search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவுத்திடல்"

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 48-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    இந்த பொருட்காட்சியில், 51 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவை தவிர கடைகள், பொழுதுபோக்கு வளாகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றி ருந்தன. அரசு பள்ளி மாண வர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தினந்தோறும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக சென்று சுற்றுலா பொருட்காட்சியை கண்டு களித்தனர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்று முடிவடைந்தது. இந்த பொருட்காட்சியை மொத்தம் 5.86 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இவர்களில் 4,91,361 பேர் பெரியவர்கள், 94,637 பேர் குழந்தைகள் ஆவர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடப்பதால் கடந்த வாரம் பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது. சிறந்த அரங்குக்கான விருது ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    • விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் மொட்டை அடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று காலை புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் சாலை, கோவை சாலை, பவானி சாகர் சாலை, நம்பியூர் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புளியம்பட்டி டவுன் பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேப்போல் புளியம்பட்டி தினசரி மார்க்கெட் வாரச்சந்தை கடைகளும் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட்டில் 120-க்கும் மேற்பட்ட கடைகளும், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

    மேலும் விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், தே.மு.தி.க. தொண்டர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    • தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.
    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

    இந்த நிலையில் தீவுத்திடல் பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடிவருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்டிரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர். சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

    அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலை செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும். பிற மூத்த கலைஞர்கள், பல்லவன் முனை, வாலஜா முனை(அண்ணாசாலை, கொடிப்பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி வாகனங்கள், கனரக வாகனங்கள்(போக்குவரத்து பேருந்துகள், மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும்.

    மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள். அனைத்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரையும் நினைத்தோம்.
    • அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.45 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

    சினிமா பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினி காந்த் நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்த் காலமான செய்தி அறிந்து, படப்பிடிப்பை ரத்து செய்து சென்னை திரும்புகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம். அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரையும் நினைத்தோம். பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது சற்று நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

    • மதியம் ஒரு மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
    • மாலை 4.45 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

    தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவரது உடல் கேயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் கூடியாதால் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி தேமுதிக தலைமையகத்தில் இருந்து அவரது உடல் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடியிருந்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை 6 மணியளவில் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டு, விஜயகாந்த் உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெறும். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இறுதி ஊர்வலம் தேமுதிக தலைமையகம் சென்றடைந்து, அங்கு மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் முதல்முறையாக 'ஆன் ஸ்ட்ரீட் நைட் பாா்முலா 4 பந்தயம்' தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது.
    • கொடி மரச்சாலையில் போா் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்தியாவில் முதல்முறையாக 'ஆன் ஸ்ட்ரீட் நைட் பாா்முலா 4 பந்தயம்' தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது. இந்தப் பந்தயம் டிசம்பா் 9, 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் நிலையில், தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள சில சாலைகள் பந்தய சுற்றுகளாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 1-ந்தேதி வரை இரவு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி, கொடி மரச்சாலையில் போா் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் ரிசா்வ் வங்கியின் சுரங்கப்பாதை, பாரிமுனை சென்று, அங்கிருந்து தங்களது இலக்கை நோக்கி செல்லலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடி மர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

    அண்ணா சாலையில் பல்லவன் சாலை சந்திப்பு முதல் மன்றோ சிலை வரையிலும், சுவாமி சிவானந்தா சாலையில் பெரியாா் சிலை முதல் நேப்பியா் பாலம் வரையிலும், காமராஜா் சாலையில் நேப்பியா் பாலம் முதல் போா் நினைவிடம் வரையிலும் சாலை குறுக்கலாக்கப்படும். இந்த வழியாக வாகனங்கள் வழக்கம்போல செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் இந்தச் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தினமும் மாலை வேளையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • கண்காட்சியுடன் உணவுத்திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கியது.

    இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் 10 வெளிநாடுகளை சேர்ந்த கைவிணை கலைஞர்கள் தங்களது நாட்டு பொருட்களை 30 அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

    மேலும் இந்தியாவில் உள்ள 20 வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்களது படைப்பு களை 83 அரங்குகளில் விற்பனைக்கு வைத்து உள்ளனர்.

    தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணி வகைகள், பட்டுச் சேலைகள், கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் கோ-ஆப்டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை 70 அரங்குகளில் உள்ளன. இந்த கண்காட்சியில் மொத்தம் 311 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த கண்காட்சியில் காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பட்டுச் சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், ராசிபுரம் தாழம்பூ கோர்வை பட்டு அலங்கார துணி வகைகள் போன்றவை உள்ளன.

    கைவினைப் பொருட்களில் தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பெண்களுக்கான அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியுடன் உணவுத்திருவிழாவும் நடைபெற்று வருகிறது. இதற்கான 30 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தினமும் மாலை வேளையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சியை இதுவரை 68 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளார்கள்.

    இந்த காண்காட்சி நாளை மறுநாள் (21-ந் தேதி) முடிவடைகிறது. காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கண்காட்சியை பார்வையிடலாம்.

    • 20 வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், தங்களது படைப்புகளை 83 அரங்குகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.
    • மண்பானை செய்வது எப்படி? என்பது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து காண்பித்தனர்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் கைத்தறி, கைவினை பொருட்கள் திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    தமிழக சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் 'சென்னை விழா-2023' என்ற பெயரில் கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் திருவிழாவுக்காக 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 30 அரங்குகளில் வங்காளம், பூடான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, உகாண்டா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 வெளிநாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது நாட்டு பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    இதுதவிர 20 வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், தங்களது படைப்புகளை 83 அரங்குகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.

    அதேபோன்று தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணி வகைகள், பட்டு சேலைகள், கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் கோ-ஆப்-டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை 70 அரங்குகளில் இடம் பெற்றிருந்தன.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

    இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது.

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த திருவிழாவை தொடங்கி வைத்து கண்காட்சியை திறந்து வைத்தார்.

    இதன்பின்பு, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அரங்குகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு அவற்றின் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தார்.

    கண்காட்சி அரங்கில் மண்பானை செய்து விற்பனை செய்யப்பட்டது. மண்பானை செய்வது எப்படி? என்பது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து காண்பித்தனர். அதனை ஆர்வமுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செய்து பார்த்தார். இதேபோன்று கண்காட்சி அரங்கிலேயே மஞ்சள் பை தயாரித்து வழங்கப்பட்டது. பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப்பையை தூக்கி காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி, கா.ராமச்சந்திரன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியை பொதுமக்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 600 கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டு களிக்கலாம்.
    • நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நாளை (வெள்ளிக் கிழமை) சென்னை தீவுத் திடலில் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள 16 இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. 600 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டுகளிக்கலாம்.

    தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, ராகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, மே தின பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    இந்த நம்ம ஊரு திருவிழாவில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    • 60 தனியார் அரங்குகள், 125 கடைகள் இடம் பெற்றுள்ளன.
    • சுகாதாரத்துறை கொரோனாவை வென்றதை அதன் வடிவத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

    பொழுது போகலையே... எங்கே போகலாமுன்னு யோசிக்கிறீங்களா...?

    வாங்க போகலாம்...

    தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியாச்சு.

    அரசின் மக்கள் நலதிட்டங்களை மக்கள் எளிதில் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் அரசின் பல்வேறு துறைசார்ந்த காட்சி அரங்கங்கள் கண்ணை கவரும் வகையிலும், சிந்தனையை தூண்டும் வகையிலும் இடம்பெற்றுள்ளன.

    இத்தனை துறைகள் இவ்வளவு நல்ல காரியங்களை மக்களுக்கு செய்கிறதா என்பதை தெரிந்துகொள்ளவும் முடிவும்.

    இந்த திட்டத்தில் நாமும் பயன்பெற முடியும் என்பது தெரிந்தால் அணுகி பயன்பெறவும் முடியும். இவ்வளவுதானா... இதில் எப்படி பொழுதுபோகும்? பொழுது போக்குன்னா பார்க்க... ரசிக்க... ருசிக்க... வாங்க... என்று எல்லாம் வேண்டாமா என்று யோசிப்பது புரிகிறது.

    சுற்றுலா பொருட்காட்சியாச்சே அதெல்லாம் இல்லாமல் இருக்குமா? 60 தனியார் அரங்குகள், 125 கடைகள் இடம் பெற்றுள்ளன.

    தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள சிறப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பல பகுதிகளிலும் கிடக்கும் பலவகையான பொருட்களை பார்க்கவும் முடியும், வாங்கவும் முடியும்.

    கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுவதைபோல் ஓடினாலும் நேரம் பத்தாது என்பதுதான் சென்னை நகர வாழ்க்கை. இதில் வெளியூர்களை எல்லாம் சென்று பார்க்க ஏது நேரம்? என்று மனதில் புழுங்கி கொண்டிருப்பவர்களுக்கு பார்த்து மகிழ நல்ல வாய்ப்பு.

    தமிழ்நாட்டின் சிறந்த கலாச்சாரம், கலை, கட்டிடக்கலை, பாரம்பரியம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பிற சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார்கள்.

    சுகாதாரத்துறை கொரோனாவை வென்றதை அதன் வடிவத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதன் கீழ் சித்த மருத்துவத்துறை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மூலிகைச்செடிகளை அதன் பெயர்களுடன் வைத்துள்ளார்கள். இதை வீடுகளிலும் வளர்த்து பயன்பெற முடியும் என்று விளக்கப்படுகிறது.

    சென்னையின் அடையாளத்தை மாற்றிய மெட்ரோ ரெயில் திட்ட காட்சிகளும் கவர்கிறது. இவைகளை கடந்து மறுபக்கம் சென்றால் சூடான பஜ்ஜி, விதவிதமான நொறுக்கு தீனிகளை வாங்கி ருசிக்கலாம். பாக்கெட்டில் பணம் இருந்தால் போதும்.

    அங்கிருந்து நகர்ந்தால் அந்தரத்தில் சாகசம் செய்வது போல் சுழலும் ராட்சத ராட்டினங்கள், சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள், சிறுவர் ரெயில், பனிக்கட்டி உலகம், மீன்காட்சியகம், பேய்வீடு என ஒவ்வொன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

    ஆடி, அமர அமர்ந்து பார்த்து ரசிக்க 3டி காட்சி தியேட்டர், ஓட்டல் என ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் ரசனைக்கும் தீனிபோடும் வகையில் இடம்பெற்றுள்ளது. பொழுது போகுமா என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தவர்கள். எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் ஒருநாள் வரவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வரவழைக்கும்.

    டிரைவ் இன் ஓட்டலுக்காக அங்கும் இங்கும் அலைய வேண்டாம். அதுவும் இங்கே உண்டு. காரிலேயே அமர்ந்து உண்டு மகிழலாம்.

    தமிழகத்தின் மிக முக்கியமான அடையாளங்களான மகாபலிபுரம் சிற்பம், வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை ஆகிய சிற்பங்கள் 3-ன் வழியாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    நிஜத்திலும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து தமிழ்நாட்டையே பார்த்து ரசித்து மகிழ்ந்த உணர்வோடு திரும்பலாம்.

    • பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
    • ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை

    சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக பொருட்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கியை செலுத்தாததால், அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து பன் வேர்ல்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், வருகிற 28-ந்தேதி முதல் பொருட்காட்சி தொடங்கவுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பொருட்காட்சியை திட்டமிட்டபடி வருகிற 28-ந்தேதி தொடங்க அனுமதியளித்தனர். மனுதாரர் நிறுவனத்துக்கு தனி நீதிபதி விதித்த அபராதத்துக்கு மட்டும் தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது.
    • சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் தொழில் பொருட்காட்சி நடைபெறும். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக பொருட்காட்சி நடைபெறவில்லை.

    2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் நடத்தப்பட்டது. 2 மாத காலம் நடைபெறும் இந்த பொருட்காட்சியை காண சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதனால் பல்வேறு சிறப்புகளுடன் பொருட்காட்சியை சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    புயல், மழையால் தீவுத்திடலில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி சற்று தாமதம் ஆன நிலையில் தற்போது வேகமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள் 40, 100-க்கும் மேலான ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.

    சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குதூகலப்படுத்தும் வகையில் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைகின்றன.

    பள்ளி குழந்தைகள் பயன்பெறக்கூடிய வகையில் அறிவியல் அரங்கம் நிறுவப்படுகிறது. இதுதவிர சுற்றுலா ரெயில், மாநில உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தீவுத்திடலில் இருந்து 'டிரைவ் இன்' ஓட்டல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. காரில் இருந்தபடியே குடும்பமாக உணவு மற்றும் பொழுதுபோக்கும் வகையில் பிரமாண்டமான திரை அமைக்கப்படுகிறது. அதிக அளவில் கார்களை நிறுத்தி இந்த ஓட்டலில் உணவு சாப்பிடக்கூடிய மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்படுகிறது.

    இந்த டிரைவ் இன் ஓட்டல் நிரந்தரமாக அங்கு எப்போதும் செயல்படும் வகையில் சுற்றுலாத்துறை சீரமைத்து வருகின்றன. அரசு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை இருந்த நுழைவு கட்டணத்தை விட 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படும்.

    பொருட்காட்சி நுழைவு வாயில் பாரம்பரிய சிறப்புடன் அமைகிறது. வருகிற 23 மற்றும் 28-ந்தேதிக்கு இடையே பொருட்காட்சியை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    ×