search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை.
    • அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும்.

    திருமங்கலம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் உசிலம் பட்டியில் இன்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

    தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அ.தி.மு. க.வின் தேர்தல் அறிக்கை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நீங்கள் அதே அறிவிப்பை வெளியிட்ட போது எந்த இடத்திலும் பேசப்படவில்லை. ஏனென்றால் பொய்யான வாக்குறுதியை அளிப்பார்கள் என மக்கள் நம்பவில்லை. ஆனால் அ.தி.மு.க. அதே அறிவிப்பை கொடுக்கும் போது பேசப்படுகிறது.

    ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை, கட்சி பெயரை பயன்படுத்த முடியவில்லை. என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்தவர் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர் வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மவுன சாமியாராக இருந்துவிட்டார்.

    அதனாலேயே பாவம் ஏற்பட்டு அம்மாவின் ஆன்மா வஞ்சிக்கிறதோ என தெரிகிறது. எம்.ஜி.ஆர்., அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார். சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார்.

    அம்மா உயிர் பறிபோக நீங்கள் தான் காரணம். அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா ஓ.பி.எஸ்.சை வஞ்சிக்கிறது. அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என சொல்கிறார். தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம் நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவது இல்லை. துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடத்தை தொண்டர்கள் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாமியார், மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர்.
    • மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், யாதகிரி குட்டா அடுத்த கொல்ல குடிசேவையை சேர்ந்தவர் பாரதம்மா (வயது 65). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இளைய மகனின் மனைவி மங்கம்மா (26). மாமியார் மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர். நேற்று அதிகாலை பாரதம்மாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

    மாமியாரின் உடலைப் பார்த்து மருமகள் மங்கம்மா கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் மங்கம்மாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே மங்கம்மா பரிதாபமாக இறந்தார்.

    மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வழக்கமாக மாமியார், மருமகள் சண்டையிட்டு அடித்துக் கொள்வது தான் வழக்கம். ஆனால் இந்த சம்பவம் மாமியார் மருமகள் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார்.

    இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்த பிரபல நடிகையான டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் டோலி சோஹி சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். 'கலாஷ்', 'ஹிட்லர் திதி', 'டெவோன் கே தேவ் மகாதேவ்', 'ஜனக்' போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார்.


    அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அடுத்த நாளே டோலிசோஹி மரணம் அடைந்திருப்பது இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
    • போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தில், குழிபிறை கிராமத்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு குழிப்பிறை கிராமத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.

    பேருந்தில் பயணித்துள்ள சக பயணிகள் முதியவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவரின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் அசைவு ஏற்படவில்லை. இதனால் பேருந்தின் டிரைவர் சந்திரசேகரனும், கண்டக்டர் சுந்தரும், மருத்துவமனை செல்ல முடிவு செய்து பேருந்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அருகில் இருந்த வெங்கமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் அவரை பரிசோதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது செந்துறையை சேர்ந்த தனசாமி என்பவரின் மகன் ஆரோக்கியராஜ் என்பதும், குழிப்பிறையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு, பேருந்தில் வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டதும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.
    • கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத தளபதிகளில் ஒருவர் ஷேக் ஜமீல்-உர்-ரஹ்மான்.

    காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த இவர் ஐக்கிய ஷிகாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் மற்றும் தவ்ரீக்-உல்-முஜாகிதீன் அமைப்பு தலைவராக செயல்பட்டு வந்தார்.

    காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தொடர் புடைய ஜமீல்-உர்-ரஹ்மானை, இந்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் தீவிரவாதியாக அறிவித்து தேடி வந்தது.

    இந்நிலையில் ஜமீர்-உர்-ரஹ்மான் பாகிஸ்தானில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

    பாகிஸ்தானில் கைபர் பக்துள்கவா மாகாணத்தில் உள்ள அபோதாபாத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.

    கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    டிசம்பர் மாதம் கராச்சியில் லஷ்கர் தீவிரவாதி அபு ஹன்சலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நேற்று முன்தினம் லஷ்கர் உளவுத்துறை தலைவர் அசாம் சீமா மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.
    • சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், கோவிந்தஹள்ளியைச் சேர்ந்தவர் திருப்பதய்யா (வயது 39).

    இவர் முட்டை பஜ்ஜியை மிகவும் விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி சுவர்ணா கடையில் முட்டை பஜ்ஜி வாங்கி வந்தார்.

    அதை திருப்பதய்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.

    பின்னர் அதை வெளியே எடுக்க முயன்றார். வெளியே வராததால் திருப்பதய்யா மூச்சு திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுவர்ணா தொண்டையில் சிக்கிய பஜ்ஜியை எடுக்க முயன்றும் முடியவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திருப்ப தய்யாவின் தொண்டையில் சிக்கியிருந்த முட்டை பஜ்ஜியை சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இருப்பினும் மூச்சு விட முடியாமல் திருப்பதய்யா இறந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.

    தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் அதிபர் ஹேஜ் கீங்கோப் இன்று அதிகாலை மரணம் அடைந் தார். அவருக்கு வயது 82. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைநகர் வின்ட்ஹோக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் அதிபர் ஹேஜ் கீங்கோப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக துணை அதிபர் நங்கோலோ தெரிவித்தார். ஹேஜ் கீங்கோப் 2015-ம் ஆண்டு முதல் முறையாக அதிபர் ஆனார். தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.

    • பெரு நாட்டில் மிகவும் பிரபலமான திரை நட்சத்திரம் தைனா ஃபீல்ட்ஸ்
    • 24-வது வயதில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரு நாட்டைச் சேர்ந்த நடிகை தைனா ஃபீல்ட்ஸ். இவர் திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் அவர் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்தும் கூறியிருந்தார்.

    பொதுவாக, போர்னோ திரைத் துறைக்குப் பின்னால் நடிகைகள் அனுபவிக்கும் பாலியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அதை அம்பலப்படுத்திய இவர், "என்னை அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். இதையெல்லாம் கடந்து நான் வீட்டுக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு, மனமுடைந்து அழுவேன். பல சமயங்களில் எனக்கு அப்படி நடந்திருக்கிறது. இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கஷ்டமானது. அதைவிட அடல்ட் கன்டென்ட் கிரியேட்டராக இந்தச் சமூகத்தில் வாழ்வது என்பது மிகக் கொடுமையானது''என வெளிப்படையாக பேசியது சர்வதேச அளவில் பேசுபொருளானது.

    இந்நிலையில், பெரு நாட்டின் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி மும்பைக்கு பயங்ரதீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியானார்கள்.தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். இந்த தாக்குதலை பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. அந்த அமைப்பின் பயங்ரவாதிகளை இந்தியா தேடி வருகிறது.

    இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும் லஷ்கர் இ தொய்பா நிறுவனர்களில் ஒருவருமான ஹபீஸ் அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானில் மரணம் அடைந்துவிட்டதாக ஐ. நா. சபை தெரிவித்துள்ளது.

    77 வயதான அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது மாரடைப்பால் இறந்ததாக ஐநா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

    அப்துல் சலாம் பட்டாவியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்ட சமயத்தில் அப்பொறுப்பை அப்துல் சலாம் பட்டாவி ஏற்றார் என்பது குறிப்பிடதக்கது.

    • நீரிழிவு, தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளும் விஜயகாந்துக்கு ஏற்பட்டன.
    • கால்களை சுழற்றி சுழற்றி அதிரடியாக சண்டை போட்ட விஜயகாந்தால் எழுந்து நிற்க முடியாமல் போனது.

    தமிழக அரசியலில் நிச்சயம் ஒருநாள் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்வார் என்று எதிர் பார்க்கப்பட்டவர் விஜய காந்த்.

    ஆனால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையே அடியோடு புரட்டிப் போட்டு விட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர்களான கருணா நிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்திேலயே 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.ைவ தொடங்கி அதிரடியாக அரசியலில் குதித்தார்.

    2006-ம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று விஜயகாந்த் எம்.எல்.ஏ.வான நிலையில் அவரது கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் 10 சதவீத ஓட்டுகளை பெற்ற னர். இது தமிழக அரசியல் களத்தில் திரும்பி பார்க்க வைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

    இதன் பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. அதிக ஓட்டுகளை பெற்று அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் கலங்கச் செய்து இருந்தது.

    இதன் மூலம் இந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக தே.மு.தி.க. தலையெடுக்கும் என்றே அரசியல் நோக்கர் கள் கணித்திருந்தனர். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு விஜயகாந்துக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு அவரது அரசியல் வாழ்க்கை யையே புரட்டிப் போட்டு விட்டது. அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடு களுக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் விஜய காந்தின் உடல் நிலையில் பெரிய அளவில் முன்னேற் றம் ஏற்படவில்லை. முதலில் டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொண்டு வந்த விஜய காந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் 2020-ம் ஆண்டு கொரோனா தொற் றும் விஜயகாந்துக்கு ஏற் பட்டது. நீரிழிவு, தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளும் விஜயகாந்துக்கு ஏற்பட்டன. இதனால் கணீர் குரலுக்கு சொந்தக்காரரான விஜய காந்தத்தால் பேச முடி யாமலேயே போய் விட்டது. கால்களை சுழற்றி சுழற்றி அதிரடியாக சண்டை போட்ட விஜயகாந்தால் எழுந்து நிற்க முடியாமல் போனது.

    இப்படி விஜயகாந்தின் உடல்நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பாதிப்புகளால் அரசியல் பணிகளை அவ ரால் சுறுசுறுப்புடன் மேற் கொள்ள முடியாமலேயே போய் விட்டது.

    இருப்பினும் விஜய காந்தை தே.மு.தி.க. தொடக்க விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழா ஆகியவற்றுக்கு குடும்பத்தி னர் அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தொண்டர் களை பார்த்து கையை மட்டும் அசைத்து வந்தார்.

    இப்படி விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் தே.மு.தி.க. வையும் சரிவை நோக்கி தள்ளின. இதனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு அந்த கட்சியால் வெற்றி பெற முடியாமலேயே போய் விட்டது.

    • பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    • விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் மொட்டை அடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று காலை புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் சாலை, கோவை சாலை, பவானி சாகர் சாலை, நம்பியூர் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புளியம்பட்டி டவுன் பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேப்போல் புளியம்பட்டி தினசரி மார்க்கெட் வாரச்சந்தை கடைகளும் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட்டில் 120-க்கும் மேற்பட்ட கடைகளும், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

    மேலும் விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், தே.மு.தி.க. தொண்டர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    • தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.
    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

    இந்த நிலையில் தீவுத்திடல் பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடிவருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்டிரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர். சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

    அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலை செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும். பிற மூத்த கலைஞர்கள், பல்லவன் முனை, வாலஜா முனை(அண்ணாசாலை, கொடிப்பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி வாகனங்கள், கனரக வாகனங்கள்(போக்குவரத்து பேருந்துகள், மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும்.

    மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள். அனைத்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×