என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கணவர் மற்றும் மகனை கொலை செய்தபின் அந்த கொடூரம்...!!! மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கண்ணீர் பேட்டி
- பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, சகோதரனையும் அந்த கும்பல் கொலை செய்துள்ளது
- வீடுகள் எரிக்கப்பட்டு கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் எம்.டி. டி.வி.க்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அதில் எனது கணவர் மற்றும் இளைய மகனையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டனர். தற்போது உதவியற்றவளாக நிற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பேச்சு வராத நிலையில், ஆங்கில செய்தி சேனலுக்கு கண்ணீருடன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய மகளை நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்துச் செல்வதற்கு முன், என்னுடைய கணவர் மற்றும் இளைய மகனை அந்த கும்பல் கொலை செய்தது. ஒட்டுமொத்தமாக என்னுடைய நம்பிக்கையாக இருந்த எனது இளைய மகனை இழந்து விட்டேன். அவன் 12 ஆம் வகுப்பை முடித்தவுடன், கஷ்டப்பட்டாவது அவனை மேற்கொண்டு நல்லபடியாக படிக்க வைக்க நினைத்தேன். தற்போது அவனுடைய தந்தையும் இல்லை. என்னுடைய மூத்த மகனுக்கு வேலை இல்லை. ஆகவே, என்னுடைய குடும்பம் பற்றி நினைக்கும்போது, எந்த நம்பிக்கையும் இல்லாததுபோன்று உணர்கிறேன். நான் நம்பிக்கையற்றவளாக, உதவியற்றவளாக உணர்கிறேன் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
என்னுடைய கிராமத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த எண்ணம் எனது மனதில் தோன்றவில்லை. திரும்பி செல்ல விரும்பவில்லை. எங்களுடைய வீடு எரிக்கப்பட்டுள்ளது. வயல்வெளி அழிக்கப்பட்டுள்ளது. நான் எதற்காக திரும்பிச் செல்வேன். எனது கிராமம் சூறையாடப்பட்டு விட்டது. என்னுடைய மற்றும் என்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், அங்கு திரும்பி செல்ல முடியாது.
அரசை நினைக்கும்போது கோபமாக வருகிறது. எனது கணவர் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவளுக்கு எதிராக அவகரமான செயலை செய்துள்ளனர். நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். மணிப்பூர் அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியாவின் தாய், தந்தையர்களே, நாங்கள் அனைத்தையும் இழந்து, ஒரு சமூகமாக என்ன செய்ய போகிறோம் என்று சிந்திக்க முடியாமல் இருக்கிறோம்.
கடவுளின் ஆசியால், நான் உடல் ரீதியாக நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் இரவும் பகலும் அதைப்பற்றி சிந்திக்கிறேன். சமீப காலமாக நான் மிகவும் பலவீனமாக இருந்ததால் மருத்துவரை அணுகினேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்