search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பா?- மக்களவையில் மத்திய மந்திரி பதில்
    X

    குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பா?- மக்களவையில் மத்திய மந்திரி பதில்

    • மத்திய அரசு ஓய்வூதியமாக குறைந்தபட்சம் 9 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது
    • 44,81,245 பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்

    மத்திய அரசு பணியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் இறந்தபின் அவர்களின் குடும்பத்தினர் ஓய்வு ஊதியங்கள் பெற்று வருகின்றனர். அவர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து பாராளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்தார் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங். அவர் அளித்த பதிலில் ''தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தும் எண்ணம் இல்லை.

    தற்போது 44,81,245 ஓய்வூதியர்கள் உள்ளனர். இதில் 20,93,462 பேர் குடும்ப ஓய்வூதியர்கள் ஆவார்கள். 2022-2023 நிதியாண்டில் 2,41,777.55 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படும் அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படும்'' என்றார்.

    Next Story
    ×