப்பூர் நிலவரம் குறித்து அங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து எங்கள் பரிந்துரைகளை அரசுக்கு முன்வைப்போம் என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி. சுஷ்மிதா தேவ் கூறுகையில், மணிப்பூர் வன்முறைகளை வெளிஉலகுக்கு ஊடகங்கள்தான் கொண்டு வந்தன. ஆனாலும் இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் நாங்கள் வெளியே கொண்டு வருவோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோடி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான சதி- அமித் ஷா
    • வீடியோ வைரல் ஆன பின்னர்தான், நடவடிக்கை- ஒவைசி

    மணிப்பூரில் இரு பிரிவனருக்கு இடையிலான மோதல், கடந்த மே மாதம் 3-ந்தேதி வன்முறையாக வெடித்தது. அதில் இருந்து தற்போது வரை அங்கு அமைதி திரும்பவில்லை. இதற்கிடையில் கடந்த வாரம் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியானது. காட்டுமிராண்டித்தனமான இந்த செயலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டன குரல் எழும்பியது.

    இந்த விசயத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தனர்.

    இதங்கிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பாக பேசிய அமித் ஷா ''பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் ''மணிப்பூர் வீடியோ, மோடி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்டது சதியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து வன்முறை நடைபெற்று வருகிறது. வீடியோ சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட பழைய வீடியோ. ஆனால், வீடியோ வைரல் ஆன பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோடி அரசு எப்போதுமே அவர்களுடைய இமேஜ் குறித்துதான் கவலைப்படுகிறது. குகி பெண்களின் கண்ணியத்தை பற்றியல்ல. என்ன ஒரு வெட்கக்கேடு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக,

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதற்கிடையே 2 பெண்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

    நேற்று நடந்த விசாரணையின்போது, மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூரில் மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் காட்சியை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மைதேயி இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய செல்போன் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த விசாரணைகளில் என்னென்ன நடந்தது என்பது தெரிய தொடங்கி இருக்கிறது. குகி இனப் பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சியை பதிவு செய்தவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்துள்ளனர். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பது முதல் கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த 7 வழக்குகள் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். விசாரணை முடிவில் நிச்சயம் உண்மை தெரியும். விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    எனவேதான் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். சி.பி.ஐ. விசாரிப்பது போல மணிப்பூர் கலவரத்தின் 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பான காட்சிகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருப்பதால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்குகிறார்கள். மேலும் மணிப்பூர் மாநில அரசு செயல் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

    ஆனால் மே 4-ந்தேதி 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி அழைத்து செல்லப்பட்டபோது அங்கு ராணுவமோ, உள்ளூர் போலீசாரோ இல்லை. சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கு இதுவரை 12 தடவைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    இரு இனத்தவர்களின் வாழ்விடங்களுக்கு இடையே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமரச முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ஒவ்வொரு நாளும் மணிப்பூர் சட்டம் ஒழுங்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மணிப்பூரில் நாங்கள் முழுமையாக அமைதி ஏற்படுத்தி வருகிறோம். 16 மாவட்டங்களில் தலா ஒரு படை வீதம் 16 படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை அவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளனர்.

    மணிப்பூரில் 72 சதவீதம் அரசு ஊழியர்கள் இடையூறு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். 82 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய, மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி அமைதியாக நடந்தன. 90 சதவீதம் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விரைவில் மணிப்பூர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    மணிப்பூரில் வன்முறை ஏற்படுவதற்கு அம்மாநில ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட மைதேயி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கலாம் என்ற தீர்ப்புதான் காரணமாகி விட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யும். மேலும் மணிப்பூரில் நாங்கள் ஆயுத சட்டத்தை திரும்ப பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வருபவர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வருகிற டிசம்பர் மாதம் இது தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் இல்லாதவர்கள் இந்திய குடியுரிமை அடையாள அட்டை பெற இயலாது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடப்பது போல காங்கிரசார் பிரசாரம் செய்கிறார்கள்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 1993, 1995, 1997, 1998 ஆண்டுகளில் 4 தடவை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

    பாராளுமன்றத்தில் முழுமையாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை கேட்பதற்கு முன் வருவது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 14 நாட்கள் கழித்துதான் துணை நிலை ராணுவத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிப்பூர் குழுக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்கிறோம்.

    இதன் மூலம் வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியின்போது மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 149 நாட்கள் தொடர்ந்து அந்த மாநிலத்துக்குள் யாரும் செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 240 ரூபாய்க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.1900-த்துக்கும் விற்பனை ஆனது.

    ஆனால் நாங்கள் அத்தியாவசிய பணிகள் அனைத்தையும் சீராக வைத்திருக்கிறோம். மணிப்பூருக்கு இப்போதும் யாரும் சென்று வரலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். ராகுல்காந்தி சென்றபோது ஹெலிகாப்டரில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லப்பட்டதால் அவர் தடுக்கப்பட்டார். அது அவருக்கே தெரியும். தற்போது மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • I.N.D.I.A. எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல இருக்கின்றனர்
    • மணிப்பூர், நாகாலாந்து எரிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்

    மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மத்திய அரசு சிபிஐ விசாரணை கேட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூர் செல்ல இருக்கிறார்கள். பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேச மறுத்து வருகிறார். இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில் ''நீங்கள் (பா.ஜனதா) இன்னும் ஆறு மாதம்தான் இருக்கப் போகிறீர்கள். மணிப்பூரை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?. உங்களுடைய எம்.பி.க்களை அனுப்புங்கள். யார் பொறுப்பு என்று அவர்கள் சொல்லட்டும். நீங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். மணிப்பூர், நாகாலாந்து எரிந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீர் எரிந்து முடிந்துவிட்டது.

    இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல இருக்கின்றனர். நான் மணிப்பூர் செல்ல அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது'' என்றார்.

    • போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது
    • அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமில் 13 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மிசோரமில் குகி-ஜோ பழங்குடியினர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா கலந்து கொண்டார். இந்த பேரணியின் போது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் குறித்து அவதூறாக பேசப்பட்டுள்ளது.

    மிசோ பழங்குடியினருக்கு குகி-ஜோ பழங்குடியினர் மற்றும் மியான்மரின் சின் மக்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின் மக்கள் அகதிகளாக மிசோரம் மாநிலத்தில் உள்ள முகாமில் உள்ளனர்.

    மிசோரம் மாநில முதல்வர் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், அடுத்த மாநில உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-

    போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது. மணிப்பூர் மாநிலத்தில் வாழும் குகி சமுதாயத்தினருக்கு எதிராக மணிப்பூர் அரசு செயல்படவில்லை.

    அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது. மணிப்பூர் ஒருமைப்பாட்டை அழிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் வகையில் ஆயுதமேந்தியவர்களுக்கும் அரசுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. எனக்கு எதிராக மிசோரம் பேரணியில் அவதூறு குரல் எழுப்பியது காட்டுமிராண்டி தனமானது.

    மற்றொரு மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மிசோரம் மாநில முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய யூனியன் கள நிலவரம் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி, அதிகாரிகள் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்தார்.

    ×